Friday 14 June 2013

பழந்தமிழரின் அளவை முறைகள்...!

பழந்தமிழரின் அளவை முறைகள்...!

முகத்தல் அளவைகள்

ஒரு ஆழாக்கு = நூற்றி அறுபத்தியெட்டு மில்லி லீட்டர்.
ஒரு உழக்கு = முன்னூற்று முப்பத்தி ஆறு மில்லி லீட்டர்.
ஒரு கலம் = அறுபத்து நாலரை லீட்டர்.
ஒரு தூணி = இருபத்தி ஒன்றரை லீட்டர்.
ஒரு நெய்க் கரண்டி = தேக்கரண்டி அளவு.
ஒரு எண்ணெய்க் கரண்டி = இரு நூற்றி நாற்பது மில்லி லீட்டர்.
ஒரு பாலாடை = முப்பது மில்லி லீட்டர்.
ஒரு குப்பி = எழுநூறுமில்லி லீட்டர்.
ஒரு அவுன்ஸ் = முப்பத்தியொரு கிராம்.

முன்னூற்று அறுபது நெல் = ஒரு சோடு.
ஐந்து சோடு = ஒரு அழாக்கு.
இரண்டு ஆழாக்கு = ஒரு உழக்கு.
இரண்டு உழக்கு = ஒரு உரி.
இரண்டு உரி = ஒரு நாழி.
எட்டு நாழி = ஒரு குறுணி.
இரண்டு குறுணி = ஒரு பதக்கு.
இரண்டு பதக்கு = ஒரு தூணி.
மூன்று தூணி = ஒரு கலம்.

நிறுத்தல் அளவைகள்

மூன்றே முக்கால் குன்றி மணி எடை = ஒரு பணவெடை.
முப்பத்தி ரெண்டு குன்றி மணி எடை = ஒரு விராகன் எடை.
பத்து விராகன் எடை = ஒரு பலம்.
இரண்டு குன்றி மணி எடை = ஒரு உளுந்து எடை.
ஒரு ரூபாய் எடை = ஒரு தோலா.
மூன்று தோலா = ஒரு பலம்.
எட்டு பலம் = ஒரு சேர்.
நாற்பது பலம் = ஒரு வீசை.
ஐம்பது பலம் = ஒரு தூக்கு.
இரண்டு தூக்கு = ஒரு துலாம்.

ஒரு குன்றி எடை = நூற்றி முப்பது மில்லி கிராம்.
ஒரு பணவெடை = நானூற்றி எண்பத்தெட்டு மில்லி கிராம்.
ஒருதோலா = அண்ணளவாக பன்னிரண்டு கிராம் (துல்லியமாக 11.7 கிராம்)
ஒரு பலம் = முப்பத்தி ஐந்து கிராம்.
ஒரு வீசை = ஆயிரத்தி நானூறு கிராம்.
ஒரு விராகன் = நான்கு கிராம்.


கால அளவுகள்

இருபத்தி நான்கு நிமிடங்கள் = ஒரு நாளிகை.
இரெண்டரை நாழிகை = ஒரு மணி.
மூன்றே முக்கால் நாழிகை = ஒரு முகூர்த்தம்.
அறுபது நாழிகை = ஒரு நாள்.
ஏழரை நாழிகை = ஒரு சாமம்.
ஒரு சாமம் = மூன்று மணி.
எட்டு சாமம் = ஒரு நாள்.
நான்கு சாமம் = ஒரு பொழுது.
ரெண்டு பொழுது = ஒரு நாள்.
பதினைந்து நாள் = ஒரு பக்கம்.
ரெண்டு பக்கம் = ஒரு மாதம்.
ஆறு மாதம் = ஒரு அயனம்.
ரெண்டு அயனம் = ஒரு ஆண்டு.
அறுபது ஆண்டு = ஒரு வட்டம்.

தமிழறிந்த அனைவருக்கும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள் இவை... எனவே இயன்றவரையில் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Tuesday 11 June 2013

ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்


"1984, சிங்கள இராணுவத்திற்கும், தமிழ்ப் போராளிகளுக்கும், இஸ்ரேலியர்கள் ஒரே நேரத்தில் இராணுவப் பயிற்சி வழங்கினார்கள். எதிரிகளான இரண்டு குழுக்களும் இஸ்ரேலில் ஒரே முகாமில் தங்க வைக்கப் பட்டு பயிற்சியளிக்கப்பட்டது. இலங்கையில் போர் தீவிரமடைந்தால், ஆயுதங்கள் விற்று பணம் சம்பாதிப்பதே இஸ்ரேலிய அரசின் நோக்கம்."(By Way of Deception: The Making of a Mossad officer) "இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். காலத்தில் இருந்தே இலங்கைப் பிரச்சினையில் தலையிட்டு வந்துள்ளது. அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி தொடக்கம், இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வரையில் யுத்தத்தை நடத்துவதற்கு மொசாட் வழிகாட்டி வந்துள்ளது. இலங்கையில் ஈழப்போரை முடிக்க விடாது தொடர்வதற்காக, மொசாட் இந்தியாவிலும் செல்வாக்கு மிக்க பெரும்புள்ளிகளை வளைத்துப் போட்டது. RAW விற்குள்ளும் மொசாட் ஆட்கள் இருந்தனர். இந்தியப் படைகளை அனுப்பி போரை முடிவுக்கு கொண்டு வந்ததாலும், இஸ்ரேலிய ஆயுதங்கள் பிடிபட்டதாலும், ராஜீவ் காந்தியை மொசாட் தீர்த்துக் கட்டியிருக்கலாம். பழியை புலிகள் மீது சுமத்துவதற்கு சுப்பிரமணிய சுவாமி போன்ற மொசாட் கையாட்கள் உதவினார்கள்." இதுவரை வெளிவராத பல அதிர்ச்சியளிக்கும் தகவல்களை முன்னாள் மொசாட் அதிகாரி Victor Ostrovsky தனது நூலில் வெளிக் கொணர்ந்துள்ளார். By Way Of Deception என்ற அந்த நூலில், ஈழப்போரில் மொசாட்டின் பங்களிப்பு பற்றி வந்த குறிப்புகளை சுருக்கமாக தொகுத்துத் தருகிறேன். இலங்கையில் மொசாட் இரண்டு தரப்பினருக்கும் பயிற்சியளித்து ஆயுதங்களை கொடுத்து வந்தது. கம்போடியாவிலும், தென் ஆப்பிரிக்காவிலும் உள்ள இஸ்ரேலியரின் நிறுவனங்கள் ஆயுதங்களை விநியோகம் செய்தன. இலங்கையை அதிக இலாபம் தரும் ஆயுத சந்தையாக மாற்றுவதே மொசாட்டின் நோக்கம். 1983 ல் தமிழர்கள், சிங்களவர்களிடம் இருந்து சுதந்திரம் கோரி போராடத் தொடங்கினார்கள். சிங்கள ஜனாதிபதி ஜெயவர்தனே 50 மொசாட் அதிகாரிகளை பயிற்சிக்காக அழைத்திருந்தார். அவர்கள் மாதுறு ஓயா என்னும் இடத்தில் சிறிலங்கா படையினருக்கு பயிற்சி அளித்தனர். அது ஒன்றும் இரகசியம் அல்ல. அன்று எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்த செய்தி தான். 1984 லிலும் 1985 லிலும் தமிழ்ப் போராளிகள் இஸ்ரேலுக்கு பயிற்சிக்காக கொண்டு செல்லப்பட்டனர். இந்த நூலின் ஆசிரியரான விக்டர் ஒஸ்ட்ரோவ்ஸ்கி அவர்களை பயிற்சி முகாம்களுக்கு கொண்டு சென்று, பயிற்சி முடிந்தவுடன் அனுப்பி விடும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். இந்தியாவில் பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருந்த மொசாட் ஆள் ஒருவர், பயிற்சிக்கு அனுப்பி வைக்கும் ஒழுங்குகளை மேற்கொண்டிருந்தார். இலங்கையில் யுத்தம் வெடித்தவுடனே RAW அதிகாரிகளை மொசாட் அணுகியது. 1984 ஜூலை மாதம் RAW வில் இருந்த சில அதிகாரிகள் தமிழர்களை கொமாண்டோ பயிற்சிக்காக அனுப்பும் பொறுப்பை ஏற்றனர். அவ்வாறு பயிற்சிக்கு அனுப்பப்பட்ட தமிழ்ப் போராளிகள் TELO அமைப்பை சேர்ந்தவர்கள். இந்தியாவுடன் நெருங்கிய உறவை பேணி வந்ததாலேயே அந்த இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. இந்த ஒழுங்குகளை மேற்கொண்ட RAW அதிகாரிகளுக்கு மொசாட் BCCI வங்கி இலக்கம் ஒன்றின் ஊடாக பணம் அனுப்பியது. அதே நேரம் தமிழர்களின் எதிரிகளான சிங்கள இராணுவத்திற்கும் இஸ்ரேலில் பயிற்சி வழங்கப்பட்டது. இஸ்ரேலியர்கள் இந்த தகவலை தமிழர்களுக்கோ, இந்திய அரசுக்கோ தெரிவிக்காது இரகசியமாக வைத்திருந்தனர். பயிற்சிக்கு வந்த இரண்டு குழுக்களும் ஒருவரை ஒருவர் சந்திக்க முடியாத படி பிரித்து வைக்கப்பட்டனர். டெல் அவிவ் நகரத்திற்கு அருகில் Kfar Sirkin எனும் தளத்திலேயே அந்த இரண்டு வார கொமாண்டோ பயிற்சிகள் வழங்கப்பட்டன. இரண்டு வார பயிற்சிக்கு பின்னர், ஹைபா நகருக்கு அருகில் உள்ள Atlit என்ற மிக இரகசியமான கடற்படை முகாமுக்கு தமிழர்களை கொண்டு சென்றனர். அங்கு வைத்து மேலதிக பயிற்சிகளை வழங்கி விட்டு திருப்பி அனுப்பினார்கள். அவர்களை அனுப்பி விட்டு அந்த இடத்திற்கு சிங்களப் படையினரை கொண்டு வந்தார்கள். தமிழ் போராளிகளிகளுக்கு சொல்லிக் கொடுத்த போர்த்தந்திரங்களை எவ்வாறு சமாளிப்பது என்று கற்றுக் கொடுத்தனர். இஸ்ரேலியர்கள் பயிற்சிக்காக சிங்களப் படையினரிடம் பெருமளவு பணத்தை அறவிட்டார்கள். ஒவ்வொரு சிங்களவரும் ஒரு நாள் பயிற்சிக்கு 300 டாலர் கட்ட வேண்டும். சிறிலங்கா இராணுவக் குழு ஒன்றுக்கான மூன்று மாத பயிற்சிக்கு ஒன்றரை மில்லியன் டாலர்கள் அறவிட்டார்கள். ஹெலிகாப்டர் பயிற்சிக்கு ஒரு மணித்தியாலம் 5000 டாலர்கள். கனரக ஆயுத பயிற்சிக்கு பாவிக்கப்பட்ட ஷெல்களுக்கும் இஸ்ரேலியர்கள் பணம் வசூலித்தார்கள். உதாரணத்திற்கு பசூக்கா (ரொக்கட் லோஞ்சர் போன்ற சுடுகருவி) பயிற்சிக்கு பாவிக்கப்பட்ட ஷெல் ஒன்று 220 டாலர். கனரக மோர்ட்டார் பயிற்சிக்கு பாவித்த ஷெல் ஒன்று 1000 டாலர். தமிழ் போராளிகள் மத்தியில் நிதிப்பற்றாக்குறை காணப்பட்டதால், இஸ்ரேலியர்கள் அவர்களிடம் பணம் கேட்கவில்லை. ஆனால் அதற்குப் பதிலாக தமிழர்களுக்கு பயிற்சி அளிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மிகப் பெரிய போருக்கு முதலீடு செய்வதாக கருதிக் கொண்டனர். யுத்தம் தீவிரமடைந்தால் ஆயுதங்களின் தேவை அதிகரிக்கும். அப்போது இலங்கை இராணுவத்திற்கு பல கோடி பெறுமதியான ஆயுதங்களை விற்று பெரும் இலாபம் சம்பாதிக்கலாம் என கணக்குப் போட்டார்கள். 1985 ல், இலங்கையில் உளவு நடவடிக்கைகளுக்கான இணைப்பு அதிகாரியாக Rafi Eytan அனுப்பி வைக்கப்பட்டார். இஸ்ரேலிய வேதியல் நிறுவனம் ஒன்றின் உத்தியோகத்தர் என்ற போர்வையில் அவர் இலங்கையில் உளவு பார்த்தார். 1987 ல், அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, ஜெயவர்த்தனவுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார். தமிழ்ப் பிரதேசங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளித்து, 3000 இந்தியப் படைகளை அனுப்பினார். யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட அல்லது கண்டெடுத்த ஆயுதங்களில் பல இஸ்ரேலிய தயாரிப்புகள். அதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்த இஸ்ரேலியர்களை வெளியேற்றுமாறு ராஜீவ் காந்தி வேண்டுகோள் விடுத்தார். இலங்கையில் சமாதானம் ஏற்பட்டால் தமது ஆயுத விற்பனையில் வீழ்ச்சி ஏற்படும் என்று மொசாட் அஞ்சியது. மொசாட்டிடம் இருந்து பணம் வருவது நின்று விடும் என்று சில RAW அதிகாரிகளும் பயந்தனர். அப்போதே ராஜீவ் காந்திக்கு எதிரான சதி ஆரம்பமாகி விட்டது. இஸ்ரேலின் ஆயுத விநியோகம் தடுக்கப்பட்டதால் 21 மே 1991 ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். படுகொலைக்கு ஐந்து வாரங்களுக்கு முன்னதாக, ராஜீவ் மீது இலக்கு வைக்கப் பட்டிருப்பதாக யாசீர் அரபாத் எச்சரிக்கை விடுத்திருந்தார். ராஜீவ் காந்தியை கொன்ற RDX வெடிகுண்டு இஸ்ரேலிய தயாரிப்பு என நம்பப்படுகின்றது. ராஜீவ் கொலை விசாரணை இரகசியமாக நடத்தப்பட்டது. நீதிமன்ற ஆவணங்கள் பகிரங்கப் படுத்தப் படவில்லை. "தற்கொலைக் குண்டுதாரி" என கருதப்படும் நபருக்கு என்ன நடந்தது என்பது ஒருவருக்கும் தெரியாது. சுப்பிரமணிய சுவாமி என்ற பிரமுகர் இஸ்ரேலின் சம்பளப் பட்டியலில் இருந்தார். அவர் விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியை படுகொலை செய்ததாக தொடர்ந்து எழுதி வந்தார். இஸ்ரேல் விடுதலைப் புலிகளுக்கு அல்ல, டெலோ அமைப்பை சேர்ந்தவர்களுக்கே இராணுவப் பயிற்சி வழங்கி வந்தமை மீண்டும் குறிப்பிடத் தக்கது. ராஜீவை தற்கொலைக் குண்டுதாரி கொல்லவில்லை. அவருக்கு வைக்கப்பட்ட குண்டு, TELO -RAW - Mossad கூட்டு நடவடிக்கையாக இருக்கலாம். அதன் பிறகு இலங்கையில் யுத்தமும், கொலைகளும் தொடர்ந்தன. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்ரேல் ஆயுதம் விற்று மில்லியன் டாலர்களை சம்பாதித்து விட்டது. 1988 ல், தென்னிலங்கையில் பிரேமதாசாவுக்கும், லலித் அத்துலத்முதலிக்கும் இடையில் ஜனாதிபதி பதவிக்கு போட்டி ஏற்பட்டது. லலித் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில், மொசாட்டின் சம்பளப் பட்டியலில் இருந்தவர் தான். ஆனால் தற்போது தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காக இஸ்ரேலுக்கு எதிராக திரும்பினார். பிரேமதாச காலத்தில் தான், மொசாட் விடுதலைப் புலிகளுக்கு பயிற்சியளித்தது. இலங்கையில் மொசாட் பயிற்சி முகாம்களை அமைக்க உதவியதாக, பிரேமதாசாவுக்கு எதிராக லலித் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதனால் அவரும் கொலை செய்யப்பட்டார். சந்திரசுவாமி என்ற பிரமுகர் RAW வுடனும், மொசாட்டுடனும் தொடர்பு வைத்திருந்ததை இந்திய நீதிபதி ஜெயின் கண்டறிந்தார். BCCI (Bank of Credit and Commerce International ) வங்கி மூலமே, சந்திரசுவாமிக்கும் மொசாட்டுக்குமான தொடர்பு ஏற்பட்டது. Agha Hasan Abedi என்ற பாகிஸ்தானிய பிரஜை BCCI வங்கியை நிறுவினார். அது இன்று 78 நாடுகளில், 400 கிளைகளுடன் இயங்கி வருகின்றது. அதன் சொத்து மதிப்பு 25 பில்லியன் டாலர்கள். லண்டனில் தலைமையகத்தை கொண்டிருந்தாலும், இலகுவாக கறுப்புப் பணத்தை மாற்றக் கூடிய லக்சம்பெர்க்கிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேலியர்களும் இரகசிய பணப் பரிமாற்றங்களை BCCI ஊடாகவே செலுத்துகின்றனர். லண்டனில் இருந்த BCCI கிளை (Sloane Street branch ) ஒன்றின் மூலம் பாலஸ்தீன தீவிரவாதி அபுநிதால் பணம் பெற்று வந்ததாக, பிரிட்டனின் MI5 க்கு தெரிய வந்தது. மொசாட் மட்டுமல்ல, பாகிஸ்தானின் ISI, இங்கிலாந்தின் MI6, அமெரிக்காவின் CIA, எல்லாமே BCCI வங்கியை பயன்படுத்தினார்கள்.

Thursday 9 December 2010

இராஜபக்சவுக்கு இலண்டன் மாநகரில் வரலாறு கொடுத்துள்ள முதல் அடி

அநீதி கண்டு கொதித்தெழுந்த பாரதி ‘நெஞ்சு பொறுக்குதில்லை…’ என்று கொதித்தெழுந்தான். தமிழ் மக்களின் இரத்தச் சுவடுகள் நிறைந்த தனது கால்களை ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகத்தில் ராஜபக்ச பதித்து ‘பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என போதனை செய்ய முற்பட்டபோது இலண்டன் மாநகரில் நெஞ்சு பொறுக்கா தமிழ் மக்கள் கொதிந்தெழுந்து அவரை அங்கு விரட்டினர்.


வரலாற்றில் மகிமைக்குரிய பணியை புலம் பெயர்ந்த தமிழர்கள் அங்கு ஆற்றினர். ஈழத் தமிழரின் எலும்புக் கூடுகளின் குவியலில் ஏறி சக்கராதிபத்தியத்தின் உச்சியைத் தொட்டு பாக்கியவனாய் கொழும்பில் காட்சியளிக்கும் ராஜபக்ச கொலைகாரன் என்ற பட்டத்தால் இலண்டனில் முள்முடி சூடப்பட்டார்.

‘இதயதாகம் உள்ளவர்களே என்னிடம் வாருங்கள்’ என்று கூறிய கிருஸ்துவுக்கு கொலைகாரர்கள் முள்முடி தரித்தார்கள். ஆனால் வரலாறு என்றும் மங்கா ஒளிவட்டத்தை அவருக்குச் சூடியது. தமிழரின் இரத்த தாகம் கொண்ட மகிந்தவுக்கு சிங்கள தேசம் பொன்முடி சூடினாலும் அவரது இரண்டாவது பதவியேற்பு முடிந்து ஒருமாதமாகும் முன்னம் உலகின் மாபெரும் நகரமான லண்டனில் அமைந்துள்ள உலகின் தலையாய பல்கலைகழகமான ஒக்ஸ்பேட்டில் வைத்து புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ராஜபக்சவுக்குரிய வரலாற்றுப் பரிசான முள்முடியைச் சூடியுள்ளனர்.

இதய தாகம் உள்ளவருக்கு வரலாறு 2000-ம் ஆண்டுகளுக்கும் மேலாய் அளித்துப் பேணும் பரிசு ஒளிவட்டம். ஆனால் இரத்த தாகம் உள்ளவருக்கு கொழும்பில் பொற்கிரீடம் சூட்டப்பட்டாலும் வரலாற்று தலைநகரான லண்டனில் அவருக்கு வரலாறு முள்முடி சூடி கொலைகாரன் என்ற பட்டத்தையும் அளித்துள்ளது.

இலண்டன் வாழ்தமிழ் மக்களின் மகிமைக்குரிய பணிக்காக வரலாறு அவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பால்மணம் மாறாப் பச்சிளம் பாலரில் இருந்து மூதாட்டிவரை ராஜபக்சாக்களால் கொன்று குவிக்கப்பட்டதைக் கண்டு நெஞ்சு பொறுத்த தமிழர் இருக்க முடியாது. கொத்துக் குண்டுகளாலும், கொலைக் கலன்களாலுந்தான் தமிழரின் இரத்தத்தை ஆறாக ஓடவைக்க ராஜபக்சாக்களால் முடிந்தது. ஆனால் அந்த ராஜபக்சவை நீதிகொண்ட குரலின் வலிமையால் இலண்டன் மாநகரில் ஒழித்து ஓடவைக்க புலம் பெயர் இலண்டன் வாழ் தமிழரால் முடிந்துள்ளதென்பது சத்தியத்தின் வலிமையை உலகுக்கு நிறுவுவதற்கான ஒரு கட்டியமாக உள்ளது.

நீதியின் குரலால் இலண்டனில் துரத்தப்பட்டவர் அநீதியின் கரங்களால் கொழும்பில் வரவேற்கப்பட்டார் என்ற வரலாற்றுப் பதிவு சிங்கள நாகரிகத்தை வரலாற்றில் கேள்விக்குறியாக்கி உள்ளது.

1971-ம் ஆண்டு ஒரு மன்னம்பரியை சிங்கள இராணுவம் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொடுமைப்படுத்தியதை மேடைக்கு மேடை நாடகமாய் அரங்கேற்றி ஸ்ரீமாவோ பண்டாரநாயாக்காவை வீழ்த்துவதற்கான அரசியலை ஜே.வி.பி. அரங்கேற்றியது. ஆனால் அந்த ஜே.வி.பி. இசைப்பிரியாக்களை சிங்கள இராணுவம் பாலியல் வல்லுறவுக்கும், வன்கொடுமைக்கும், படுகொலைக்கும் உள்ளாக்க விளக்குப் பிடித்துக் கொண்டிருந்தது. அதனைப் பறைசாற்றும் வகையில் ஜே.வி.பியின் பிரச்சாரப் போதகராய் இருந்தவரும் இப்போது பாதி ஜே.வி.பி.யின் தலைவராய் இருப்பவருமான விமல் வீரவன்ச விளக்குப் பிடித்த கரங்களால் ராஜபக்சவுக்கு மாலை சூடி கொழும்பில் வரவேற்பளித்து புகாழாரம் சூடியுள்ளார்.

நாடக வடிவில்தான் ஒரு மன்னம்பரி பற்றிய காட்சிகளை மேடைகளில் காட்ட முடிந்தது. ஆனால் இசைப்பிரியாக்கள் புத்தரின் புதல்வர்களது கரங்களில் பட்ட சிலுவைப்பாடுகளை ஒளிநாடாக்களில் இரத்தமும் தசையுமாய் உலகம் காண்கிறது. ஞானத் தந்தையும் ஞானத்தாயும் கிறிஸ்துவை எனக்குக் காட்டிய கண்களால் இசைப்பிரியாக்களை நான் காணும் போது எனக்குள் இருக்கும் தாய்மையின் கண்கள் இசைப்பிரியாக்களுக்கு கண்ணீர் மாலை சூடுகிறது. இசைப்பிரியாக்களின் காணொளிக் காட்சிகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காத் தமிழ்க் கண்கள் குமுறி எழுந்து இலண்டனில் இராஜபக்சாவின் போலி முகங்கள் மீது அக்கினிச் சுவாலையை வீசின.

இசைப்பிரியாக்களே உங்களின் துயரங்களை எங்கள் இதயங்களில் சுமக்கிறோம். காந்தி தனக்கு ஏற்பட்ட ‘சத்திய சோதனையை’ உலகுக்கு பரிசளித்துள்ளார். இசைப்பிரியாக்களே உங்களுக்கு ஏற்பட்ட சிலுவைப்பாடுகளை எங்கள் இதயங்கள் தாங்க முடியாமல் சுமக்கின்றது. உங்கள் பரிசை வரலாற்றின் பக்கங்களில் நாங்கள் ஆழப்பதிக்கின்றோம். உங்களின் அழுகுரல்களால் நிரம்பிய எங்கள் இதயங்கள் இலண்டன் மாநகரில் ராஜபக்சாக்களின் முகங்களில் கதிரலைகளை வீசியுள்ளன. ராஜபக்சாக்களே இது ஒரு தொடக்கம் மட்டுமே. உங்களை இந்தப் பிரபஞ்சத்தின் மூலை முடுக்குக்களில் எல்லாம் இசைப்பிரியாக்களின் குரல்கள் ஓட ஓடத் துரத்தி அடிக்கும்.

புத்தரின் புதல்வர்களது கல்நெஞ்சங்களைப் பச்சையாய்ச் சித்தரிக்கும் காணொளிக் காட்சிகள் எம்மை உறங்காத கண்ணுள்ளவர்களாயும், ஓயாத மனமுள்ளவர்களாயும் ஆக்கிவிட்டது. ‘நீதியின் பொருட்டு துயர் உறுவோர் பேறுபெற்றோர்’ என்ற கிருஸ்துவின் வார்த்தை சத்தியமாய் நிலைக்கும். கண்ணுள்ளவர்களே முதலில் அழக்கடவீர். அடுத்து உங்களின் துயரம் சத்தியமாய் எழட்டும்.

கிறிஸ்து தேவகுமாரனாக இருந்த போதிலும் கொலைஞர்களின் கரங்களே பட்ட சிலுவைப்பாட்டை தாங்க முடியாமல் ‘என் பிதாவே என் பிதாவே என்னை ஏன் கைவிட்டீர்! ‘ என்று தன் வேதனையை கொப்பளித்தார். புத்தரின் புதல்வர்களது கரங்களில் இசைப்பிரியாக்கள் வதைபட்ட போது அவர்கள் கதறிய வார்த்தைகள் எவைகள் என்பதை எங்கள் செவிகள் அறியா. ஆனால் அவர்கள் பட்ட துயரங்களை உணரும் ஆற்றல் எங்கள் இதயங்களுக்கு உண்டு .

இலண்டன் சம்பவம் ஒரு சிறிய விடயமல்ல. வரலாற்று அன்னையின் கருப்பை நெருப்பை சுமக்கின்றது என்ற செய்தியை பறைசாற்றிய சம்பவம் அது

தூக்கு கயிற்றில் தொங்க விடுவது மட்டும்தான் தண்டனை என்று ஆகிவிட மாட்டாது. வரலாற்று அன்னையின் ஆணை பெற்ற நீதி தேவதையின் காலடிக்குள் ராஜபக்சாக்கள் மிதிபடத் தொடங்கிவிட்டதை காட்டும் சம்பவம் அது. ராஜபக்சவுக்கு வரலாற்று அன்னை தண்டனையாக கொடுத்துள்ள முதலாவது அடியது .

தமிழன் இனி நெஞ்சு பொறுக்கான். உலக மாந்தர்கள் நீதி கேட்கும் நாள் வரும். ராஜபக்சக்களின் சிம்மாசனத்தை வரலாற்று அன்னை சுடுகாட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை இலண்டன் சம்பவம் உணர்த்த தலைப்பட்டு விட்டது.

நெருப்பை கருக்கொண்டு விட்ட வரலாற்று அன்னையே நாம் அனைவரும் உனக்கு மருத்துவிச்சிகள் என எழுவோம். உனது பாதங்களில் நான் என்னை மருதுவிச்சியாய் என்னை சத்திய பிரமாணம் செய்து கொள்கின்றேன். வரலாற்று அன்னையே வளர்க தாய்மை. உன் தலையை என் இரு கரம் கொண்டு வருடுகிறேன், உன் கூந்தலை என் பத்துவிரல்களாலும் கோதி விடுகிறேன் .

நெஞ்சு பொறுக்குதில்லை வரலாறு விதிக்கும் நியாயத் தீர்ப்பு காலத்துக்காய் காத்திருக்கிறோம்.

இமெல்டா போல் – பொங்குதமிழ்

இசைப்பிரியா படுகொலை தொடர்பாக புதிய தகவல்கள்! செட்டிகுளம் முகாமில் வைத்தே கைதானார்?


வன்னியில் பணிபுரிந்த பெண் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் கொடூரமான படுகொலை தொடர்பாக வெளிவந்திருக்கம் புதிய தகவல்கள் இது ஒரு அப்பட்டமான போர்க் குற்றம் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது என இது தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் ஐரோப்பிய ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.


27 வயதான ‘சோபா’ எனப்படும் இசைப்பிரியா விடுதலைப் புலிகள் அமைப்பிடம் ஆயுதப் பயிற்சிகள் எதனையும் பெற்றுக்கொள்ளாத ஒருவர் என்பதுடன், இருதய நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளியாக அவர் இருந்தமையால் ஊடகத் துறையிலேயே அவர் தொடர்ந்து பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

வன்னிப் பகுதிக்கு விஜயம் செய்த அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய மருத்துவக்குழுவினரிடம் இவர் தன்னுடைய இருதய நோய் தொடர்பிலான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டதை தன்னால் காணக்கூடியதாக இருந்தது என வன்னியில் பணியாற்றிய பணியாளர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

இசைப்பிரியாவின் ஒரேயொரு குழந்தையான அகல் பதுங்குகுழி ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கிபிர் தாக்குதலில் படுகாயமடைந்து 2009 மார்ச் மாதம் 15 ஆம் திகதி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்தது.

2009 மே மாதம் 8 ஆம் திகதி வரையில் முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையில் ஒரு தொண்டராக இசைப்பிரியா பணியாற்றியுள்ளார். போரின் முடிவில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த இவர், செட்டிகுளம் முகாமில் வலையம் 4 இல் தங்கியிருந்த நிலையில் 2009 மே 23 அல்லது 24 ஆம் திகதி சிறிலங்கா படையினரால் கொண்டு செல்லப்பட்டார்.

இசைப்பிரியாவுடன் மற்றொரு பெண்மணியும் படையினரால் முகாமில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக அதேமுகாமில் அப்போதிருந்த பணியாளர் ஒருவருடைய மனைவி தெரிவிக்கின்றார்.

படையினரால் கண்கள் கட்டப்பட்ட நிலையிலான இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்படும் காணொளி முதல் முறையாக 2009 ஆகஸ்ட் 25 ஆம் திகதியே வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிட்ட காணொளி பதிவு செய்யப்பட்ட திகதியாக 2009 ஜுலை 18 எனத் தெரிவிக்கப்படுகின்றது. அந்தக் காணொளியின் தற்போது வெளியாகியுள்ள அதிக நேரம் நீடிக்கும் காட்சியிலேயே இசைப்பிரியா கொல்லப்படும் காட்சி உள்ளடக்கப்பட்டுள்ளது.

இசைப்பிரியா போரின் போது கொல்லப்பட்டதாக படைத் தரப்பு முன்னர் தெரிவித்தது ஆனால், இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமிலிருந்து சிறிலங்கா படையினரால் கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே இவர் கொல்லப்பட்டடுள்ளார் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் இது ஒரு அப்பட்டமான மனிதாபிமானத்துக்கு முரணான போர்க் குற்றம் என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கின்றது என மனித உரிமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட சிறிலங்கா அரசின் போர் குற்றங்கள்





இன்றர்நெற் தகவல் இணையம் பிரபல்யம் அடைவதற்கு விக்கிலீக்ஸ் என்ற பெயரில் இயங்கும் இணையதளம் அண்மைக்காலமாக முக்கிய பங்களிப்புச் செய்கின்றது விக்கிலீக்ஸ் இணையதளத்தின் பணி எல்லோராலும் வரவேற்கப்படுகிறது என்று சொல்ல முடியாது.


விக்கிலீக்ஸ் இணையதளத்தை உருவாக்கிய 39 வயதினரான யூலியன் அசன்கே இன்று வேட்டையாடப் படும் மனிதராக மாறிவிட்டார் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க உலகின் பெரும்பாலான அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

சுவீடன் நாட்டு அரசு ஒரு படி மேலே போய் அவர் மீது பாலியல் குற்றச் சாட்டுக்களைச் சுமத்தியதோடு அவரைப் பிடித்துத் தரும்படி மேற்கு ஜரோப்பிய நாடுகளைக் கேட்டுள்ளது. சென்ற ஆகஸ்து மாதம் அவர் சுவீடன் நாட்டுப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சுவீடன் அரசு யூலியன் அசன்கேக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

யூலியன் அசன்கேயின் பிரபல்யத்திற்கு என்ன காரணம் என்று பத்திரிகையாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் ஆய்வு செய்கின்றனர் “ எம்மைப் பலம் அடையச் செய்யுங்கள்” (Keep us Strong) என்ற பெரிய எழுத்து மகுட வாசகத்துடன் திகழும் அவருடைய தளம் அரசுகளின் இரகசியங்களை அம்பலப் படுத்துவதில் முனைப்பாக ஈடுபடுகிறது.

விக்கிலீக்ஸ் இதுவரை அமெரிக்கா நடத்தும் ஈராக் போர் அப்காணிஸ்தான் போர் பற்றிய பல்லாயிரம் ஆவணங்களையும் கோப்புக்களையும் அம்பலப் படுத்தியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புச் செயலகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சிறிய துவாரம் பெரிய கப்பலைப் மூழ்கடித்துவிடும் என்று இராசதந்திர உலகில் சொல்வார்கள் இரகசியங்களைக் வெளியே செல்ல விடும் துவாரம் எங்கே இருக்கிறது என்று பென்ரகன் எனப்படும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலகம் தேடத் தொடங்கியுள்ளது.

இருட்டில் கறுத்தப் பூனையைத் தேடுவதற்கு இது சமமானது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள் தகவல் தொழில்நுட்பம் இரு பக்கமும் கூரான கத்தி போன்றது. ஆது எதிரியையும் வெட்டும் பாவிப்பவரையும் வெட்டும். நல்லதும் கெட்டதும் அதில் அடங்கும்.

அமெரிக்காவின் போர் நடவடிக்கைகள் பற்றிய இரகசியங்களை வெளியிட்டுப் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இப்போது புதியதொரு துறையில் தாக்குதல் தொடுத்துள்ளது.

தாய் நாட்டிலிருந்த வெளி நாடுகளுக்கு இராசதந்திரத் தூதர்களாகச் செல்லும் அதிகாரிகளின் முழுமுதற் பணி தகவல் சேகரிப்பாகும் இதற்காக இராசதந்திரத் தூதர்களுக்கு தகவல் சேகரிப்புப் பயிற்சி வளங்கப் படுகிறது. தகவல் என்ற சொல்லில் உளவுத் தகவல் என்ற செயற்பாடும் அடங்கும்.

உலக நாடுகள் அனைத்தும் தமது தூதர்கள் மூலம் பிற நாடுகளை வேவு பார்க்கின்றன என்று சொல்வதில் தவறில்லை இது ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை என்றும் சொல்லலாம் தகவல் சேகரிப்பதற்காகத் தூதர்கள் செய்யும் கூத்துக்களை இவ்விடத்தில் வெளியிட முடியும்.

தூதரகங்களில் நடக்கும் விருந்துகளும் மாலைப் பொழுது மது வழங்கல் நிகழ்ச்சிகளும் தகவல் சேகரிப்பு நோக்கில் நடத்தப் படுகின்றன தமிழ் எம். பீக்களும் வேறு பிரபலங்களும் குறிப்பாகச் சமூக ஆர்வலர்கள் என்று தம்மைப் பற்றிக் கூறிக் கொள்வோர்களும் தூதரகம் விடுக்கும் அழைப்பிற்காகத் தவம் கிடக்கிறார்கள்.

இலவச உணவு என்று ஒன்றுமே கிடையாது. இது பொருளாதார நிபுணர்கள் கூறும் முக்கிய வாசகம் உங்களை வருத்தி அழைப்பதோடு உயர்தர மதுவும் பல்சுவை உணவும் தருகிறார்கள் என்றால் அதற்கு அர்த்தம் இல்லாமல் விடுமா?

எமது விடுதலைப் போர் காலத்தில் கொழும்பில் நிலை கொண்டிருந்து தகவல் சேகரிப்பில் ஈடுபட்ட அனைத்துத் தூதரகங்களும் தமிழர்களையும் சிங்களவர்களையும் மாறி மாறி அழைத்ததோடு தின்னவும் குடிக்கவும் கொடுத்து இரகசியங்களை கநற்து கொன்டன. இது நன்கு தெரிந்த விடயம்.

அது மாத்திரமா? சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரக அதிகாரியான தமிழ் சிங்கள மொழி தெரிந்த ஹம்சா என்ற அதிகாரி சென்னை வாழ் பத்திரிகையாளர்களை தூதரக விருந்துக்கு அழைத்துப் புலிகளுக்கு எதிரான நச்சுப் பிரசாரங்களை முன்னெடுத்தார்.

அவருடைய பணியை மெச்சிய சிறிலங்கா அரசு அவருக்குப் பதவி உயர்வு கொடுத்து இலன்டன் தூதரகத்தில் பணிக்கமர்த்தியுள்ளது ஏறாவூரைச் சேர்ந்த இந்த முஸ்லிம் சகோதரர் இலன்டனில் தனது எட்டப்பன் வேலையைத் தொடர்ந்து செய்வதாக அறிகிறோம்.

இவ்வளவு விரிவாக தகவல் சேகரிப்புப் பற்றிக் கூற வேண்டிய அவசியம் இருக்கிறது. விக்கிலீக்ஸ் இப்போது ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து இறுதியில் மனிதரைக் கடிக்கும் விலங்கினம் போல் இராசதந்திர உலகின் மேலும் கை வைக்கத் தொடங்கியுள்ளது.

நவம்பர் 28.2010ம் நாள் உலகளாவிய அமெரிக்கத் தூதரகங்கள் வாஷிங்ரன் இராஜங்கச் செயலகத்திற்கு அனுப்பிய 250,000 இரகசிய இராசதந்திர ஆவணங்களைக் அது அம்பலப் படுத்தியுள்ளது உலகின் முக்கிய செய்தி என்று இதை செய்தி நிறுவனங்கள் கருத்து வெளியிட்டுள்ளது.

இராசதந்திரத்தின் அடிப்படை இரகசியம் காத்தல் தான் சேகரிப்பு எவ்வளவு முக்கியமோ அதிலும் கூடிய முக்கியத்துவம் இரகசியத்தைப் பாதுகாப்பாக வைத்திருத்தலாகும் விக்கிலீக்ஸ் செய்த வேலை இராசதந்திர உலகை ஆட்டங் காணச் செய்துள்ளது.

பல நாடுகளுக் கிடையிலான இராசதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது நட்புறவைப் பேணிய படி அதற்கு எதிரான இரகசியக் கண்டன்தை தாய் நாட்டிற்கு அனுப்புவது வழமையான படியால் பரஸ்பர வெறுப்பும் கோபதாபவும் ஏற்படுவதைத் தடுக்க முடியாது.

பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. பாக்கிஸ்தான் தலைவர்கள் பற்றிய தூற்றல்கள் அந்த நாட்டில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது போர்க் காலத்தில் அமெரிக்கத் தூதரகம் கொழும்பில் இருந்து அனுப்பிய தகவல்கள் சிறிலங்கா அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களுக்குப் பேரிடியாக விழ்ந்துள்ளது.

அமெரிக்கத் தூதர் பற்றீசியா பூட்டெனிஸ் வாஷிங்ரனுக்கு அனுப்பிய ஆவணங்கள் சிறிலங்காவைப் போர் குற்ற விசாரணை செய்வதற்கும் தண்டனை வழங்குவதற்கும் போது மானவையாக இருக்கின்றன. எந்தக் குற்றச் சாட்டையும் சகட்டுமேனிக்கு மறுக்கும் சிறிலங்கா அரசு மவுனம் காத்து வருகிறது.

பொதுமக்களைக் குறிவைத்து இராணுவம் நடத்திய கொலை வெறித் தாக்குதல்கள் பற்றிப் பற்றீசியா பூட்டெனிஸ் தனது ஆவணங்களில் ஆதார பூர்வமாகக் குறிப்பிட்டிருக்கிறார். பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி அதற்குள் வந்து பாதுகாப்பாகத் தங்கும்படி அழைப்புத் அiழைப்பு விடுத்த அரசு அதே மக்களைக் கொன்று குவித்தது மிகப் பெரிய போர் குற்றம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அரசு தனது இராணுவத்தைத் தண்டிக்கப் போவதில்லை என்றும் அவர் பதிவு செய்கிறார்.

விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளி வந்த இரகசிய ஆவணங்களில் சிறிலங்கா பற்றிய இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன அவற்றைப் பொறுமையாகப் பகுப்பாய்வு செய்து வரிசைப் படுத்தும் பணி மிகவும் கடினம் என்றாலும் நாம் அந்தப் பணியைச் செய்தே ஆகவேண்டும் போர் குற்ற விசாரணைகளும் தண்டனைக்குமான எமது பங்களிப்பாக அது அமையும்.

Thursday 2 December 2010

MONDAY, NOVEMBER 29, 2010 விக்கிலீக்ஸ் வெளியிடும் தகவல்களில் இலங்கை தொடர்பான் 3000 இரகசிய ஆவணங்கள்

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மீது அமெரிக்கா நடத்திய போர் தாக்குதலில் வெளிவராத விசயங்களை ஒவ்வொன்றாக விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் வெளியிட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா தனது நட்பு நாடுகளான இங்கிலாந்து, கனடா, சவுதி அரேபியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளை பற்றி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் பிற விசயங்கள் குறித்து விக்கிலீக்ஸ் 30 லட்சம் ஆவணங்களை தன் வசம் வைத்திருப்பதாக கூறியது. அதனை வெளியிட இருப்பதாகவும் அது கூறி வந்தது. இந்த நிலையில் இன்று 2 லட்சத்து 50 ஆயிரம் ஆவணங்கள் அடங்கிய தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இதுபற்றிய முக்கிய தகவல்கள் வருமாறு:-

அமெரிக்க அதிகாரிகள், ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் பாங்கி-மூன் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நிரந்தர உறுப்பினர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பற்றி ரகசியமாக சில விசயங்கள் சேகரிப்பு.

அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் தவறான அணுகுமுறை, ஆப்கான் நாட்டில் இங்கிலாந்து இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் டேவிட் கேமரூன் பற்றி அவரது விமர்சனம் தகவலில் இடம்பெற்றுள்ளது. மேலும் அமெரிக்க அதிகாரிகள், ஈரானிய அதிபர் அகமதினிஜாத்தை அடால்ப் ஹிட்லர் என சித்தரித்துள்ளனர். பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் மற்றும் ஜெர்மன் நாட்டு வேந்தர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோரையும் அமெரிக்க அதிகாரிகள் கேலி செய்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.

இதே போல் மிக முக்கியமான தகவலாக சவுதி அரேபிய அரசர் அப்துல்லா தொடர்ந்து அமெரிக்காவை ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்துமாறு கூறி வந்ததாகவும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்துல்லா, அமெரிக்காவிடம் அந்த பாம்பின் தலையை அறுத்தெறியுங்கள் என 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாட்டின் தலைவர்கள், ஈரான் நாட்டினை தாக்கி பேசியுள்ளனர். மேலும் அந்த நாட்டின் மீது தாங்கள் போர் தொடுக்க தயாராக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் மசூத் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு கடந்த வருடம் சென்றார். அப்பொழுது அவர் தன்னுடன் 52 மில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை எடுத்து சென்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே காபூலில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் தலையிட்டு அது பற்றி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமலிருக்க உதவி செய்தது. (எனினும் மசூத் ஆப்கான் நாட்டை விட்டு வெளியே செல்லும் போது தான் எந்த பணத்தையும் எடுத்து செல்லவில்லை என மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

கடந்த 2007-ஆம் ஆண்டில் இருந்து, பாகிஸ்தான் தனது நாட்டில் யூரேனியம் செறிவூட்டப்பட்ட அணு உலைகளை அமைப்பதை தடுக்க அமெரிக்க அரசு பல முயற்சிகள் எடுத்து வந்துள்ளது. எனினும் அது வெற்றி தரவில்லை. குறிப்பாக கடந்த 2009ல் மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன் தங்களது தொழில்நுட்ப வல்லுநர்களை அந்நாட்டிற்கு அனுப்ப முடிவு செய்தது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் அரசு ஒத்துழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது நாட்டிற்கு அனுப்பிய செய்திகள் மற்றும் அது பற்றிய விவரங்கள் என 5 ஆயிரம் தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. மேலும் காத்மண்டு பற்றிய 2 ஆயிரம் தகவல்களும், கொழும்பு பற்றிய 3 ஆயிரம் தகவல்கள், இஸ்லாமாபாத் பற்றிய 2 ஆயிரம் தகவல்கள் என பட்டியல் செல்கிறது.

அமெரிக்க அரசாங்கம் இரகசியமாக சில உளவு பிரிவு அதிகாரிகள் உதவியுடன் சீனா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் நிரந்தர பாதுகாப்பு கவுன்சில் பிரதிநிதிகளை குறிவைத்து பல வேலைகளை செய்ததாக ஆவணங்கள் தெரிவிக்கிறது. இந்த நாடுகளில் குறிப்பாக கியூபா, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, சூடான், உகாண்டா, செனெகல் மற்றும் சிரியா ஆகியவை அடங்கும். மேலும் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஹிலாரி ஐ.நா. பொது செயலாளர் தொடர்பாக சில தகவல்களை சேகரித்ததாகவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2002ல் இருந்து சீன நாட்டின் அரசு துறை அதிகாரிகள் மற்றும் அரசால் நியமிக்கப்பட்ட தனியார் பாதுகாப்பு வல்லுநர்கள், இணையதள கிரிமினல்கள் ஆகியோர் இணைந்து அமெரிக்க அரசின் கணினிகள், கூகுள் இணையதளம் மற்றும் தலாய் லாமாவின் கணினிகள் ஆகியவற்றை முடக்கும் பணியினை செய்தனர்.

துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரத்தில் நடைபெற்ற தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை. இது பற்றி துருக்கி நாட்டின் அப்போது இரு தரப்பு நாடுகளின் அரசியல் விவகார துறை துணை செயலாளராக இருந்த சாய்சல் கூறும் போது, பாகிஸ்தான் நாடுடன் இந்தியாவுக்கு உள்ள பிரச்சனையை முன்னிட்டு அப்போது இந்தியா கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படவில்லை என கூறினார். தீவிரவாதம் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த மாநாட்டில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈரான் அரசு, மேற்கு ஐரோப்பாவை தாக்குவதற்காக, வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளது.

பட்டப் பெயர்கள்...

அமெரிக்கா சர்வதேச தலைவர்களை கேலி செய்யும் வகையில் அவர்களுக்கு பட்டபெயர் சூட்டி உள்ளது

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு (ஆடைகள் இல்லாத பேரரசர்)
இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு (செயல்திறனற்ற தலைவர்)
ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வேதேவுக்கு (புடினின் கையாள்)
புடினுக்கு (ஆல்பா டாக் )
ஈரான் அதிபர் மஹமூத் அகமதி நிஜாதுத்( ஹிட்லர்).
வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் (மனவலிமையற்ற வயதானவர்)

இங்கிலாந்து பற்றி ,,,,

முன்னாள் இங்கிலாந்து தொழிலாளர் துறை மந்திரியை பெண்கள் பின்னால் சுற்றும் வேட்டை நாய் என்றும் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் நாடு கடந்த தவறான நடவடிக்கைகள் ஐ.நா. அதிகாரிகளின் கிரெடிட் கார்டு விவரங்கள், கைரேகை பதிவுகள் மற்றும் டி.என்.ஏ. பற்றிய விளக்கங்கள் ஆகியவை ஹிலாரியின் உத்தரவின் பேரில் சேகரிக்கப்பட்டுள்ளது.



Written By ilankainet at Monday, November 29, 2010

ம‌லிவான வாழை‌‌யி‌ன் மக‌த்துவ‌ம்

பழ‌ங்க‌ளி‌ல் ம‌லிவான பழ‌ம் எ‌ன்றா‌ல் வாழை‌ப் பழ‌த்தை‌க் கூறலா‌ம். ‌சீச‌ன் நேர‌த்‌தி‌ல் ‌சில பழ‌ங்க‌ள் வாழை‌ப் பழ‌த்தை ‌விட ‌விலை குறைவது உ‌ண்டு. ஆனா‌ல் எ‌ப்போதுமே ‌கிடை‌க்க‌க் கூடிய, ஏழைக‌ள் வா‌ங்‌கி சா‌ப்‌பிட‌க் கூடிய ‌விலை‌யி‌ல் ‌இரு‌க்கு‌ம் வாழை‌ப் பழ‌த்‌தி‌ல் அட‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம் மக‌த்துவமோ ஏராளமானது.

வாழைப் பழத்தில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு பலன் இருக்கிறது. ‌‌கிடை‌ப்பத‌ற்கு அ‌ரிய பழ‌ங்க‌‌ளி‌ல் இரு‌க்கு‌ம் ச‌த்து கூட வாழை‌ப்பழ‌த்‌தி‌ல் உ‌ள்ளது. ஆனா‌ல் அதனை பலரு‌ம் அ‌றி‌ந்‌திராம‌ல் உ‌ள்ளன‌ர். வ‌யி‌ற்று வ‌லி‌க்‌கிறதா, மல‌ச்‌சி‌க்கலா உடனே வாழை‌ப் பழ‌த்தை வா‌ங்‌கி சா‌ப்‌பிடு‌‌கிறோ‌ம்.


WD
உ‌‌ண்மை‌யி‌ல் வாழை‌ப்பழ‌ம் ஏராளமான மரு‌த்துவ‌ குண‌ங்களை‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது. அதனை அ‌றி‌ந்தா‌ல், நா‌ம் ‌தினமு‌ம் வாழை‌ப்பழ‌த்தை சா‌ப்‌பிடுவதை வழ‌க்கமா‌க்‌கி‌க் கொ‌ள்ளுவோ‌ம். ‌நீ‌ரி‌‌ழிவு நோயா‌ளிக‌ள் ம‌ட்டுமே வாழை‌ப் பழ‌த்தை சா‌ப்‌பிட‌க் கூடாது. அவ‌ர்களு‌ம் உணவு‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டுட‌ன் இரு‌ந்து, ‌மிகவு‌‌ம் க‌னியாத வாழை‌ப் பழ‌த்தை கா‌‌ல் ப‌ங்கு சா‌ப்‌பிடலா‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.

நம‌க்கு எ‌ப்போதுமே, எ‌ளிதாக‌க் ‌கிடை‌ப்பது பூவன் வாழைப்பழ‌ம். இதனை சாப்பிட்டால் மல‌‌ச்‌சி‌க்க‌ல் குறையு‌ம். வ‌யிறு சு‌த்தமாகு‌ம். மலச்சிக்கலால் உண்டான மூலநோய் குறையும்.

ரஸ்தாளி சாப்பிட்டால் பித்த நோய்கள் கட்டுப்படும். பேயன் பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புண்ணை ஆற்றும். நேந்திரன் பழம் ரத்த சோகையை குணமாக்கும். மொந்தன் பழம் சாப்பிட்டால் குளிர்ச்சி கிடைக்கும். மலைவாழையை சாப்பிட்டால் உடல் சூட்டை தணித்து பித்தத்தைப் போக்கும்.

செவ்வாழை சாப்பிடுவது ஆண்களுக்கு நல்லது. ஆண்மை பெருகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மல‌ட்டு‌த் த‌ன்மையை‌ப் போ‌க்கு‌ம் ச‌க்‌தி செ‌வ்வாழை‌க்கு உ‌ள்ளது. குழ‌ந்தை இ‌ல்லாத த‌ம்ப‌திக‌ள் செ‌வ்வாழையை சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

கருந்துளுவன் வாழைப்பழத்தில் அதிகளவு அமிலச்சத்து உள்ளது. உடலுக்கு வலு சேர்க்கும். மட்டி ரக வாழைப்பழத்தில் குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. மூளையின் நரம்பு வேதியல் கடத்தியான `செரடோனின்' என்னும் ரசாயனப் பொருள், வாழைப்படும் சாப்பிடுவதால் சுரக்கிறது. இதனால் தூக்கம் நன்றாக வரும்.

இர‌வி‌ல் அமை‌தியான தூ‌க்க‌ம் வருவத‌ற்கு இர‌வி‌ல் உணவு சா‌ப்‌பி‌ட்ட ‌பிறகு ஒரு வாழை‌ப் பாமு‌ம், ஒரு ட‌ம்ள‌ர் பாலு‌ம் அரு‌ந்‌தினா‌ல் உடலு‌க்கு‌ம் ந‌ல்லது. உற‌க்‌க‌த்‌தி‌ற்கு‌ம் ந‌ல்லது.

உடலை‌த் தேவையான எடை‌யி‌ல் வை‌த்து‌க் கொ‌ள்ள வாழை‌ப்பழ‌ம் உதவு‌கிறது. அதாவது, உட‌ல் மெ‌லி‌‌ந்தவ‌ர்க‌ள் ‌தினமு‌ம் இர‌ண்டு வாழை‌ப்பழ‌ம் என தொட‌ர்‌ந்து சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் ‌நி‌ச்சய‌ம் உட‌ல் பெரு‌க்கு‌ம்.

அதே சமய‌ம், ‌பிற உணவுகளை நீக்கிவிட்டு தினமும் ஆறு வாழைப்பழமும், ஆறு டம்ளர் கொழுப்பு நீக்கிய பால் அல்லது மோர் தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைத்து விடலாம். பத்து நாட்களுக்குப் பின்னர், படிப்படியாக பாலின் அளவை குறைத்துக் கொண்டு, பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழத்தில் உடலின் எடையை அதிகரிக்கும் சோடியம் அதிகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழை மரம், வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.

வாழையில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தைத்தான் பலரும் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது. மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும். உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிக பசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும். மொந்தன் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.

வாழைக்காயை சமைப்பதற்காக மேல் தோலை அழுத்தி சீவாமல், மெலியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. கேரளாவில் சீவி எடுத்த தோலையும் நறுக்கி, வதக்கி, புளி மற்றும் மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். இதுவும் உடலுக்கு நல்லது.