Thursday 9 December 2010

இராஜபக்சவுக்கு இலண்டன் மாநகரில் வரலாறு கொடுத்துள்ள முதல் அடி

அநீதி கண்டு கொதித்தெழுந்த பாரதி ‘நெஞ்சு பொறுக்குதில்லை…’ என்று கொதித்தெழுந்தான். தமிழ் மக்களின் இரத்தச் சுவடுகள் நிறைந்த தனது கால்களை ஒக்ஸ்பேட் பல்கலைக்கழகத்தில் ராஜபக்ச பதித்து ‘பேய்கள் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்’ என போதனை செய்ய முற்பட்டபோது இலண்டன் மாநகரில் நெஞ்சு பொறுக்கா தமிழ் மக்கள் கொதிந்தெழுந்து அவரை அங்கு விரட்டினர்.


வரலாற்றில் மகிமைக்குரிய பணியை புலம் பெயர்ந்த தமிழர்கள் அங்கு ஆற்றினர். ஈழத் தமிழரின் எலும்புக் கூடுகளின் குவியலில் ஏறி சக்கராதிபத்தியத்தின் உச்சியைத் தொட்டு பாக்கியவனாய் கொழும்பில் காட்சியளிக்கும் ராஜபக்ச கொலைகாரன் என்ற பட்டத்தால் இலண்டனில் முள்முடி சூடப்பட்டார்.

‘இதயதாகம் உள்ளவர்களே என்னிடம் வாருங்கள்’ என்று கூறிய கிருஸ்துவுக்கு கொலைகாரர்கள் முள்முடி தரித்தார்கள். ஆனால் வரலாறு என்றும் மங்கா ஒளிவட்டத்தை அவருக்குச் சூடியது. தமிழரின் இரத்த தாகம் கொண்ட மகிந்தவுக்கு சிங்கள தேசம் பொன்முடி சூடினாலும் அவரது இரண்டாவது பதவியேற்பு முடிந்து ஒருமாதமாகும் முன்னம் உலகின் மாபெரும் நகரமான லண்டனில் அமைந்துள்ள உலகின் தலையாய பல்கலைகழகமான ஒக்ஸ்பேட்டில் வைத்து புலம்பெயர் ஈழத்தமிழர்கள் ராஜபக்சவுக்குரிய வரலாற்றுப் பரிசான முள்முடியைச் சூடியுள்ளனர்.

இதய தாகம் உள்ளவருக்கு வரலாறு 2000-ம் ஆண்டுகளுக்கும் மேலாய் அளித்துப் பேணும் பரிசு ஒளிவட்டம். ஆனால் இரத்த தாகம் உள்ளவருக்கு கொழும்பில் பொற்கிரீடம் சூட்டப்பட்டாலும் வரலாற்று தலைநகரான லண்டனில் அவருக்கு வரலாறு முள்முடி சூடி கொலைகாரன் என்ற பட்டத்தையும் அளித்துள்ளது.

இலண்டன் வாழ்தமிழ் மக்களின் மகிமைக்குரிய பணிக்காக வரலாறு அவர்களுக்கு பாராட்டுப் பத்திரம் வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை. பால்மணம் மாறாப் பச்சிளம் பாலரில் இருந்து மூதாட்டிவரை ராஜபக்சாக்களால் கொன்று குவிக்கப்பட்டதைக் கண்டு நெஞ்சு பொறுத்த தமிழர் இருக்க முடியாது. கொத்துக் குண்டுகளாலும், கொலைக் கலன்களாலுந்தான் தமிழரின் இரத்தத்தை ஆறாக ஓடவைக்க ராஜபக்சாக்களால் முடிந்தது. ஆனால் அந்த ராஜபக்சவை நீதிகொண்ட குரலின் வலிமையால் இலண்டன் மாநகரில் ஒழித்து ஓடவைக்க புலம் பெயர் இலண்டன் வாழ் தமிழரால் முடிந்துள்ளதென்பது சத்தியத்தின் வலிமையை உலகுக்கு நிறுவுவதற்கான ஒரு கட்டியமாக உள்ளது.

நீதியின் குரலால் இலண்டனில் துரத்தப்பட்டவர் அநீதியின் கரங்களால் கொழும்பில் வரவேற்கப்பட்டார் என்ற வரலாற்றுப் பதிவு சிங்கள நாகரிகத்தை வரலாற்றில் கேள்விக்குறியாக்கி உள்ளது.

1971-ம் ஆண்டு ஒரு மன்னம்பரியை சிங்கள இராணுவம் வல்லுறவுக்கு உள்ளாக்கி கொடுமைப்படுத்தியதை மேடைக்கு மேடை நாடகமாய் அரங்கேற்றி ஸ்ரீமாவோ பண்டாரநாயாக்காவை வீழ்த்துவதற்கான அரசியலை ஜே.வி.பி. அரங்கேற்றியது. ஆனால் அந்த ஜே.வி.பி. இசைப்பிரியாக்களை சிங்கள இராணுவம் பாலியல் வல்லுறவுக்கும், வன்கொடுமைக்கும், படுகொலைக்கும் உள்ளாக்க விளக்குப் பிடித்துக் கொண்டிருந்தது. அதனைப் பறைசாற்றும் வகையில் ஜே.வி.பியின் பிரச்சாரப் போதகராய் இருந்தவரும் இப்போது பாதி ஜே.வி.பி.யின் தலைவராய் இருப்பவருமான விமல் வீரவன்ச விளக்குப் பிடித்த கரங்களால் ராஜபக்சவுக்கு மாலை சூடி கொழும்பில் வரவேற்பளித்து புகாழாரம் சூடியுள்ளார்.

நாடக வடிவில்தான் ஒரு மன்னம்பரி பற்றிய காட்சிகளை மேடைகளில் காட்ட முடிந்தது. ஆனால் இசைப்பிரியாக்கள் புத்தரின் புதல்வர்களது கரங்களில் பட்ட சிலுவைப்பாடுகளை ஒளிநாடாக்களில் இரத்தமும் தசையுமாய் உலகம் காண்கிறது. ஞானத் தந்தையும் ஞானத்தாயும் கிறிஸ்துவை எனக்குக் காட்டிய கண்களால் இசைப்பிரியாக்களை நான் காணும் போது எனக்குள் இருக்கும் தாய்மையின் கண்கள் இசைப்பிரியாக்களுக்கு கண்ணீர் மாலை சூடுகிறது. இசைப்பிரியாக்களின் காணொளிக் காட்சிகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காத் தமிழ்க் கண்கள் குமுறி எழுந்து இலண்டனில் இராஜபக்சாவின் போலி முகங்கள் மீது அக்கினிச் சுவாலையை வீசின.

இசைப்பிரியாக்களே உங்களின் துயரங்களை எங்கள் இதயங்களில் சுமக்கிறோம். காந்தி தனக்கு ஏற்பட்ட ‘சத்திய சோதனையை’ உலகுக்கு பரிசளித்துள்ளார். இசைப்பிரியாக்களே உங்களுக்கு ஏற்பட்ட சிலுவைப்பாடுகளை எங்கள் இதயங்கள் தாங்க முடியாமல் சுமக்கின்றது. உங்கள் பரிசை வரலாற்றின் பக்கங்களில் நாங்கள் ஆழப்பதிக்கின்றோம். உங்களின் அழுகுரல்களால் நிரம்பிய எங்கள் இதயங்கள் இலண்டன் மாநகரில் ராஜபக்சாக்களின் முகங்களில் கதிரலைகளை வீசியுள்ளன. ராஜபக்சாக்களே இது ஒரு தொடக்கம் மட்டுமே. உங்களை இந்தப் பிரபஞ்சத்தின் மூலை முடுக்குக்களில் எல்லாம் இசைப்பிரியாக்களின் குரல்கள் ஓட ஓடத் துரத்தி அடிக்கும்.

புத்தரின் புதல்வர்களது கல்நெஞ்சங்களைப் பச்சையாய்ச் சித்தரிக்கும் காணொளிக் காட்சிகள் எம்மை உறங்காத கண்ணுள்ளவர்களாயும், ஓயாத மனமுள்ளவர்களாயும் ஆக்கிவிட்டது. ‘நீதியின் பொருட்டு துயர் உறுவோர் பேறுபெற்றோர்’ என்ற கிருஸ்துவின் வார்த்தை சத்தியமாய் நிலைக்கும். கண்ணுள்ளவர்களே முதலில் அழக்கடவீர். அடுத்து உங்களின் துயரம் சத்தியமாய் எழட்டும்.

கிறிஸ்து தேவகுமாரனாக இருந்த போதிலும் கொலைஞர்களின் கரங்களே பட்ட சிலுவைப்பாட்டை தாங்க முடியாமல் ‘என் பிதாவே என் பிதாவே என்னை ஏன் கைவிட்டீர்! ‘ என்று தன் வேதனையை கொப்பளித்தார். புத்தரின் புதல்வர்களது கரங்களில் இசைப்பிரியாக்கள் வதைபட்ட போது அவர்கள் கதறிய வார்த்தைகள் எவைகள் என்பதை எங்கள் செவிகள் அறியா. ஆனால் அவர்கள் பட்ட துயரங்களை உணரும் ஆற்றல் எங்கள் இதயங்களுக்கு உண்டு .

இலண்டன் சம்பவம் ஒரு சிறிய விடயமல்ல. வரலாற்று அன்னையின் கருப்பை நெருப்பை சுமக்கின்றது என்ற செய்தியை பறைசாற்றிய சம்பவம் அது

தூக்கு கயிற்றில் தொங்க விடுவது மட்டும்தான் தண்டனை என்று ஆகிவிட மாட்டாது. வரலாற்று அன்னையின் ஆணை பெற்ற நீதி தேவதையின் காலடிக்குள் ராஜபக்சாக்கள் மிதிபடத் தொடங்கிவிட்டதை காட்டும் சம்பவம் அது. ராஜபக்சவுக்கு வரலாற்று அன்னை தண்டனையாக கொடுத்துள்ள முதலாவது அடியது .

தமிழன் இனி நெஞ்சு பொறுக்கான். உலக மாந்தர்கள் நீதி கேட்கும் நாள் வரும். ராஜபக்சக்களின் சிம்மாசனத்தை வரலாற்று அன்னை சுடுகாட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை இலண்டன் சம்பவம் உணர்த்த தலைப்பட்டு விட்டது.

நெருப்பை கருக்கொண்டு விட்ட வரலாற்று அன்னையே நாம் அனைவரும் உனக்கு மருத்துவிச்சிகள் என எழுவோம். உனது பாதங்களில் நான் என்னை மருதுவிச்சியாய் என்னை சத்திய பிரமாணம் செய்து கொள்கின்றேன். வரலாற்று அன்னையே வளர்க தாய்மை. உன் தலையை என் இரு கரம் கொண்டு வருடுகிறேன், உன் கூந்தலை என் பத்துவிரல்களாலும் கோதி விடுகிறேன் .

நெஞ்சு பொறுக்குதில்லை வரலாறு விதிக்கும் நியாயத் தீர்ப்பு காலத்துக்காய் காத்திருக்கிறோம்.

இமெல்டா போல் – பொங்குதமிழ்

இசைப்பிரியா படுகொலை தொடர்பாக புதிய தகவல்கள்! செட்டிகுளம் முகாமில் வைத்தே கைதானார்?


வன்னியில் பணிபுரிந்த பெண் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் கொடூரமான படுகொலை தொடர்பாக வெளிவந்திருக்கம் புதிய தகவல்கள் இது ஒரு அப்பட்டமான போர்க் குற்றம் என்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது என இது தொடர்பான தகவல்களைச் சேகரிக்கும் ஐரோப்பிய ஊடக வட்டாரங்கள் தெரிவித்தன.


27 வயதான ‘சோபா’ எனப்படும் இசைப்பிரியா விடுதலைப் புலிகள் அமைப்பிடம் ஆயுதப் பயிற்சிகள் எதனையும் பெற்றுக்கொள்ளாத ஒருவர் என்பதுடன், இருதய நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளியாக அவர் இருந்தமையால் ஊடகத் துறையிலேயே அவர் தொடர்ந்து பணிபுரிந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

வன்னிப் பகுதிக்கு விஜயம் செய்த அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய மருத்துவக்குழுவினரிடம் இவர் தன்னுடைய இருதய நோய் தொடர்பிலான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டதை தன்னால் காணக்கூடியதாக இருந்தது என வன்னியில் பணியாற்றிய பணியாளர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.

இசைப்பிரியாவின் ஒரேயொரு குழந்தையான அகல் பதுங்குகுழி ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கிபிர் தாக்குதலில் படுகாயமடைந்து 2009 மார்ச் மாதம் 15 ஆம் திகதி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மரணமடைந்தது.

2009 மே மாதம் 8 ஆம் திகதி வரையில் முள்ளிவாய்க்கால் தற்காலிக மருத்துவமனையில் ஒரு தொண்டராக இசைப்பிரியா பணியாற்றியுள்ளார். போரின் முடிவில் இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த இவர், செட்டிகுளம் முகாமில் வலையம் 4 இல் தங்கியிருந்த நிலையில் 2009 மே 23 அல்லது 24 ஆம் திகதி சிறிலங்கா படையினரால் கொண்டு செல்லப்பட்டார்.

இசைப்பிரியாவுடன் மற்றொரு பெண்மணியும் படையினரால் முகாமில் வைத்துக் கைதுசெய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டதாக அதேமுகாமில் அப்போதிருந்த பணியாளர் ஒருவருடைய மனைவி தெரிவிக்கின்றார்.

படையினரால் கண்கள் கட்டப்பட்ட நிலையிலான இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்படும் காணொளி முதல் முறையாக 2009 ஆகஸ்ட் 25 ஆம் திகதியே வெளியிடப்பட்டது. அதில் குறிப்பிட்ட காணொளி பதிவு செய்யப்பட்ட திகதியாக 2009 ஜுலை 18 எனத் தெரிவிக்கப்படுகின்றது. அந்தக் காணொளியின் தற்போது வெளியாகியுள்ள அதிக நேரம் நீடிக்கும் காட்சியிலேயே இசைப்பிரியா கொல்லப்படும் காட்சி உள்ளடக்கப்பட்டுள்ளது.

இசைப்பிரியா போரின் போது கொல்லப்பட்டதாக படைத் தரப்பு முன்னர் தெரிவித்தது ஆனால், இடம்பெயர்ந்தவர்களுக்கான முகாமிலிருந்து சிறிலங்கா படையினரால் கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே இவர் கொல்லப்பட்டடுள்ளார் என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் இது ஒரு அப்பட்டமான மனிதாபிமானத்துக்கு முரணான போர்க் குற்றம் என்பதை உணர்த்துவதாக அமைந்திருக்கின்றது என மனித உரிமை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட சிறிலங்கா அரசின் போர் குற்றங்கள்





இன்றர்நெற் தகவல் இணையம் பிரபல்யம் அடைவதற்கு விக்கிலீக்ஸ் என்ற பெயரில் இயங்கும் இணையதளம் அண்மைக்காலமாக முக்கிய பங்களிப்புச் செய்கின்றது விக்கிலீக்ஸ் இணையதளத்தின் பணி எல்லோராலும் வரவேற்கப்படுகிறது என்று சொல்ல முடியாது.


விக்கிலீக்ஸ் இணையதளத்தை உருவாக்கிய 39 வயதினரான யூலியன் அசன்கே இன்று வேட்டையாடப் படும் மனிதராக மாறிவிட்டார் அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க உலகின் பெரும்பாலான அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

சுவீடன் நாட்டு அரசு ஒரு படி மேலே போய் அவர் மீது பாலியல் குற்றச் சாட்டுக்களைச் சுமத்தியதோடு அவரைப் பிடித்துத் தரும்படி மேற்கு ஜரோப்பிய நாடுகளைக் கேட்டுள்ளது. சென்ற ஆகஸ்து மாதம் அவர் சுவீடன் நாட்டுப் பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகச் சுவீடன் அரசு யூலியன் அசன்கேக்கு எதிராகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

யூலியன் அசன்கேயின் பிரபல்யத்திற்கு என்ன காரணம் என்று பத்திரிகையாளர்களும் மனித உரிமை ஆர்வலர்களும் ஆய்வு செய்கின்றனர் “ எம்மைப் பலம் அடையச் செய்யுங்கள்” (Keep us Strong) என்ற பெரிய எழுத்து மகுட வாசகத்துடன் திகழும் அவருடைய தளம் அரசுகளின் இரகசியங்களை அம்பலப் படுத்துவதில் முனைப்பாக ஈடுபடுகிறது.

விக்கிலீக்ஸ் இதுவரை அமெரிக்கா நடத்தும் ஈராக் போர் அப்காணிஸ்தான் போர் பற்றிய பல்லாயிரம் ஆவணங்களையும் கோப்புக்களையும் அம்பலப் படுத்தியுள்ளது. அமெரிக்க பாதுகாப்புச் செயலகத்திற்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு சிறிய துவாரம் பெரிய கப்பலைப் மூழ்கடித்துவிடும் என்று இராசதந்திர உலகில் சொல்வார்கள் இரகசியங்களைக் வெளியே செல்ல விடும் துவாரம் எங்கே இருக்கிறது என்று பென்ரகன் எனப்படும் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலகம் தேடத் தொடங்கியுள்ளது.

இருட்டில் கறுத்தப் பூனையைத் தேடுவதற்கு இது சமமானது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள் தகவல் தொழில்நுட்பம் இரு பக்கமும் கூரான கத்தி போன்றது. ஆது எதிரியையும் வெட்டும் பாவிப்பவரையும் வெட்டும். நல்லதும் கெட்டதும் அதில் அடங்கும்.

அமெரிக்காவின் போர் நடவடிக்கைகள் பற்றிய இரகசியங்களை வெளியிட்டுப் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய விக்கிலீக்ஸ் இப்போது புதியதொரு துறையில் தாக்குதல் தொடுத்துள்ளது.

தாய் நாட்டிலிருந்த வெளி நாடுகளுக்கு இராசதந்திரத் தூதர்களாகச் செல்லும் அதிகாரிகளின் முழுமுதற் பணி தகவல் சேகரிப்பாகும் இதற்காக இராசதந்திரத் தூதர்களுக்கு தகவல் சேகரிப்புப் பயிற்சி வளங்கப் படுகிறது. தகவல் என்ற சொல்லில் உளவுத் தகவல் என்ற செயற்பாடும் அடங்கும்.

உலக நாடுகள் அனைத்தும் தமது தூதர்கள் மூலம் பிற நாடுகளை வேவு பார்க்கின்றன என்று சொல்வதில் தவறில்லை இது ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை என்றும் சொல்லலாம் தகவல் சேகரிப்பதற்காகத் தூதர்கள் செய்யும் கூத்துக்களை இவ்விடத்தில் வெளியிட முடியும்.

தூதரகங்களில் நடக்கும் விருந்துகளும் மாலைப் பொழுது மது வழங்கல் நிகழ்ச்சிகளும் தகவல் சேகரிப்பு நோக்கில் நடத்தப் படுகின்றன தமிழ் எம். பீக்களும் வேறு பிரபலங்களும் குறிப்பாகச் சமூக ஆர்வலர்கள் என்று தம்மைப் பற்றிக் கூறிக் கொள்வோர்களும் தூதரகம் விடுக்கும் அழைப்பிற்காகத் தவம் கிடக்கிறார்கள்.

இலவச உணவு என்று ஒன்றுமே கிடையாது. இது பொருளாதார நிபுணர்கள் கூறும் முக்கிய வாசகம் உங்களை வருத்தி அழைப்பதோடு உயர்தர மதுவும் பல்சுவை உணவும் தருகிறார்கள் என்றால் அதற்கு அர்த்தம் இல்லாமல் விடுமா?

எமது விடுதலைப் போர் காலத்தில் கொழும்பில் நிலை கொண்டிருந்து தகவல் சேகரிப்பில் ஈடுபட்ட அனைத்துத் தூதரகங்களும் தமிழர்களையும் சிங்களவர்களையும் மாறி மாறி அழைத்ததோடு தின்னவும் குடிக்கவும் கொடுத்து இரகசியங்களை கநற்து கொன்டன. இது நன்கு தெரிந்த விடயம்.

அது மாத்திரமா? சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரக அதிகாரியான தமிழ் சிங்கள மொழி தெரிந்த ஹம்சா என்ற அதிகாரி சென்னை வாழ் பத்திரிகையாளர்களை தூதரக விருந்துக்கு அழைத்துப் புலிகளுக்கு எதிரான நச்சுப் பிரசாரங்களை முன்னெடுத்தார்.

அவருடைய பணியை மெச்சிய சிறிலங்கா அரசு அவருக்குப் பதவி உயர்வு கொடுத்து இலன்டன் தூதரகத்தில் பணிக்கமர்த்தியுள்ளது ஏறாவூரைச் சேர்ந்த இந்த முஸ்லிம் சகோதரர் இலன்டனில் தனது எட்டப்பன் வேலையைத் தொடர்ந்து செய்வதாக அறிகிறோம்.

இவ்வளவு விரிவாக தகவல் சேகரிப்புப் பற்றிக் கூற வேண்டிய அவசியம் இருக்கிறது. விக்கிலீக்ஸ் இப்போது ஆட்டைக் கடித்து மாட்டைக்கடித்து இறுதியில் மனிதரைக் கடிக்கும் விலங்கினம் போல் இராசதந்திர உலகின் மேலும் கை வைக்கத் தொடங்கியுள்ளது.

நவம்பர் 28.2010ம் நாள் உலகளாவிய அமெரிக்கத் தூதரகங்கள் வாஷிங்ரன் இராஜங்கச் செயலகத்திற்கு அனுப்பிய 250,000 இரகசிய இராசதந்திர ஆவணங்களைக் அது அம்பலப் படுத்தியுள்ளது உலகின் முக்கிய செய்தி என்று இதை செய்தி நிறுவனங்கள் கருத்து வெளியிட்டுள்ளது.

இராசதந்திரத்தின் அடிப்படை இரகசியம் காத்தல் தான் சேகரிப்பு எவ்வளவு முக்கியமோ அதிலும் கூடிய முக்கியத்துவம் இரகசியத்தைப் பாதுகாப்பாக வைத்திருத்தலாகும் விக்கிலீக்ஸ் செய்த வேலை இராசதந்திர உலகை ஆட்டங் காணச் செய்துள்ளது.

பல நாடுகளுக் கிடையிலான இராசதந்திர உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது நட்புறவைப் பேணிய படி அதற்கு எதிரான இரகசியக் கண்டன்தை தாய் நாட்டிற்கு அனுப்புவது வழமையான படியால் பரஸ்பர வெறுப்பும் கோபதாபவும் ஏற்படுவதைத் தடுக்க முடியாது.

பிரான்சுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. பாக்கிஸ்தான் தலைவர்கள் பற்றிய தூற்றல்கள் அந்த நாட்டில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது போர்க் காலத்தில் அமெரிக்கத் தூதரகம் கொழும்பில் இருந்து அனுப்பிய தகவல்கள் சிறிலங்கா அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களுக்குப் பேரிடியாக விழ்ந்துள்ளது.

அமெரிக்கத் தூதர் பற்றீசியா பூட்டெனிஸ் வாஷிங்ரனுக்கு அனுப்பிய ஆவணங்கள் சிறிலங்காவைப் போர் குற்ற விசாரணை செய்வதற்கும் தண்டனை வழங்குவதற்கும் போது மானவையாக இருக்கின்றன. எந்தக் குற்றச் சாட்டையும் சகட்டுமேனிக்கு மறுக்கும் சிறிலங்கா அரசு மவுனம் காத்து வருகிறது.

பொதுமக்களைக் குறிவைத்து இராணுவம் நடத்திய கொலை வெறித் தாக்குதல்கள் பற்றிப் பற்றீசியா பூட்டெனிஸ் தனது ஆவணங்களில் ஆதார பூர்வமாகக் குறிப்பிட்டிருக்கிறார். பாதுகாப்பு வலயங்களை உருவாக்கி அதற்குள் வந்து பாதுகாப்பாகத் தங்கும்படி அழைப்புத் அiழைப்பு விடுத்த அரசு அதே மக்களைக் கொன்று குவித்தது மிகப் பெரிய போர் குற்றம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் அரசு தனது இராணுவத்தைத் தண்டிக்கப் போவதில்லை என்றும் அவர் பதிவு செய்கிறார்.

விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளி வந்த இரகசிய ஆவணங்களில் சிறிலங்கா பற்றிய இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன அவற்றைப் பொறுமையாகப் பகுப்பாய்வு செய்து வரிசைப் படுத்தும் பணி மிகவும் கடினம் என்றாலும் நாம் அந்தப் பணியைச் செய்தே ஆகவேண்டும் போர் குற்ற விசாரணைகளும் தண்டனைக்குமான எமது பங்களிப்பாக அது அமையும்.

Thursday 2 December 2010

MONDAY, NOVEMBER 29, 2010 விக்கிலீக்ஸ் வெளியிடும் தகவல்களில் இலங்கை தொடர்பான் 3000 இரகசிய ஆவணங்கள்

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மீது அமெரிக்கா நடத்திய போர் தாக்குதலில் வெளிவராத விசயங்களை ஒவ்வொன்றாக விக்கிலீக்ஸ் என்ற இணையதளம் வெளியிட்டு வருகிறது. தற்போது அமெரிக்கா தனது நட்பு நாடுகளான இங்கிலாந்து, கனடா, சவுதி அரேபியா மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளை பற்றி மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் பிற விசயங்கள் குறித்து விக்கிலீக்ஸ் 30 லட்சம் ஆவணங்களை தன் வசம் வைத்திருப்பதாக கூறியது. அதனை வெளியிட இருப்பதாகவும் அது கூறி வந்தது. இந்த நிலையில் இன்று 2 லட்சத்து 50 ஆயிரம் ஆவணங்கள் அடங்கிய தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. இதுபற்றிய முக்கிய தகவல்கள் வருமாறு:-

அமெரிக்க அதிகாரிகள், ஐ.நா. அமைப்பின் பொது செயலாளர் பாங்கி-மூன் மற்றும் பாதுகாப்பு கவுன்சிலில் இடம்பெற்றுள்ள நிரந்தர உறுப்பினர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் பற்றி ரகசியமாக சில விசயங்கள் சேகரிப்பு.

அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் தவறான அணுகுமுறை, ஆப்கான் நாட்டில் இங்கிலாந்து இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் டேவிட் கேமரூன் பற்றி அவரது விமர்சனம் தகவலில் இடம்பெற்றுள்ளது. மேலும் அமெரிக்க அதிகாரிகள், ஈரானிய அதிபர் அகமதினிஜாத்தை அடால்ப் ஹிட்லர் என சித்தரித்துள்ளனர். பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசி, ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடின், ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் கர்சாய் மற்றும் ஜெர்மன் நாட்டு வேந்தர் ஏஞ்சலா மெர்கல் ஆகியோரையும் அமெரிக்க அதிகாரிகள் கேலி செய்துள்ள தகவல் வெளிவந்துள்ளது.

இதே போல் மிக முக்கியமான தகவலாக சவுதி அரேபிய அரசர் அப்துல்லா தொடர்ந்து அமெரிக்காவை ஈரான் நாட்டின் மீது தாக்குதல் நடத்துமாறு கூறி வந்ததாகவும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்துல்லா, அமெரிக்காவிடம் அந்த பாம்பின் தலையை அறுத்தெறியுங்கள் என 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாட்டின் தலைவர்கள், ஈரான் நாட்டினை தாக்கி பேசியுள்ளனர். மேலும் அந்த நாட்டின் மீது தாங்கள் போர் தொடுக்க தயாராக இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தான் துணை அதிபர் மசூத் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டிற்கு கடந்த வருடம் சென்றார். அப்பொழுது அவர் தன்னுடன் 52 மில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தை எடுத்து சென்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். உடனே காபூலில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் தலையிட்டு அது பற்றி எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமலிருக்க உதவி செய்தது. (எனினும் மசூத் ஆப்கான் நாட்டை விட்டு வெளியே செல்லும் போது தான் எந்த பணத்தையும் எடுத்து செல்லவில்லை என மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.)

கடந்த 2007-ஆம் ஆண்டில் இருந்து, பாகிஸ்தான் தனது நாட்டில் யூரேனியம் செறிவூட்டப்பட்ட அணு உலைகளை அமைப்பதை தடுக்க அமெரிக்க அரசு பல முயற்சிகள் எடுத்து வந்துள்ளது. எனினும் அது வெற்றி தரவில்லை. குறிப்பாக கடந்த 2009ல் மே மாதம் அமெரிக்க தூதர் அன்னி பேட்டர்சன் தங்களது தொழில்நுட்ப வல்லுநர்களை அந்நாட்டிற்கு அனுப்ப முடிவு செய்தது. ஆனால் இதற்கு பாகிஸ்தான் அரசு ஒத்துழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது நாட்டிற்கு அனுப்பிய செய்திகள் மற்றும் அது பற்றிய விவரங்கள் என 5 ஆயிரம் தகவல்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது. மேலும் காத்மண்டு பற்றிய 2 ஆயிரம் தகவல்களும், கொழும்பு பற்றிய 3 ஆயிரம் தகவல்கள், இஸ்லாமாபாத் பற்றிய 2 ஆயிரம் தகவல்கள் என பட்டியல் செல்கிறது.

அமெரிக்க அரசாங்கம் இரகசியமாக சில உளவு பிரிவு அதிகாரிகள் உதவியுடன் சீனா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் நிரந்தர பாதுகாப்பு கவுன்சில் பிரதிநிதிகளை குறிவைத்து பல வேலைகளை செய்ததாக ஆவணங்கள் தெரிவிக்கிறது. இந்த நாடுகளில் குறிப்பாக கியூபா, எகிப்து, இந்தியா, இந்தோனேஷியா, மலேசியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, சூடான், உகாண்டா, செனெகல் மற்றும் சிரியா ஆகியவை அடங்கும். மேலும் அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் ஹிலாரி ஐ.நா. பொது செயலாளர் தொடர்பாக சில தகவல்களை சேகரித்ததாகவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2002ல் இருந்து சீன நாட்டின் அரசு துறை அதிகாரிகள் மற்றும் அரசால் நியமிக்கப்பட்ட தனியார் பாதுகாப்பு வல்லுநர்கள், இணையதள கிரிமினல்கள் ஆகியோர் இணைந்து அமெரிக்க அரசின் கணினிகள், கூகுள் இணையதளம் மற்றும் தலாய் லாமாவின் கணினிகள் ஆகியவற்றை முடக்கும் பணியினை செய்தனர்.

துருக்கி நாட்டில் இஸ்தான்புல் நகரத்தில் நடைபெற்ற தீவிரவாதத்திற்கு எதிரான மாநாட்டில் இந்தியாவிற்கு அழைப்பு விடுக்கவில்லை. இது பற்றி துருக்கி நாட்டின் அப்போது இரு தரப்பு நாடுகளின் அரசியல் விவகார துறை துணை செயலாளராக இருந்த சாய்சல் கூறும் போது, பாகிஸ்தான் நாடுடன் இந்தியாவுக்கு உள்ள பிரச்சனையை முன்னிட்டு அப்போது இந்தியா கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்படவில்லை என கூறினார். தீவிரவாதம் தொடர்பான விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்ட இந்த மாநாட்டில் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஈரான் அரசு, மேற்கு ஐரோப்பாவை தாக்குவதற்காக, வட கொரியாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கி குவித்துள்ளது.

பட்டப் பெயர்கள்...

அமெரிக்கா சர்வதேச தலைவர்களை கேலி செய்யும் வகையில் அவர்களுக்கு பட்டபெயர் சூட்டி உள்ளது

பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு (ஆடைகள் இல்லாத பேரரசர்)
இத்தாலிய பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு (செயல்திறனற்ற தலைவர்)
ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெத்வேதேவுக்கு (புடினின் கையாள்)
புடினுக்கு (ஆல்பா டாக் )
ஈரான் அதிபர் மஹமூத் அகமதி நிஜாதுத்( ஹிட்லர்).
வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் (மனவலிமையற்ற வயதானவர்)

இங்கிலாந்து பற்றி ,,,,

முன்னாள் இங்கிலாந்து தொழிலாளர் துறை மந்திரியை பெண்கள் பின்னால் சுற்றும் வேட்டை நாய் என்றும் இங்கிலாந்து இளவரசர் ஆண்ட்ரூவின் நாடு கடந்த தவறான நடவடிக்கைகள் ஐ.நா. அதிகாரிகளின் கிரெடிட் கார்டு விவரங்கள், கைரேகை பதிவுகள் மற்றும் டி.என்.ஏ. பற்றிய விளக்கங்கள் ஆகியவை ஹிலாரியின் உத்தரவின் பேரில் சேகரிக்கப்பட்டுள்ளது.



Written By ilankainet at Monday, November 29, 2010

ம‌லிவான வாழை‌‌யி‌ன் மக‌த்துவ‌ம்

பழ‌ங்க‌ளி‌ல் ம‌லிவான பழ‌ம் எ‌ன்றா‌ல் வாழை‌ப் பழ‌த்தை‌க் கூறலா‌ம். ‌சீச‌ன் நேர‌த்‌தி‌ல் ‌சில பழ‌ங்க‌ள் வாழை‌ப் பழ‌த்தை ‌விட ‌விலை குறைவது உ‌ண்டு. ஆனா‌ல் எ‌ப்போதுமே ‌கிடை‌க்க‌க் கூடிய, ஏழைக‌ள் வா‌ங்‌கி சா‌ப்‌பிட‌க் கூடிய ‌விலை‌யி‌ல் ‌இரு‌க்கு‌ம் வாழை‌ப் பழ‌த்‌தி‌ல் அட‌ங்‌கி‌யிரு‌க்கு‌ம் மக‌த்துவமோ ஏராளமானது.

வாழைப் பழத்தில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு பலன் இருக்கிறது. ‌‌கிடை‌ப்பத‌ற்கு அ‌ரிய பழ‌ங்க‌‌ளி‌ல் இரு‌க்கு‌ம் ச‌த்து கூட வாழை‌ப்பழ‌த்‌தி‌ல் உ‌ள்ளது. ஆனா‌ல் அதனை பலரு‌ம் அ‌றி‌ந்‌திராம‌ல் உ‌ள்ளன‌ர். வ‌யி‌ற்று வ‌லி‌க்‌கிறதா, மல‌ச்‌சி‌க்கலா உடனே வாழை‌ப் பழ‌த்தை வா‌ங்‌கி சா‌ப்‌பிடு‌‌கிறோ‌ம்.


WD
உ‌‌ண்மை‌யி‌ல் வாழை‌ப்பழ‌ம் ஏராளமான மரு‌த்துவ‌ குண‌ங்களை‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறது. அதனை அ‌றி‌ந்தா‌ல், நா‌ம் ‌தினமு‌ம் வாழை‌ப்பழ‌த்தை சா‌ப்‌பிடுவதை வழ‌க்கமா‌க்‌கி‌க் கொ‌ள்ளுவோ‌ம். ‌நீ‌ரி‌‌ழிவு நோயா‌ளிக‌ள் ம‌ட்டுமே வாழை‌ப் பழ‌த்தை சா‌ப்‌பிட‌க் கூடாது. அவ‌ர்களு‌ம் உணவு‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டுட‌ன் இரு‌ந்து, ‌மிகவு‌‌ம் க‌னியாத வாழை‌ப் பழ‌த்தை கா‌‌ல் ப‌ங்கு சா‌ப்‌பிடலா‌ம் எ‌ன்‌கி‌ன்றன‌ர் மரு‌த்துவ‌ர்க‌ள்.

நம‌க்கு எ‌ப்போதுமே, எ‌ளிதாக‌க் ‌கிடை‌ப்பது பூவன் வாழைப்பழ‌ம். இதனை சாப்பிட்டால் மல‌‌ச்‌சி‌க்க‌ல் குறையு‌ம். வ‌யிறு சு‌த்தமாகு‌ம். மலச்சிக்கலால் உண்டான மூலநோய் குறையும்.

ரஸ்தாளி சாப்பிட்டால் பித்த நோய்கள் கட்டுப்படும். பேயன் பழம் சாப்பிட்டால் வயிற்றுப் புண்ணை ஆற்றும். நேந்திரன் பழம் ரத்த சோகையை குணமாக்கும். மொந்தன் பழம் சாப்பிட்டால் குளிர்ச்சி கிடைக்கும். மலைவாழையை சாப்பிட்டால் உடல் சூட்டை தணித்து பித்தத்தைப் போக்கும்.

செவ்வாழை சாப்பிடுவது ஆண்களுக்கு நல்லது. ஆண்மை பெருகும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மல‌ட்டு‌த் த‌ன்மையை‌ப் போ‌க்கு‌ம் ச‌க்‌தி செ‌வ்வாழை‌க்கு உ‌ள்ளது. குழ‌ந்தை இ‌ல்லாத த‌ம்ப‌திக‌ள் செ‌வ்வாழையை சா‌ப்‌பி‌ட்டு வரலா‌ம்.

கருந்துளுவன் வாழைப்பழத்தில் அதிகளவு அமிலச்சத்து உள்ளது. உடலுக்கு வலு சேர்க்கும். மட்டி ரக வாழைப்பழத்தில் குழந்தைகளுக்குத் தேவையான சத்துக்கள் அதிகம் உள்ளன. மூளையின் நரம்பு வேதியல் கடத்தியான `செரடோனின்' என்னும் ரசாயனப் பொருள், வாழைப்படும் சாப்பிடுவதால் சுரக்கிறது. இதனால் தூக்கம் நன்றாக வரும்.

இர‌வி‌ல் அமை‌தியான தூ‌க்க‌ம் வருவத‌ற்கு இர‌வி‌ல் உணவு சா‌ப்‌பி‌ட்ட ‌பிறகு ஒரு வாழை‌ப் பாமு‌ம், ஒரு ட‌ம்ள‌ர் பாலு‌ம் அரு‌ந்‌தினா‌ல் உடலு‌க்கு‌ம் ந‌ல்லது. உற‌க்‌க‌த்‌தி‌ற்கு‌ம் ந‌ல்லது.

உடலை‌த் தேவையான எடை‌யி‌ல் வை‌த்து‌க் கொ‌ள்ள வாழை‌ப்பழ‌ம் உதவு‌கிறது. அதாவது, உட‌ல் மெ‌லி‌‌ந்தவ‌ர்க‌ள் ‌தினமு‌ம் இர‌ண்டு வாழை‌ப்பழ‌ம் என தொட‌ர்‌ந்து சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்தா‌ல் ‌நி‌ச்சய‌ம் உட‌ல் பெரு‌க்கு‌ம்.

அதே சமய‌ம், ‌பிற உணவுகளை நீக்கிவிட்டு தினமும் ஆறு வாழைப்பழமும், ஆறு டம்ளர் கொழுப்பு நீக்கிய பால் அல்லது மோர் தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடல் எடையை குறைத்து விடலாம். பத்து நாட்களுக்குப் பின்னர், படிப்படியாக பாலின் அளவை குறைத்துக் கொண்டு, பச்சைக் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். வாழைப்பழத்தில் உடலின் எடையை அதிகரிக்கும் சோடியம் அதிகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழை மரம், வாழைப்பழம், காய், பூ, இலை மற்றும் தண்டு என அனைத்து பாகங்களிலும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் வியக்கின்றனர்.

வாழையில் பல வகைகள் இருந்தாலும் மொந்தன் ரகத்தைத்தான் பலரும் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மொந்தன் வாழைக்காயில் இரும்புச்சத்துடன் நிறைய மாவுச்சத்து காணப்படுகிறது. மெலிந்தவர்கள் இதை அதிகமாக சாப்பிட்டால் உடல் பருக்கும். உடலுக்கும் நல்ல வளர்ச்சி ஏற்படும். அதிக பசியாக இருப்பவர்கள் இதை சாப்பிட்டால் உடனேயே பசி அடங்கும். மொந்தன் வாழைக்காயுடன் மிளகு, சீரகம் சேர்த்து சமைப்பது மிகவும் நல்லது.

வாழைக்காயை சமைப்பதற்காக மேல் தோலை அழுத்தி சீவாமல், மெலியதாக சீவினால் போதும். உள்தோலுடன் சமைத்து சாப்பிடுவது நல்லது. கேரளாவில் சீவி எடுத்த தோலையும் நறுக்கி, வதக்கி, புளி மற்றும் மிளகாய் சேர்த்து துவையலாகச் செய்து உண்பார்கள். இதுவும் உடலுக்கு நல்லது.

குறை பிரசவமு‌ம் குழ‌ந்தை பா‌தி‌ப்பு‌ம்..........

எல்லோருக்கும் இனிமையான பிரசவம் நிகழவேண்டும் என்பதுதான் ஆசை. ஆனால், சுமார் 12 முதல் 18 விழுக்காட்டினருக்கு குறை பிரசவமாகி விடுகிறது.

இயல்பான எடையான இரண்டரை கிலோவுக்கு குறைவான எடையுடன் குழந்தை பிறந்தால் அது எடை குறைந்த குழந்தை அல்லது குறை பிரசவக் குழந்தை எனப்படுகிறது.

ஏழு மாதத்திற்குப் பிறகு திடீரென எப்போதாவது சிறுநீர் கசிவது அல்லது பெருக்கெடுப்பது போன்றே பனிநீர் வெளியேறுவதைத் தொடர்ந்து பிறக்கும் குழந்தை குறைபிரசவக் குழந்தையாகும்.

ஒருமுறை கருத்தரித்து குறை பிரசவத்தில் குழந்தை பெற்றிருந்தால் மறு முறையும் அவ்வாறு நிகழ வாய்ப்பு இருக்கிறது.

குழந்தையைப் பார்த்ததும் இது குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையா என்பதை சொல்ல வேண்டுமா?

குழந்தையின் தோல் சிவந்து, சதைப்பிடிப்பில்லாமல் மெலிந்தும், கைகால்கள் சிறுத்து தலை மட்டும் பெரியதாகவும் இருக்கும்.

ஆண் குழந்தையாக இருந்தால் விரைப்பை கருப்பாக மாறாமல் சிவப்பாக இருக்கும். பெண் குழந்தையின் யோனிச் சிறுஉதடுகள் பெரிதாக விரிந்து வீங்கியும், யோனிப் பெரு உதடுகள் ஒடுங்கியும் காணப்படும்.

குழந்தையின் உடம்பில் லானுகோ எனப்படும் பூனை மயிர்கள் அதிகமாக காணப்படும். குழந்தைக்கு உடல் அசைவுகள் எதுவும் இருக்காது.

நீளவாக்கில் 49 செ.மீ. இருக்க வேண்டிய குழந்தை 45 செ.மீ. அல்லது அதற்குக் ககுறைவாக இருக்கும். அதாவது வாரத்திற்கு இரண்டரை செ.மீ. குறைந்து காணப்படும்.

உதாரணமாக 34வது வாரத்தில் பிறந்த குழந்தை நாற்பத்தான்னரை செ.மீ. நீளம் மட்டுமே இருக்கும். இக்குழந்தை பாலை உறிஞ்சிக் குடிக்காது. விரைவில் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும்.

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தால் குழந்தையின் தொடையில் முன் எலும்பு வளர்ந்திருக்காது.

குழந்தை குறை பிரசவத்தில் பிறந்தால் என்ன என்று சிலர் நினைக்கலாம். குறை பிரசவ குழந்தைக்கு உயிர் பிழைக்கும் வாய்ப்பு குறைந்து மரண விகிதம் அதிகரிக்கும்.

750 கிராம் எடைக்கும் கீழ் இருந்தால் நூறில் எட்டு குழந்தைதான் பிழைக்கும். இந்தக் குழந்தைகளில் அறுபது விழுக்காட்டினர் பிறந்த 48 மணி நேரத்திற்குள் இறந்துவிடுகிறார்கள்.

750 கிராம் முதல் ஒரு கிலோ வரையுள்ள குழந்தை பிழைக்க 30 விழுக்காடு வாய்ப்பு மட்டுமே உள்ளது.

ஒன்று முதல் ஒன்னரை கிலோ எடையுள்ள குழந்தை பிழைக்க 40 விழுக்காடு வாய்ப்பிருக்கிறது.

குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையை பராமரிப்பது கடினமாகும். குழந்தையின் உடல் திறனும், அறிவுத் திறனும் சில வேளைகளில் பாதிக்கப்படலாம்.

அடுத்த பத்தாண்டுகளில் குழந்தை இறந்துபோக அதிக வாய்ப்பிருக்கிறது. மூளை வளர்ச்சியில்லாத நிலை, கண் பார்வை பாதிக்கப்படுவது போன்றவை இந்தக் குழந்தைகளுக்குத்தான் அதிகமாக வரும்.

குறை பிரசவம் ஏற்படக் காரணம்................

அடிக்கடி கருப்பைத் திசுச்சுரண்டல் எனப்படும் டி அண்ட் சி செய்து கொள்வதால் கருப்பைக் கழுத்துப் பகுதி வலுவிழந்துவிடும். இதனால் கருப்பைத் திசு தளர்ந்து அதில் கருத்தரித்து வளரும்போது கருவை தங்கவைக்க முடியாமல் வாய் திறக்க ஆரம்பித்துவிடும். பெரும்பாலும் இந்த நிலையில் கரு சிதைந்துவிடும். அவ்வாறு நிகழாதபோது குறை பிரசவம் உறுதியாகும்.

குழந்தை கருவில் வளர்ந்து கொண்டிருக்கும்போது கருப்பையானது குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே அதாவது குழந்தையின் வளர்ச்சி முற்றுப் பெறும் முன்பே வெளியேற்றிவிடுவது ஒரு காரணம். இத்தகைய தன்மையில் பிறக்கும் குழந்தைதான் குறைமாதக் குழந்தை அல்லது பிரிடெர்ம் பேபி.

கர்ப்பத்தில் உள்ள குழந்தையின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு அதனால் குழந்தை எடை குறைவாகப் பிறந்துவிடுதல் இன்னொரு காரணம். இந்தக் குழந்தையை வளர்ச்சிக் குறைந்த அல்லது முதிராத குழந்தை என்பார்கள். ஆங்கிலத்தில் இதற்கு பிரிமெச்சூர் பேபி என்று பெயர்.

பொதுவாக குழந்தையானது 37வது வாரத்திற்கு முன்பு பிறந்தால் குறைபிரசவக் குழந்தையாகவும், 37 வாரத்திற்குப் பிறகு பிறந்தும் எடை குறைவாக இருந்தால் முதிராத குழந்தையாகவும் கருதப்படுகிறது.

தாயின் உடல்நலம் இன்னொரு முக்கியக் காரணம். தாய் போதுமான ஊட்டச்சத்து சாப்பிடாதவராக இருந்து, கர்ப்ப கால பராமரிப்பு போதுமானதாக இல்லாவிட்டாலும், இரத்த சோகை மற்றும் அதனால் தோன்றும் அசதியினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் பால்வினை நோய்களால் தாக்கப்பட்டிருந்தாலும் குறைபிரசவம் நிகழும்.

ஏறக்குறைய 15 விழுக்காடு பெண்கள் இரத்த சோகை மற்றும் அசதியால் பாதிக்கப்படுகிறார்கள்.

கர்ப்பிணிக்கு கடுமையான காய்ச்சல், முறைக் காய்ச்சல், இரத்த சோகை, பிபி (இரத்தக் கொதிப்பு), சர்க்கரை வியாதி, மஞ்சள் காமாலை, சிறுநீரக பாதிப்புகள், இதய நோய்கள் மற்றும் தொடர்ந்த சீதபேதி இருந்தாலும் குறை பிரசவமாகும். இவ்வாறு ஏற்படும் பிரசவங்களில் 65 விபக்காடு தாயின் உடல் நலக் குறைவால் தோன்றுகின்ற பிரச்சனையாகும்.

தாயின் வயது இன்னொரு முக்கிய காரணம். 16 வயதுக்கு உட்பட்டவராகவோ அல்லது 35 வயதுக்கு மேற்பட்டவராகவோ இருக்கும் தலைச்சன் கர்ப்பிணிகளுக்கு குறைபிரசவம் நிகழ அதிக வாய்ப்பிருக்கிறது.

அடிக்கடி கருத்தரிப்பவர்களுக்கும் குறைப் பிரசவம் நிகழும். செப்டேட் யுடரஸ் எனப்படும் தடுக்கமைந்த கருப்பை, டைடெல்பிஸ் எனப்படும் இரட்டைக் கருப்பை, ஒற்கைக் கூம்பு கருப்பையான யுனிகார்னுயேட் யுடரஸ், கவர்க்கூம்பு கரும்பை எனப்படும் பைகார்னுயேட் யுடரஸ் ஆகியவற்றாலும் குறைப்பிரசவம் நிகழும்.

பிறவியல் வரும் பிரச்சனைகளால் வளர்ச்சியடையாத கருப்பை, கருப்பையில் பைப்ராய்டுகள் எனப்படும் நார்க்கட்டிகள், கருப்பை வளர்ச்சியடையாத நிலையில் கருத்தரித்தல், கருப்பை இடம் மாறுதல், குறையுள்ள விந்தணு மற்றும் முட்டையினால் கருத்தரித்தல் ஆகியவையும் குறை பிரசவத்தை உண்டாக்கும்.

குழந்தை இடம் மாறி அமைந்திருப்பதால் சுமார் கருவுற்ற 5 விழுக்காடு பெண்களுக்குக் குறை பிரசவம் ஏற்படுகிறது.

குறைமாதக் குழந்தையை பாதுகாப்பது எப்படி?

குறைமாதக் குழ‌ந்தையை இன்குபேட்டரில் வைத்து இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.

ஏனெனில், குழந்தையின் உடல் பரப்பு அதிகமாகவும், தோலுக்கு அடியில் கொழுப்புச் சத்து குறைவாகவும், தசைப் பெருக்கம் இல்லாமலும் வெப்பத்தை ஒரே நிலையில் வைத்திருக்கும் மூளையின் மு‌க்கிய பாகம் சரியாக முதிர்ச்சி அடையாமலும் இருப்பதால் உடம்பில் சூடு ஏறாது.

வியர்க்கும் சக்தி குறைவாக உள்ளதால் உடல் வெப்பத்தை சீராக வைத்துக்கொள்ள உடல் போராடும். இவற்றைத் தவிர்க்கவே இன்குபேட்டர் பயன்படுத்தப்படுகிறது.

இன்குபேட்டர் இல்லாத இடத்தில் என்ன செய்வது?

குழந்தையை ஒரு துணியில் சுற்றி தொட்டிலின் ஓரத்தில் இளஞ்சூட்டில் சுடுநீர்ப்பையை வைக்க வேண்டும். சுடுநீர்ப்பை குழந்தையின் தோலில் பட்டு சுட்டுவிடாதபடி துணியால் மூடி மிகக் கவனமாக வைக்கவேண்டும்.

குழந்தைக்கு கதகதப்பாக இருக்க கம்பளி ஆடையோ, வெப்ப நாட்களாக இருந்தால் பருத்தி ஆடையோ உடுத்த வேண்டும்.

குழந்தையைப் பாதுகாக்க 27 முதல் 32 செல்சியஸ் சூடு இதமாக இருக்கும்.

முதலிரண்டு நாட்களுக்கு குளுக்கோஸை சிரை வழியாக சொட்டுச் சொட்டாக ஏற்ற வேண்டும். தாய்ப்பாலை உறிஞ்சும் அளவுக்கு குழந்தைக்கு சக்தியிருந்தால் இங்க் பில்லர் அல்லது பாலாடை அல்லது சிறிய கரண்டியில் பால் எடுத்து குழந்தைக்கு புகட்ட வேண்டும்.

குழந்தைக்கு மூச்சுவிடும் திறன் மிகக் குறைவாக இருக்கும். எண்டோட்ரெக்கியல் போன்ற உட்செலுத்தும் மூச்சுக்குழல் சாதனங்களைப் பொருத்தி சுவாசத்தை சீராக்க வேண்டும்.

தாயார் மிகவும் சுத்தமாகவும், குழந்தை இருக்கும் இடத்தில் சளி, இருமல் போன்ற தொல்லைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மருத்துவமனைக்கு வரும் உறவினர்களை குழந்தையைப் பார்க்க அனுமதிக்கக்கூடாது.

மருத்துவமனையிலிருந்து குழந்தையை வீட்டுக்கு எடுத்துச்சென்றால் கதகதப்பான பஞ்சணையில் வைத்திருக்க வேண்டும். தரையில் படுக்கவைப்பது, குளிரான சூழலில் குழந்தையை வைத்திருக்கக் கூடாது.

தாய் தனது பாலை பீய்ச்சி மெல்ல புகட்ட வேண்டும். குழந்தையைக் குளிக்க வைக்காமல் துடைத்தெடுக்க வேண்டும்.

மருத்துவர் சொல்லும் வழிமுறைகள் அனைத்தையும் கேட்டு தவறாமல் நடந்துகொள்ள வேண்டும்.

Wednesday 3 November 2010

வருகிறார்கள் ... வேற்று கிரகவாசிகள்

பூமியில் வாழும் ஜீவராசிகளைத் தவிர, பிற கிரகங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்ற கேள்வி காலம் காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து நடைபெற்று வரும் ஆய்வுகள், வேற்று கிரக உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றன. எனினும் இன்று வரை உறுதியான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆதாரங்கள் எப்போது கிடைக்கும் என்பதும் நமக்குத் தெரியாது. எனினும், வேற்றுகிரக ஜீவராசிகள் உருவாவதற்கும், வாழ்வதற்கும் உள்ள சூழல் குறித்து அறிவுஜீவியான ஸ்டீபன் ஹாக்கிங்ஸ் தன்னுடைய இயற்பியல் மற்றும் பிரபஞ்ச அறிவைப் பயன்படுத்தி வேற்று கிரக உயிரினங்கள் எப்படியிருக்கும் என்று தர்க்க ரீதியில் விளக்குகிறார். நமது அறிவை தட்டி எழுப்பும் அவரது கருத்துக்களின் சாராம்சம் இதோ:

வேற்று கிரக உயிரினங்கள் நட்சத்திர மண்டலங்களுக்குள் இருக்கலாம். அல்லது பிரபஞ்சத்தின் மேகக்கூட்டங்கள் போன்ற பகுதிகளில் நுண்ணுயிர்களாக இருக்கலாம். கண் இமைக்கும் நேரத்தில் வாழ்ந்து மறைந்துவிடக் கூடிய நுண்ணுயிரிகள் கூட இருக்கலாம். ஆகவே பிரபஞ்சத்தில் உயிரினங்களில் எதைத் தேடுவது எங்கு தேடுவது என்ற கேள்விகள் முக்கியமானவை.பிரபஞ்சத்தில் இயற்பியல் விதிகள் எல்லாம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், உயிர் வாழ்க்கைக்கான விதிகளும் எல்லா இடத்திலும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க வேண்டும். அப்படியானால் நாம் வாழும் இந்த தாய் பூமியில் உயிரினம் தோன்றியது பற்றி நாம் அறிந்து கொண்டால், இந்த தேடலைத் தொடங்க முடியும்.45 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு எது காரணமாக அமைந்தது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது. ஆனால் இங்கு அபரிமிதமாக இருந்த அமினோ அமில குட்டைகளில், அணு மூலக்கூறுகள் ஒரு கச்சிதமான ஒருங்கிணைவு நிகழும் வரை ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டிருந்தன. பிறவி எனும் ஓர் உயிர் தோன்றும் வரை இந்த மோதல்கள் நடந்தன. எந்த தூண்டலும் இன்றி, உயிர் தோன்றியிருக்க முடியுமா என்பது தெரியவில்லை.பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்பாக, வேற்று கிரகங்களில் தோன்றிய உயிர்கள் இங்கு பரவியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. பூமியில் விழுந்த கற்களின் இடைப்பகுதியில் அந்த உயிரினங்கள் இருந்து, இங்கு வந்து சேர்ந்திருக்கலாம். அந்த உயிரினங்கள் விண்வெளியின் வெப்பத்தையும், வெற்றிடத்தையும் தாங்கும் திறனைப் பெற்றிருந்திருக்கும்.உயிர் தோன்றிவிட்டால், அதற்கடுத்து உள்ள அம்சம், உயிர் வாழ்தல். உயிர் வாழ்தலுக்கு ஓர் ஆதாரம் தேவைப் படுகிறது. அதை நாம் உணவு என்கிறோம். ஒருமுறை ஊட்டம் பெற்ற உயிர், அடுத்து சூழ்நிலைக்கு ஏற்ப வாழ தன்னை மாற்றிக் கொள்கிறது. இனப் பெருக்கம் செய்கிறது. பரிணாம வளர்ச்சிக்கும் வித்திடுகிறது. பரிணாம வளர்ச்சி என்பது பூமிக்கு மட்டும் பொதுவானது அல்ல. அது வேற்றுகிரகவாசிகளுக்கும் பொதுவானது. வேற்று கிரகங்களில் தண்ணீர் கண்டுபிடிக்கப்பட்டால் அங்கு, ஜீவராசிகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா என்ற கேள்விக்கு இந்த பிரபஞ்சத்தில் அபரிமிதமாக உள்ள தண்ணீர் நல்ல பதில் அளிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறது. தண்ணீர் இருந்தாலும் அந்த கோளின் இருப்பிடம், அதிக வெப்பம் மற்றும் குளிர் இல்லாத இடங்களாக இருக்க வேண்டும். அப்படியானால், சூரியனைச் சுற்றி உள்ள இரு கோள்களான பூமி மற்றும் செவ்வாய் அந்த வாய்ப்பைப் பெறுகின்றன. 1970களிலிருந்து மனிதர்கள் செவ்வாயை ஆராய்ந்து கொண்டிருந்தாலும், அங்கு உயிர் இருப்பதை உறுதி செய்யவில்லை. நாசா தண்ணீருடன் இணைந்த ஓர் வெண்ணிற உப்பை கண்டறிந்தது. உயிர் வாழ்வதற்கான ஈரப்பதம் அங்கு இருக்கிறது. ஆகவே அந்த முயற்சியை விஞ்ஞானிகள் கைவிடமாட்டார்கள்.

இதைத் தவிர நமது சூரிய குடும்பத்தில், உயிர் இருப்பதாகக் கருதக்கூடிய இன்னொரு இடம் வியாழன் கோளை சுற்றி வரும் துணைக்கோளான ஐரோப்பா. இது 3,200 கி.மீ., விட்டமும் மைனஸ் 260 டிகிரி குளிர்நிலையும் கொண்ட சிறிய துணைக் கோள். இக்கோள் சுற்றிவரும் பாதை வட்ட வடிவமாக இருப்பதால், வியாழனின் ஈர்ப்பு விசையால் துணைக்கோளின் இயக்கத்தின் போது, உள்புறமாக வெப்பம் உருவாகியிருக்கலாம். அதனால், பனிக் கட்டிகளுக்கு கீழே கடல் இருக்கலாம். அங்கு வாழத்தகுந்த உயிரினங்கள் உருவாகியிருக்கலாம். நமது ஆழ்கடல் உயிரினங்களைப் போல் அங்கு உயிரினங்கள் இருக்கலாம். அங்கு மேம்பட்ட உயிர்கள் வாழ்ந்தாலும், அவை அவற்றுக்கு மேலே 25 கி.மீ., பனி உறைந்த நிலையில் இருப்பதால், அவற்றுக்கு பிரபஞ்சம் இருப்பது தெரியாது. அவர்கள் நம்முடன் தொடர்பும் கொள்ள மாட்டார்கள்.நமது சூரிய மண்டலத்தைத் தவிர வேறு இடங்களில் உயிர்கள் இருக்கிறதா என்பதையும் நாம் தேட வேண்டும். 1995ம் ஆண்டில் முதலில் ஒரு வேற்று கிரகம் இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின்னர் நூற்றுக்கும் மேற்பட்ட கோள்கள் கண்டறியப்பட்டுவிட்டன. அந்த கோள்களில் திரவ வடிவில் தண்ணீர் இருக்கலாம். பரிணாமத்தின் சக்தியால் அங்கு வேற்றுகிரக ஜீவராசிகள் நமக்கு அறியப்பட்டவைப் போலக் கூட இருக்கலாம்.தரையில் வாழக்கூடியவையாக இருந்தால் அவற்றுக்கு கால்கள் இருக்க வேண்டும். கண்கள் அமைந்திருந்தால் அது பூமியில் உள்ள ஜீவராசிகளை ஒத்த அமைப்பை உடையதாக இருக்கும். பரிணாமத்தின் உச்சகட்ட எல்லைகளை நம்மால் உணரமுடியாது.

வேற்று கிரக வாசிகள் நம்மவர்களை கடத்திச் செல்வதாக நிறையக் கதைகள் வந்திருக்கின்றன. ஆனால், அவர்கள் ஏன் நம்மைக் கடத்த வேண்டும். நாம் 40 ஆண்டுகளாக விண்வெளியை கவனித்துக் கொண்டிருக்கிறோம். ஒரே ஒரு மர்மமான வாய்ப்பைத் தவிர, வேறு எந்த அறிகுறியையும் வேற்று கிரகவாசிகளிடம் இருந்து நாம் பெறவில்லை. 1977ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் தேதி ஒஹயோவில் இருக்கும் ஒரு ரேடியோ டெலஸ்கோப் ஒரு சமிக்ஞையை கிரகித்தது. ஒரு கம்ப்யூட்டர் 6 எழுத்துக்களும் எண்களும் கொண்டதாக அதை பதிவு செய்தது. ஆங்கிலத்தில் இது "வாவ்' என்று அறியப்பட்டது. இது வேற்று கிரகவாசிகள் இந்த சமிக்ஞை அனுப்பியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. இந்த "வாவ்' சமிக்ஞை 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள நட்சத்திர மண்டலத்திலிருந்து வந்ததாக தோன்றியது.அதற்கு நாம் ஒரு பதில் அனுப்பினால் அது அவர்களை சென்றடைய 200 ஆண்டுகள் ஆகும். அந்த காலத்திற்குள் அவர்கள் தகவல் அனுப்பியதே மறந்து அதற்கு பதில் வருகிறதா என்று கவனிப்பதையே விட்டுவிடுவார்கள். அதை விட மோசமாக அவர்கள் தங்களையே அழித்துக் கொண்டும் விடலாம். மனித இனம் மிக விரைவாக அணுகுண்டின் சக்தியை கண்டறிந்து கொண்டது. அதே விஷயம் அந்த வேற்று கிரகவாசிகளின் விஷயத்திலும் நடந்தால் அவர்களும் நீண்ட நாள் வாழமுடியாது. வேற்றுகிரகவாசிகளை தேட, நாம் அவர்களது செய்திகளை கவனிக்கலாம். அல்லது நாம் பேசத்தயாராக இருப்பதாக நம்முடைய ஆர்வத்தை ஒலிபரப்பு செய்யலாம்.

ஆனால் நாம் என்ன சொல்ல போகிறோம் என்பதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் முதுமை அடைவதை வெற்றிகொண்டு சாகா நிலைமையை கூட அடைந்திருக்கலாம். அதற்கும் மேலாக இந்த மேம்பட்ட நிலையை அவர்கள் பல லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே அடைந்திருக்கலாம். இது நடக்காது என்று தோன்றினாலும், நீங்கள் இதை தர்க்க ரீதியாக சிந்தித்தால், ஒரு குகைவாசிக்கு அல்லது ஆதிவாசிக்கு ராக்கெட் விண்கலம் எப்படியோ அப்படி அவர்களுடைய தொழில்நுட்பமும் நமக்கு இருக்கும். அவர்கள் வாழும் கிரகங்களுக்கு ஆபத்து வரும் போது, அல்லது அவர்கள் கிரகங்களில் வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்படும் போது, அவர்கள் மற்ற கிரகங்களில் உள்ள தண்ணீர் உள்ளிட்ட இயற்கைப் பொருட்களை பிரம்மாண்டமான விண்வெளிக் கப்பல்களுடன் வந்து அவர்கள் சூறையாடலாம். எனவே நாம் காலத்தை வெல்லும் வயதை அடைவதையும், வேற்று கிரகங்களில் சென்று குடியேறும் அளவுக்கான திறமையும் ஒரு காலத்தில் நாமும் பெற வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

CCTV Abbreviations

CCTV Acronym Definition
A/V audio / video
AVI Audio Video Interleave - An audio-video standard designed by Microsoft.
AES auto electronic shutter - the ability of the camera to compensate for moderate light changes by adjusting the camera shutter without the use of auto iris lenses.
AGC automatic gain control - this feature adjusts the brightness level of the video to keep it at a consistent level.
BLC back light compensation - a feature on newer CCD cameras which electronically compensates for high background lighting to give detail which would normally be silhouetted.
BNC Bayonet Nut Coupling - A commonly used connection for audio/video (A/V) applications. Uses a mount similar to the way a bayonet knife is mounted onto the end of a rifle, BNCs are used to connect a variety of different coaxial cable types. After the plug is inserted, it is turned, causing pins in the socket to be pinched into a locking groove on the plug.
CAT5 Category 5 (cable) - the type of cable that is used in networking applications.
CCD CCTV security cameras produce images using CMOS or CCD (Charge Couple Device) chips. CCD chips are higher quality and produce a better image than CMOS.
CMOS complementary metal oxide semiconductor - Pronounced see-moss, CMOS is a widely used type of semiconductor.
CCTV Closed-circuit television
DVR digital video recorder - a digital video recorder is basically a computer that converts the incoming (analog) signal from the cameras to digital, and compresses it, and stores it. The DVR replaces the function of a multiplexor (or quad or switcher) and a security VCR. There are many advantages of digital video recorders over their analog counterparts.
FPS frames per second - in digital video applications, refers to the number of video images that can be captured, displayed, or recorded in a second. Also referred to as the 'frame rate' or 'refresh rate'.
GHZ gigahertz
JPEG (or JPG) Pronounced "jay-peg" and stands for "Joint Photographic Experts Group" who designed the standard. This is a standard way of compressing images which works particularily well for photographic images (as opposed to graphic art).
MHZ megahertz
MPEG (or MPG) Pronounced "em-peg" and stands for "Motion Picture Experts Group" who designed the standard. This is a standard way of compressing audio and video files. (It's also the technology behind the now world-famous MP3 music files.)
POE Power Over Ethernet - an adaptor that allows you to transmit power to a security camera through CAT5 (aka ethernet) cable.
PTZ pan-tilt-zoom - PTZ cameras allow you to adjust the position ('pan' is side-to-side, 'tilt' is up-and-down) and focus ('zoom') of the camera using a remote controller. Due to this added functionality, these cameras tend to cost much more than non-PTZ cameras
RG59 An RG-59 is a common coax cable used in CCTV applications.
RCA An RCA connector, sometimes called a phono connector or cinch connector, is a type of electrical connector commonly used to carry audio and video signals. The name "RCA" derives from the Radio Corporation of America, which introduced the design by the early 1940s to allow mono phonograph players to be connected to amplifiers.
S/N ratio signal to noise ratio; this number represents how much signal noise the camera can tolerate and still provide a good picture. The higher the number the better.
VCR Videocassette recorder; an electronic device for recording and playing back video images and sound on a videocassette.

மழலைச் சொல் இருபத்தி நாலு மணி நேரத்தில்

மழலைச் சொல் இருபத்தி நாலு மணி நேரத்தில்

ஒன்பது மணி நேரம் உறங்கி விட்டேன்
ஒரு மணி நேரம் கைபேசியில் பேசிவிட்டேன்

இரண்டு மணிநேரம் மாநகர பேருந்தில் இல்லாத இடத்தில நின்று பயணித்து விட்டேன்

எடுத்த பசிக்காக வேளைஒன்றுக்கு
இருபது நிமிடங்கள் என் சாப்பாட்டோடு காலத்தையும் விழுங்கி விட்டேன்

அலுவலக வேலையில் அரைமனதாய்
ஆறு மணி நேரத்தையும் ஓட்டிவிட்டேன்

பல் விளக்கவும் குளிக்கவும் பதினைந்து நிமிடம் என்றாலும்
பகிர்ந்து கொள்ளும் நிலையில் குடித்தனம் என்பதால்
பாழாக்கி கொண்டேன் வரிசையில் மூன்று பதினைந்து நிமிடங்களை மேலும்

மளிகை கடைக்கு செல்லவும்
மற்ற பொருளை வாங்கவும் ஒரு மணி நேரத்தை செலவழித்துவிட்டேன்
மனைவிக்கு ஒத்தாசை செய்கிறேன் என்று தண்ணீர் பிடித்து,
தரையினை துடைத்து குப்பையாக்கிவிட்டேன்

அழுவதும், அவிழ்பதுமான பெண்களை அரைமனதோடு
பார்த்து அழுக்காக்கி விட்டேன் அரைமணிநேரத்தை தொலைகாட்சி பெட்டியில்

மூன்று நாளைக்கு முந்தி இறந்தவரின் பிள்ளைக்கு
முக்கால் மணி நேரமாய் இணையவழி உரையாடலில்
முடிந்தால் கருமாதிக்கு வருவதாய் சாவுக்கு வராத வருத்தத்தை சற்று கூட்டி மெழுகி கூறினேன்

கால் மணி நேரத்திற்கு முந்தி நான்
காலையில் என் பிள்ளை கொடுத்த ஈர முத்தத்தை மறந்து போனதையும்
செம்மொழி என்றால் என்னவென்று
சிவப்பு நிறத்தில் பேனாவும்
சில இனிப்புகளும் வாங்கி வா என்பதையும்
சிந்திக்கிறேன் இது வரையில் நான் வாழ்வதே வீண் என்று..............

Tuesday 2 November 2010

பேரிச்சம் பழமும் இரத்த விருத்தியும்

பழங்களிலேயே தனிச்சுவை கொண்டது பேரிச்சம் பழம். தரமான, நல்ல சத்துள்ள பேரிச்சம் பழங்கள் ஆப்ரிக்க, அரேபிய நாடுகளிலேயே விளைகிறது.

பேரிச்சம் பழத்திற்கு இரத்தத்தை விருத்தி செய்யும் ஆற்றலும், இரத்தத்தை வளப்படுத்தும் இயல்பும் உண்டு.

தினமும் இரவில் 4 பேரிச்சம் பழங்களை சாப்பிட்டுவிட்டு பின் ஒரு டம்ளர் பால் குடித்து வந்தால் போதும் இரத்தம் விருத்தி அடைவதோடு, உடலில் தெம்பும், வலிமையும் கூடும்.

உடலில் சர்க்கரைத் தன்மை குறைந்து சோர்வடையும் போது, சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே போதும் உடனே ரத்தத்தில் சர்க்கரைத் தன்மையை அதிகரித்து உடலை சமநிலைக்கு கொண்டுவரும்.

பேரிச்சம் பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஒரு அவுன்ஸ் பேரிச்சம் பழத்தில் 170 மில்லி கிராம் வைட்டமின் ஏ சத்து அடங்கியுள்ளது. மேலும் பி1 வைட்டமின் 26 மில்லி கிராமும், பி2 வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது.

இரும்புச் சத்து 30 மில்லி கிராமும், சுண்ணாம்புச் சத்து 20 மில்லி கிராமும் உள்ளது.

பெண்களுக்குப் பொதுவாக கால்சியம் குறைபாடு அதிகம் ஏற்படுகிறது. இவர்கள் பேரிச்சம் பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் கால்சியம் குறைபாட்டை தவிர்க்க முடியும்.

மேலும், மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் சோர்வையும் பேரிச்சம் பழம் உட்கொள்வதால் போக்க முடியும்.

இள‌ம் பெ‌ண்க‌ள் பெரு‌ம்பாலானவ‌ர்களு‌க்கு இர‌த்த சோகை உ‌ள்ளது. இதனா‌ல் குழ‌ந்தை‌ப் பேறு காலக‌ட்ட‌த்‌தி‌ல் பா‌தி‌ப்பு ஏ‌ற்படு‌கிறது. இதனை‌த் த‌வி‌ர்‌க்க பே‌ரி‌ச்ச‌ம் பழ‌த்தை உ‌ட்கொ‌ள்ளு‌ங்க‌ள் இர‌த்த சோகையை‌ப் போ‌க்‌கி‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

வளரு‌ம் குழ‌ந்தைகளு‌க்கு பே‌ரி‌ச்ச‌ம் பழ‌ம் கொடு‌த்து வ‌ந்தா‌ல் அது அவ‌ர்க‌ளி‌ன் ஆரோ‌க்‌கியமான வள‌ர்‌ச்‌சியை உறு‌தி செ‌ய்யு‌ம் எ‌ன்ப‌தி‌ல் ஐய‌மி‌ல்லை.

காச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற பேரிச்சம் பழம் அதிகம் துணை புரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday 31 October 2010

தமிழ்

புதுப் பயனர் உதவி | தமிழ்த் தட்டச்சு உதவி | Tamil font help | ஆலமரத்தடி | ஒத்தாசை | தமிழ் அகரமுதலி | தமிழ் விக்கி செய்திகள்
விக்கி மாரத்தான் | நவம்பர் 14, 2010 - சென்னை விக்கியர் சந்திப்பு | கட்டுரைகள் பதிவேற்றும் பணி
தமிழ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.


மெய்யெழுத்துக்களில் ஒன்றான ழகரம் தரும் ஒலி தமிழிலும் மலையாளத்திலும், மாண்டரீன் சீனம் உட்பட்ட சில மங்கோலிய மொழிகளில் மட்டும் காணப்படுகிறது
தமிழ் (தமிழ்)
நாடுகள்: இந்தியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளிலும் மேலும் பல நாடுகளில் புலம் பெயர்ந்தவர்களும்.
பிரதேசங்கள்: ஆசியா மற்றும் உலகெங்கணும் ஆங்காங்கே பேசப்படுகின்றது.
பேசுபவர்கள்: 77 மில்லியன் (1999-ல்)
நிலை: 18 (1996-ல்)[4]
மொழிக் குடும்பம்: திராவிட மொழிக் குடும்பம்
தென்பகுதி
தமிழ்-கன்னடம்
தமிழ்-குடகு
தமிழ்-மலையாளம்
தமிழ்
அரச ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: இந்தியா, இலங்கை மற்றும் சிங்கப்பூர்
Regulated by: தமிழகத்திலும், இலங்கையிலும் உள்ள பல்வேறு அமைப்புகள் மற்றும் அவற்றின் அரசுகள்
மொழிக்கான குறீடுகள்
ISO 639-1 ta
ISO 639-2 tam
SIL TCV
இவற்றையும் பார்க்கவும்: பகுப்பு:மொழிகள்
தமிழ் தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முக்கிய மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டிலும் இலங்கையிலும், சிங்கப்பூரிலும் அதிக அளவில் பேசப்படும் இம்மொழி, துபாய், மலேசியா, தென்னாபிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற பல நாடுகளிலும் சிறிய அளவில் பேசப்படுகிறது. 1996-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி 50 இலட்சம் (85 மில்லியன்) மக்களால் பேசப்பட்டு, ஒரு மொழியை, தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்ட மொழிகளின் பட்டியலில், தமிழ், பதினெட்டாவது இடத்தில் உள்ளது.[1]

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும்.[2] திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளீல் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் [3] மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றியது. திருக்குறள் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றியது.
பொருளடக்கம் [மறை]
1 வரலாறு
2 மொழிக்குடும்பம்
3 சொற்பிறப்பு
4 தமிழ் பேசப்படும் இடங்கள்
4.1 ஆட்சி மொழி அங்கீகாரம்
4.2 இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம்
5 பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்
5.1 வட்டார மொழி வழக்குகள்
6 எழுத்துமுறை
6.1 தமிழ் எழுத்துக்கள்
6.2 கிரந்த எழுத்துக்கள்
7 தமிழ் ஒலிப்புமுறை
7.1 உயிர் எழுத்துக்கள்
7.2 மெய் எழுத்துக்கள்
7.3 சிறப்பு எழுத்து - ஆய்த எழுத்து
7.4 ஒலிப்பியல்
7.4.1 குறுக்கம்
7.5 எண் குறிகள்
7.6 எண் ஒலிப்பு
8 இலக்கணம்
9 சொல் வளம்
9.1 கலைச்சொற்கள்
10 தமிழ்த் தாய் வாழ்த்து
11 தமிழ்ப் பற்று
12 தமிழ் மொழி ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்புகள்
13 மேலும் காண்க
14 உசாத்துணைகள்
14.1 பழங்காலக் குறிப்புகள்
14.2 தற்காலக் குறிப்புகள்
15 வெளி இணைப்புகள்
15.1 பொது
15.2 தமிழ் மொழி கற்றுக்கொள்ள உதவும் ஆதாரங்கள்
[தொகு]வரலாறு

முதன்மைக் கட்டுரை: தமிழ் மொழி வரலாறு
தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003).[4] இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 அளவில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 அளவுக்கு முன் தள்ளியுள்ளன.[5] பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.


பதினைந்தாம் நூற்றாண்டிலோ பதினாறாம் நூற்றாண்டிலோ எழுதப்பட்ட கிறித்தவ சமய வழிபாட்டு ஓலைச் சுவடிகள்

தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
சங்க காலம் (கிமு 300 - கிபி 300)
சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
மத்திய காலம் (கிபி 1200 - கிபி 1800)
இக்காலம் (கிபி 1800 - இன்று வரை)
பக்தி இலக்கிய காலத்திலும், மத்திய காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி.பி 800 க்கும் 1000 இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.
[தொகு]மொழிக்குடும்பம்

தமிழ் தமிழ் மொழிகள்|தமிழ் மொழிக் குடும்ப]]த்தைச் சேர்ந்த ஒரு மொழியாகும். இக் குடும்பத்தில், இருளா, Kaikadi, பேட்டா குறும்பா, Sholaga மற்றும் Yerukula என்னும் மொழிகள் அடங்கும். தமிழ் மொழிக் குடும்பம், தமிழ்-மலையாளம் மொழிகளின் ஒரு துணைக் குடும்பமாகும். தமிழ்-மலையாளம் மொழிகள், தமிழ்-குடகு மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும், தமிழ்-குடகு மொழிக் குடும்பம், தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவாகவும் உள்ளன. தமிழ்-கன்னடம் மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பத்தின் துணைப் பிரிவுகளுள் ஒன்றான தென் திராவிட மொழிக் குடும்பத்தின் உட் பிரிவுகளுள் ஒன்றாகும்.

தமிழ் நாட்டை எல்லையாகக் கொண்டுள்ள, கேரள மாநில மக்களால் பேசப்படும் மலையாளம், சொற்கள், வசன அமைப்பு ஆகிய அம்சங்களில் தமிழை நெருக்கமாக ஒத்துள்ள ஒரு மொழியாகும். ஏறத்தாழ ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழும், மலையாளமும் ஒரே மொழியின் இரு வட்டார வழக்குகளாகவே இருந்து வந்தன. இரு பகுதியினருமே இம் மொழியினைத் தமிழ் எனவே வழங்கிவந்துள்ளனர். மலையாளத்துக்கும், தமிழுக்கும் இடையிலான வேறுபாடுகள் சில, வரலாற்றுக்கு முந்திய காலம் தொட்டே கிழக்குத் தமிழ் வழக்கிற்கும், மேற்குத் தமிழ் வழக்கிற்குமிடையே பிரிவு ஏற்படத் தொடங்கியதைக் காட்டுவதாக அமைகின்ற போதும், தெளிவாக இரண்டு தனி மொழிகளாகப் பிரிந்தது 13 ஆம் 14 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியிலேயே ஆகும்.
[தொகு]சொற்பிறப்பு

தமிழ் என்னும் சொல்லின் மூலம் பற்றிப் பலவிதமான கருத்துக்கள் உள்ளன. தமிழ் என்ற சொல் த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் திரிபு எனச் சிலரும், தமிழ் என்பதே த்ரவிட என்னும் சமஸ்கிருதச் சொல்லின் மூலம் என வேறு சிலரும் கூறுகின்றனர். இவ்வாதம் இன்னும் முடிவின்றித் தொடர்ந்தே வருகிறது. இவை தவிர இச் சொல்லுக்கு வேறு மூலங்களைக் காண முயல்பவர்களும் உள்ளனர். தமிழ் என்னும் சொல்லுக்குத் த்ரவிட என்பதே மூலம் என்ற கருத்தை முன் வைத்தவர்களுள் கால்டுவெல் முக்கியமானவர். இவர் த்ரவிட என்பது திரமிட என்றாகி அது பின்னர் த்ரமிள ஆகத் திரிந்து பின்னர் தமிள, தமிழ் என்று ஆனது என்கிறார். தமிழ் என்னும் திராவிடச் சொல்லே மூலச் சொல் என்பவர்கள், மேலே குறிப்பிடப்பட்டதற்கு எதிர்ப்பக்கமாக, "தமிழ் - தமிள - த்ரமிள - த்ரமிட - த்ரவிட ஆகியது என்பர்.
சௌத்துவருத்து என்பவர் தமிழ் என்பதன் ஆறு தம்-மிழ் என்று பிரித்துக் காட்டி "தனது மொழி" என்று பொருள்படும் என்று தெரிவிக்கிறார்.[6] காமெல் சுவெலிபில் என்ற செக்கு மொழியியலாளர் தம்-இழ் என்பது "தன்னிலிருந்து மலர்ந்து வரும் ஒலி" என்ற பொருள் தரவல்லது என்கிறார். மாறாக, tamiz < tam-iz < *tav-iz < *tak-iz என்ற கிளவியாக்கம் நடந்திருக்கலாமென்றும், அதனால் இது "சரியான (தகுந்த) (பேச்சு) முறை" என்ற பொருளிலிலிருந்து துவங்கியிருக்கலாம் என்றும் கூறியிருக்கிறார்.[7]
[தொகு]தமிழ் பேசப்படும் இடங்கள்

இதையும் பார்க்க: புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை

தமிழியல்
தமிழ்
மலையாளத் தமிழியல்
ஆங்கிலத் தமிழியல்
சிங்களத் தமிழியல்
சமசுகிருத தமிழியல்
கன்னடத் தமிழியல்
தெலுங்குத் தமிழியல்
துளு தமிழியல்
வங்காளத் தமிழியல்
மராத்திய தமிழியல்
இந்தித் தமிழியல்
பர்மியத் தமிழியல்
சீனத் தமிழியல்
அரபுத் தமிழியல்
மலாய் தமிழியல்
உருசியத் தமிழியல்
ஜப்பானியத் தமிழியல்
கொரியத் தமிழியல்
ஜெர்மன் தமிழியல்
பிரெஞ்சுத் தமிழியல்
டச்சுத் தமிழியல்
போத்துக்கீசத் தமிழியல்
சுவீடிஸ் தமிழியல்
பாளித் தமிழியல்
பிராகிருதத் தமிழியல்
பிராமித் தமிழியல்
பாரசீகத் தமிழியல்
உருதுத் தமிழியல்


தொகு
தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.

தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். தென்னாப்பிரிக்கா, குயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட்டும் டொபாகோவும் போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.

மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.
[தொகு]ஆட்சி மொழி அங்கீகாரம்
தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் கீழ் தேசிய மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் அந்தமான் நிக்கோபார் தீவுகள், பாண்டிச்சேரி ஆகிய ஒன்றியப் பகுதிகளிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. சிங்கப்பூர் நாட்டிலும் தேசிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு முகமை மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.
[தொகு]இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம்
இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து [8] இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு ஜூன் 6 ஆம் நாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.[9]
[தொகு]பேச்சுத்தமிழ் - உரைநடைத்தமிழ் வேறுபாடுகள்

முதன்மைக் கட்டுரைகள்: பேச்சுத் தமிழ், உரைநடைத் தமிழ்


18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, செந்தமிழ் நடையில் எழுதப்பட்ட விவிலிய நூலின் முகப்பு
தமிழ், அதன் பல் வேறுபட்ட வட்டார வழக்குகளுக்கு மேலதிகமாக, இலக்கியங்களில் பயன்படும் முறையான செந்தமிழுக்கும், கொடுந்தமிழ் என வழங்கப்படும் பேச்சுத் தமிழுக்கும் இடையே தெளிவான இருவடிவத் தன்மை (diglossia) காணப்படுகின்றது. இங்கே கொடுந்தமிழ் என்பது அனைத்து வட்டாரப் பேச்சுத் தமிழ் வழக்குகளையும் பொதுவாகக் குறிக்கும் ஒரு சொற் பயன்பாடு ஆகும். இந்த இருவடிவத் தன்மை பண்டைக் காலம் முதலே தமிழில் இருந்து வருவதை, கோயில் கல்வெட்டுக்களிற் காணப்படும் தமிழ், சமகால இலக்கியத் தமிழினின்றும் குறிப்பிடத் தக்க அளவு வேறுபட்டுக் காணப்படுவதினின்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வாறு, செந்தமிழ் எந்த வட்டார மொழி வழக்கையும் சாராது இருப்பதனால், எழுத்துத் தமிழ், தமிழ் வழங்கும் பல்வேறு பகுதிகளிலும், ஒன்றாகவே இருப்பதைக் காணலாம்.

தமிழ்
செந்தமிழ்
கொடுந்தமிழ்
முத்தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
ஆட்சித் தமிழ்
சட்டத் தமிழ்
அறிவியல் தமிழ்
மருத்துவத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழ் வட்டார மொழி வழக்குகள்
கொங்குத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
மட்டக்களப்பு பேச்சுத் தமிழ்
வன்னித்தமிழ்
மலேசியத் தமிழ்
முஸ்லிம்கள் தமிழ்
சென்னைத் தமிழ்
திருநெல்வேலித் தமிழ்
தஞ்சாவூர்த் தமிழ்
மதுரைத் தமிழ்
ஈழத் தமிழ்
தமிங்கிலம்
மணிப்பிரவாளம்
மலையாளம்

தொகு

தற்காலத்தில், எழுதுவதற்கும், மேடைப் பேச்சுக்கும் செந்தமிழே பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, செந்தமிழ், பாட நூல்களுக்குரிய மொழியாகவும், பெருமளவுக்கு இலக்கிய மொழியாகவும், மேடைப் பேச்சுகளுக்கும், விவாதங்களுக்கும் உரிய மொழியாகவும் விளங்கிவருகிறது. அண்மைக் காலங்களில், மரபு வழியில், செந்தமிழுக்குரிய துறைகளாக இருந்து வந்த பகுதிகளிலும் கொடுந்தமிழ்ப் பயன்பாடு அதிகரித்து வருவதைக் காணமுடிகின்றது. பெரும்பாலான தற்காலத் திரைப்படங்கள், மேடை நாடகம் மற்றும் தொலைக் காட்சி, வானொலி முதலியவற்றில் இடம்பெறும் மக்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் பலவற்றிலும் கொடுந்தமிழ் பயன்படுத்தப்படுவதைக் காணலாம். பல அரசியல் வாதிகளும், மக்களுக்கு நெருக்கமாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் நோக்கில் தங்கள் மேடைப் பேச்சுக்களிலும் கொடுந்தமிழைப் பயன்படுத்தி வருகின்றனர்.

செந்தமிழுக்கான இலக்கண விதிகள் இறைவனால் உருவாக்கப் பட்டதாக நம்பப்படுவதால், செந்தமிழே சரியான மொழியாகக் கருதப்பட்டது. இதனால், பேச்சுத் தமிழ் வழக்குகளுக்குச் சிறப்புக் கிடைக்கவில்லை. (எடுத்துக்காட்டு, காங்கேயர் (Kankeyar), 1840). பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுவதற்கு மாறாக, தமிழில், அதன் வரலாற்றின் பெரும் பகுதியிலும், ஒரு பொதுவான பேச்சுமொழி இருந்ததில்லை. தற்காலத்தில் அதிகரித்த கொடுந்தமிழ்ப் பயன்பாடு, அதிகாரபூர்வமற்ற முறையில் பொதுப் பேச்சுத் தமிழ் வழக்குகள் தோன்றுவதற்குக் காரணமாகவுள்ளது. இந்தியாவில் பொதுக் கொடுந்தமிழ், 'படித்த, பிராமணரல்லாதவர்'களின் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டுள்ளது (Schiffman, 1998). எனினும் குறிப்பிடத் தக்க அளவுக்கு, தஞ்சாவூர் மற்றும் மதுரைப் பேச்சு வழக்குகளில் செல்வாக்கு உள்ளது. இலங்கையில், அதிக மக்கள் தொகையைக் கொண்ட யாழ்ப்பாணப் பேச்சு வழக்கையே பெரும்பாலான வெளியார் இலங்கைத் தமிழ்ப் பேச்சு வழக்காக இனங்கண்டு கொள்கின்றனர். [5]
[தொகு]வட்டார மொழி வழக்குகள்
முதன்மைக் கட்டுரை: தமிழ் வட்டார மொழி வழக்குகள்
தமிழில் வட்டாரமொழி வழக்குகள், பெரும்பாலும் சொற்களை ஒலிப்பதிலேயே மாறுபடுகின்றன. மற்றும் பல வேறு பழைய செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். எடுத்துக்காட்டாக, "இங்கே" என்ற சொல், தஞ்சாவூர் பகுதிகளில் "இங்க" என்றும், யாழ்ப்பாணம் (இலங்கை) பகுதிகளில் "இங்கை" என்றும் வழங்கப்படுகின்றது. ஆயினும் திருநெல்வேலி பகுதிகளில் "இங்கனெ" என்றும், இராமநாதபுரம் பகுதிகளில் "இங்குட்டு"/"இங்கிட்டு" என்றும் வழங்கும் சொற்கள் "இங்கே" என்ற சொல்லில் கிளைத்தவை அல்லாமல் வேறு செந்தமிழ்ச்சொற்களினின்றும் பிறந்தவையாகும். இங்கனெ என்பது "இங்கணே" அல்லது "இங்கனே" என்பதன் மாற்றமும் "இங்குட்டு"/"இங்கிட்டு" என்பது "இங்கட்டு" என்னும் செம்மொழிச்சொல்லின் மாற்றமும் ஆகும். "கண்" என்னும் சொல்லின் பொருள் இடம் ஆகும். சான்றாகச் சென்னைத் தமிழகராதி: "Place, site; இடம். ஈர்ங்கண்மா ஞாலம் (குறள், 1058)". கட்டு என்னும் சொல்லும் கண் என்பதோடு து-விகுதி சேர்ந்து வழங்கும் சொல்லாகும். கொங்குநாட்டார் இன்றும் "அக்கட்டாலே போய் உட்கார்" என்று சொல்வதைக் கேட்கலாம். "இங்கன்" அல்லது "ஈங்கன்" என்பதும் பழைய இலக்கியங்களில் காண்பவை (சென்னைப்பல்கலைக் கழகத் தமிழகராதி காண்க). இது ஒரே சொல்லே பலவாறு சிதைந்ததாகக் கருதும் கோட்பாட்டைத் திருத்த உதவும்; மேலும் வட்டாரவழக்குகள் பழைய இலக்கியச்சொற்கள் உண்மையிலேயே பேச்சில் வழங்கியதற்கு நல்ல சான்றாகவும் இருப்பதைக் காட்டும்.

பெரும்பாலான வட்டார மொழி வழக்குகளின் சொல் அகராதியில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை என்றாலும், சில வழக்குகள் பெரிதும் மாறுபடுகின்றன. இலங்கையில் பேசப்படும் தமிழின் பல சொற்கள்,தமிழகத்தில் அன்றாட வழக்கில் பயன்படுத்தப் படுவதில்லை. "பாலக்காடு ஐயர்" தமிழில் பல மலையாள சொற்கள் கலந்திருக்கும். சில இடங்களில் மலையாள வாக்கிய அமைப்பும் கானப்படும். இறுதியாக, ஹெப்பர் மற்றும் மாண்டையம் வட்டாரங்களில் பதினோறாம் நூற்றாண்டில் புலம் பெயர்ந்த வைணவ கோட்பாட்டைப் பின்பற்றும் தமிழர்களால் பேசப்படும் தமிழில் வைணவ பரிபாஷையின் எச்சம் காணப்படுகிறது. வைணவ பரிபாஷை என்பது ஒன்பது மற்றும் பத்தாம் நூற்றாண்டுகளில் உருவான வைணவ சமய மரபுகள் மற்றும் பண்புகளை உள்ளடக்கிய மொழி வழக்காகும்.

தமிழ் மொழி வழக்குகள் வட்டார அடிப்படையில் மட்டுமல்லாது சாதி அடிப்படையிலும் வேறுபடும். பல சாதிகளுக்கென தனியான பேச்சு வழக்குகள் இருந்து வந்தன. தற்போது சாதி மறுப்பு இயக்கங்களின் விளைவாக இவ்வேறுபாடுகள் மறைந்து வந்தாலும், ஒருவரின் பேச்சு வழக்கை வைத்து அவரின் சாதியை சில சமயங்களில் கணிக்க முடிகிறது.

எத்னொலோக் Ethnologue என்ற உலக மொழிகள் பற்றிய பதிப்பு நிறுவணம், தமிழில் 22 வட்டார வழக்குகள் இருப்பதாக தெரிவிக்கிறது. அவையாவன ஆதி திராவிடர், ஐயர், ஐயங்கார், அரவா, பருகண்டி, கசுவா, கொங்கர், கொரவா, கொர்சி, மதராஸி, பரிகலா, பாட்டு பாஷை, இலங்கை தமிழ், மலேயா தமிழ், பர்மா தமிழ், தெனாப்பிரிக்கா தமிழ், திகாலு, அரிஜன், சங்கேதி, கெப்பார், மதுரை, திருநெல்வேலி. கொங்கு மற்றும் குமரி ஆவன வேறிரு தெரிந்த வட்டார வழக்குகள்.

புவியியல் தொடர்பான வட்டார வழக்குகள் ஒருபுறமிருக்க, சமுதாய அடைப்படையிலும் பல்வேறு மட்டங்களில் தமிழ் மொழிப் பயன்பாட்டில் வேறுபாடுகளை கவனிக்கலாம். புதிய வழக்காக, தொலைக் காட்சி முதலான தொடர்புச் சாதனங்களும் இன்று பெருமளவுக்கு ஆங்கிலம் கலந்த தமிழைத் தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்துக்கு விட்டுள்ளன. மேனாட்டுக் கல்வி மற்றும் அறிவியல் வளர்ச்சி தொடர்பில் புதிய சொல்லாக்கம், கலைச்சொல்லாக்கம் முதலிய அம்சங்களில் ஒருங்கிணைவு அற்ற முயற்சிகள் வேறுபட்ட மொழி வழக்குகளை உருவாக்கியுள்ளன. முக்கியமாக, இலக்கியம் மற்றும் அது போன்ற பண்பாட்டு மற்றும் மரபுவழிப் பயன்பாடுகளுக்கு அப்பால், கல்வி, அறிவியல், நிர்வாகம் மற்றும் இன்னோரன்ன நவீன துறைகளிலும் தமிழ் பயன்படுத்தப்பட்டுவரும் தமிழ்நாடு, இலங்கை போன்ற நாடுகளில் உருவாக்கப்படும் ஆயிரக்கணக்கான தமிழ்ச் சொற்கள், ஒரு பகுதியினர் பயன்படுத்தும் தமிழை இன்னொரு பகுதித் தமிழர் புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு வேறுபாடுள்ள மொழி வழக்குகள் உருவாகக் காரணமாக உள்ளன.
[தொகு]எழுத்துமுறை



எழுத்துரு மாற்ற வரலாறு
தமிழ் எழுத்து முறைமை ஒலிப்பியல் அடிப்படையிலானது; குறுக்கம், அளபெடை, மற்றும் புணர்ச்சி நெறிகளுக்கு உட்பட்டே எழுத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன. தற்போதைய தமிழ் எழுத்துமுறை தமிழ் பிராமியில் இருந்து தோன்றியது ஆகும். தமிழ் பிராமி காலப்போக்கில் வட்டெழுத்தாக உருமாறியது. ஆறாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் "வட்டெழுத்து" முறை உருவானது. ஓலைச்சுவடிகளிலும், கல்லிலும் செதுக்குவதற்கேற்ப இருந்தது.
வட்டெழுத்தில் சமஸ்கிருத ஒலிகள் குறிக்கப்பட முடியாது என்பதால் சமஸ்கிருத ஒலிகளை எழுதும் பொருட்டு சில கிரந்த எழுத்துமுறை கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தினர். இவ்வெழுத்துக்களைப் பயன்படுத்துவதற்கு மாறாக தொல்காப்பியம் கூறியபடி அச்சொற்களைத் தமிழ்படுத்த வேண்டும் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.
பின்னர், வீரமாமுனிவரின் அறிவுரைப்படி இரட்டைக் கொம்பு போன்ற மாற்றங்கள் செய்யப்பட்டன. 1977 எம். ஜி. இராமச்சந்திரன் ஆட்சியில் அச்சில் ஏற்றுவதை எளிமைப்படுத்தும் வகையில் பெரியாரால் பரிந்துரைக்கப்பட்ட ஆகார மற்றும் ஐகார உயிர்மெய் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்பட்டது. எனினும் பெரியாரது உகர சீர்திருத்தம் செயல்படுத்தப்படவில்லை.
[தொகு]தமிழ் எழுத்துக்கள்


. க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்
அ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ ழ ள ற ன
ஆ கா ஙா சா ஞா டா ணா தா நா பா மா யா ரா லா வா ழா ளா றா னா
இ கி ஙி சி ஞி டி ணி தி நி பி மி யி ரி லி வி ழி ளி றி னி
ஈ கீ ஙீ சீ ஞீ டீ ணீ தீ நீ பீ மீ யீ ரீ லீ வீ ழீ ளீ றீ னீ
உ கு ஙு சு ஞு டு ணு து நு பு மு யு ரு லு வு ழு ளு று னு
ஊ கூ ஙூ சூ ஞூ டூ ணூ தூ நூ பூ மூ யூ ரூ லூ வூ ழூ ளூ றூ னூ
எ கெ ஙெ செ ஞெ டெ ணெ தெ நெ பெ மெ யெ ரெ லெ வெ ழெ ளெ றெ னெ
ஏ கே ஙே சே ஞே டே ணே தே நே பே மே யே ரே லே வே ழே ளே றே னே
ஐ கை ஙை சை ஞை டை ணை தை நை பை மை யை ரை லை வை ழை ளை றை னை
ஒ கொ ஙொ சொ ஞொ டொ ணொ தொ நொ பொ மொ யொ ரொ லொ வொ ழொ ளொ றொ னொ
ஓ கோ ஙோ சோ ஞோ டோ ணோ தோ நோ போ மோ யோ ரோ லோ வோ ழோ ளோ றோ னோ
ஒள கௌ ஙௌ சௌ ஞௌ டௌ ணௌ தௌ நை பௌ மௌ யௌ ரௌ லௌ வௌ ழௌ ளௌ றௌ னௌ

[தொகு]கிரந்த எழுத்துக்கள்
கிரந்த எழுத்துக்கள் தென்னிந்தியாவில், குறிப்பாக தமிழ் நாட்டில் சமஸ்கிருத மொழியை எழுதப் பயன்பட்ட வரி வடிவங்களாகும். தற்காலத்தில் தேவநாகரி எழுத்துக்கள் பிரபலமடைந்ததால் கிரந்த எழுத்துக்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. தமிழில் மணப்பிரவாள எழுத்து நடை செல்வாக்கு செலுத்திய பொழுது கிரந்த எழுத்துக்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டது. இன்று, மணிப்பிரவாள எழுத்து நடை மறைந்தாலும், 'ஜ', 'ஷ', 'ஸ', 'ஹ' ,'க்ஷ' போன்ற கிரந்த எழுத்துக்கள் ஆங்கில மற்றும் அறிவியல் சொற்களையும், வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் குறிக்க பயன்படுத்தப்படுகின்றன.
ஜ ja, ஜா jaa, ஜி ji, ஜீ jii, ஜு ju, ஜூ joo, ஜெ je, ஜே jae, ஜை jai, ஜொ jo, ஜோ joa, ஜௌ jow, ஜ் j
ஷ sha, ஷா shaa, ஷி shi, ஷீ shii, ஷு shu, ஷூ shoo, ஷெ she, ஷே shae, ஷை shai, ஷொ sho, ஷோ shoa, ஷௌ show/shou, ஷ் sh
ஸ Sa, ஸா Saa, ஸி Si, ஸீ Sii, ஸு Su, ஸூ Soo, ஸெ Se, ஸே Sae, ஸை Sai, ஸொ So, ஸோ Soa, ஸௌ Sow, ஸ் S
ஹ ha, ஹா haa, ஹி hi, ஹீ hii, ஹு hu, ஹூ hoo, ஹெ he, ஹே hae, ஹை hai, ஹொ ho, ஹோ hoa, ஹௌ how, ஹ் h
க்ஷ ksha, க்ஷா kshaa, க்ஷி kshi, க்ஷீ kshii, க்ஷு kshu, க்ஷூ kshoo, க்ஷெ kshe, க்ஷே kshae, க்ஷை kshai, க்ஷொ ksho, க்ஷோ kshoa, க்ஷௌ kshow, க்ஷ் ksh
[தொகு]தமிழ் ஒலிப்புமுறை

முதன்மைக் கட்டுரை: தமிழ் ஒலிப்புமுறை

தமிழில் 12 உயிரெழுத்துகளும், 18 மெய்யெழுத்துகளும் உள்ளன. ஒவ்வொரு உயிரெழுத்தும் 18 மெய்யெழுத்துகளோடும் சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துகள் பிறக்கின்றன. இவற்றோடு ஆய்த எழுத்தும் சேர்த்து தமிழ் எழுத்துகள் மொத்தம் 247 ஆகும்.
தமிழில் ஒரு நா சுழற்றி (தகவல்)
நா சுழற்றி வாக்கியம்: "ஏழை கிழவன் வாழைப்பழத்தோல்மேல் சருசருக்கி வழுவழுக்கி கீழே விழுந்தான்."
கோப்பைக் கேட்பதில் பிரச்சினையா? ஊடக உதவியைப் பார்க்கவும்.

[தொகு]உயிர் எழுத்துக்கள்
உயிரெழுத்துக்களில் குறுகிய ஓசையுடைய எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துக்கள்(குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துக்களான ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ ஆகிய எழுத்துக்கள் நெட்டெழுத்துக்கள்(நெடில்) எனவும் வழங்கப்படும்.

குறிலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒரு மாத்திரை நேரத்திலும், நெட்டெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.
குறில் நெடில்
முன் நடு பின் முன் நடு பின்
அண்மை i u iː uː
இ உ ஈ ஊ
இடை e o eː oː
எ ஒ ஏ ஓ
திறந்த a (ai) aː (aw)
அ ஐ ஆ ஒள
[தொகு]மெய் எழுத்துக்கள்
மெய்யெழுத்துக்களில் வன்மையான ஓசையுடைய எழுத்துக்கள் வல்லினம் என்றும், மென்மையான ஓசையுடைய எழுத்துக்கள் மெல்லினம் என்றும், இவை இரண்டிற்கும் இடைப்பட்ட ஓசையுடைய எழுத்துக்கள் இடையினம் என்றும் வழங்கப்படும்.
வல்லினம் : க் ச் ட் த் ப் ற்
மெல்லினம்: ங் ஞ் ண் ந் ம் ன்
இடையினம்: ய் ர் ல் வ் ழ் ள்
மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றும் அரை மாத்திரை நேரத்தில் ஒலிக்கப்படும்
கீழேயுள்ள அட்டவணையில் தமிழ் மெய்யெழுத்துக்கள், அனைத்துலக ஒலிப்பெழுத்துக்களுடனும், ஒலிப்பு வகைகளுடனும் தரப்பட்டுள்ளன.
இதழ் பல் நுனியண்ணம் வளைநா இடையண்ணம் கடையண்ணம்
வெடிப்பு p (b) t̪ (d̪) ʈ (ɖ) tʃ (dʒ) k (g)
ப த ட ச க
மூக்கு m n̪ ṉ ɳ ɲ ŋ
ம ந ன ண ஞ ங
உருட்டு ɾ̪ r
ர ற
மருங்கு l̪ ɭ
ல ள
உயிர்ப்போலி ʋ ɻ j
வ ழ ய
[தொகு]சிறப்பு எழுத்து - ஆய்த எழுத்து


ஆய்த எழுத்து


ஒரு கேடயம்
ஃ - ஆய்த எழுத்து தமிழில் உள்ள ஒரு சிறப்பு எழுத்து ஆகும். ஆய்த எழுத்தைத் தனியே பயன்படுத்துவது அரிது. பழந்தமிழில் பரவலாக ஆய்த எழுத்து பயன்படுத்தப்பட்டாலும், தற்காலத்தில் ஆய்த எழுத்தின் பயன்பாடு அரிதே. சில நேரங்களில் பகரத்துடன் சேர்த்து (ஃப) ஆங்கில எழுத்தான f-ஐக் குறிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. ஆய்த எழுத்தை அஃகேனம் என்றும் அழைப்பர்.
[தொகு]ஒலிப்பியல்
பெரும்பாலான இந்திய மொழிகளைப் போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (aspirated) மெய்யெழுத்துக்கள் கிடையாது. பேச்சில் வழங்கி வரினும், தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (voiced sounds) பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (allophones) அல்ல. தமிழர் பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும், தொல்காப்பியத்தில் ஒரு எழுத்தை எப்பொழுது மிடற்றிலிருந்து ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "த" எனும் மெய்யொலி சொல்லின் முதலில் வரும்பொழுது மிடற்றொலியாகவும், பிற இடங்களில் ஒற்றிரட்டித்தோ, வேறோரு வல்லெழுத்தால் தொடரப்பட்டோ, அல்லது மிடறு நீங்கியோ ஒலிக்கும்.

சொல்லின் முதலில் சகரம் எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்ற நெறியைத் தவிர பிற நெறிமுறைகள் செந்தமிழில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன. கொடுந்தமிழ் அல்லது வழக்குத்தமிழில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப ஒலிப்புமுறை வேறுபடுகிறது. தென்வட்டார வழக்குகளிலும் இலங்கை வழக்குகளிலும் இம்முறை பெரும்பாலும், ஆனால் முழுமையாகவல்லாமல், பின்பற்றப்படுகிறது. வடபகுதி வட்டார வழக்குகளில் ஒலிப்பெயர்வு ஏற்பட்டு ஒலிப்புநெறிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவை தவிர, சமஸ்கிருதம் மற்றும் பிற வடமொழிகளிலிருந்து பெறப்பட்ட சொற்கள் தமிழில் பெரிதும் உள்ளபடியே பயன்படுத்தப்படுகின்றன.

தமிழ் எழுத்தில் ஏன் மிடற்றொலி மற்றும் பிறவொலி வேறுபாடுகள் இல்லையென்ற கேள்விக்கு ஒலிப்பியலாளர்கள் நடுவே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு சாரார் தமிழ் மொழியில் கூட்டுமெய்களும் மிடற்றினின்றொலிக்கும் வல்லெழுத்துக்களோ அடிப்படையில் இருந்ததில்லையென்றும் சொற்புணர்ச்சி மற்றும் குறுக்கத்தினால் மட்டுமே இவ்வொலிகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். அதனால், இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் மற்றும் பிற திராவிட மொழிகளைப் போலன்றி தமிழில் இவ்வொலிகளுக்கென தனியெழுத்துக்கள் தேவைப்படவில்லை என்று கருதுகின்றனர். இக்கருத்திலிருந்து மாறுபட்டு மிடற்றொலிகள் அவற்றையொத்த பிற ஒலிகளின் வகையொலிகளாகவே தமிழில் இருந்துள்ளன என்றும் அதனாலேயே அவற்றிற்கென தனியாக எழுத்துக்குறிகள் இல்லையெனவும் ஒரு கருத்தை சிலர் முன்வைக்கின்றனர்.
தொடர்புடைய கட்டுரைகள்: யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
[தொகு]குறுக்கம்
குறுக்கம் என்பது சில ஒலிப்பியல் கூறுகள் சில குறிப்பிட்ட ஒலிகளையடுத்து வரும்பொழுது தத்தம் இயல்பான ஒலி அளவுகளிலிருந்து குறைந்து ஒலித்தலைக் குறிக்கும். அவை பின்வருவன.
குற்றியலுகரம் - உயிர் உ
குற்றியலிகரம் - உயிர் இ
ஐகாரக் குறுக்கம் - கூட்டுயிர் (diphthong} ஐ
ஔகாரக் குறுக்கம் - கூட்டுயிர் ஔ
ஆய்தக் குறுக்கம் - சிறப்பெழுத்துஃ (ஆய்தம்)
மகாரக் குறுக்கம் - மெய் ம்
[தொகு]எண் குறிகள்
தற்காலத்தில் தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில் உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள் பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி, பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.
0 1 2 3 4 5 6 7 8 9 10 100 1000
௦ ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲
[தொகு]எண் ஒலிப்பு
ஒன்றிற்குக் கீழான அளவுள்ள எண்களும் அதற்குரிய ஒலிப்புச் சொற்களும் கீழுள்ள அட்டவணையில் தரப்பட்டுள்ளன.
எண் அளவு சொல்
1/320 320 ல் ஒரு பங்கு முந்திரி
1/160 160 ல் ஒரு பங்கு அரைக்காணி
3/320 320 ல் மூன்று பங்கு அரைக்காணி முந்திரி
1/80 80 ல் ஒரு பங்கு காணி
1/64 64 ல் ஒரு பங்கு கால் வீசம்
1/40 40 ல் ஒரு பங்கு அரைமா
1/32 32 ல் ஒரு பங்கு அரை வீசம்
3/80 80 ல் மூன்று பங்கு முக்காணி
3/64 64 ல் மூன்று பங்கு முக்கால் வீசம்
1/20 20 ஒரு பங்கு ஒருமா
1/16 16 ல் ஒரு பங்கு மாகாணி (வீசம்)
1/10 10 ல் ஒரு பங்கு இருமா
1/8 8 ல் ஒரு பங்கு அரைக்கால்
3/20 20 ல் மூன்று பங்கு மூன்றுமா
3/16 16 ல் மூன்று பங்கு மூன்று வீசம்
1/5 ஐந்தில் ஒரு பங்கு நாலுமா
1/4 நான்கில் ஒரு பங்கு கால்
1/2 இரண்டில் ஒரு பங்கு அரை
3/4 நான்கில் மூன்று பங்கு முக்கால்
1 ஒன்று ஒன்று

எண் ஒலிப்பு ஒன்றிலிருந்து பிரமகற்பம் எனும் முக்கோடி வரை இருக்கும் அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.
எண் ஒலிப்புச் சொல்
1 ஒன்று (ஏகம்)
10 பத்து (தசம்)
100 நூறு (சதம்)
1000 ஆயிரம்(சகசிரம்)
10,000 பதினாயிரம்(ஆயுதம்)
1,00,000 நூறாயிரம்(லட்சம் - நியுதம்)
10,00,000 பத்து நூறாயிரம்(பிரயுதம்)
1,00,00,000 கோடி
10,00,00,000 அற்புதம்
1,00,00,00,000 நிகற்புதம்
10,00,00,00,000 கும்பம்
1,00,00,00,00,000 கணம்
10,00,00,00,00,000 கற்பம்
1,00,00,00,00,00,000 நிகற்பம்
10,00,00,00,00,00,000 பதுமம்
1,00,00,00,00,00,00,000 சங்கம்
10,00,00,00,00,00,00,000 வெள்ளம்(சமுத்திரம்)
1,00,00,00,00,00,00,00,000 அந்நியம்
10,00,00,00,00,00,00,00,000 மத்தியம்(அர்த்தம்)
1,00,00,00,00,00,00,00,00,000 பரார்த்தம்
10,00,00,00,00,00,00,00,00,000 பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000 பிரமகற்பம் (கோடிக்கோடி-முக்கோடி)
[தொகு]இலக்கணம்

முதன்மைக் கட்டுரை: தமிழ் இலக்கணம்
இலக்கண அடிப்படையில் தமிழ் ஒரு ஒட்டுநிலை மொழியாகும். தமிழில், பெயர் வகை, எண், வேற்றுமை, காலம், போன்றவற்றை விளக்கச் சொற்களுடன் பின்னொட்டுக்கள் சேர்க்கப்படுகின்றன. தமிழின் பொதுவான கருவி மொழியியல் (metalinguistic) சொற்களும் கலைச் சொற்களும் தமிழாகவே உள்ளன.
தமிழ் இலக்கணம் பெருவாரியாக தொல்காப்பியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. தற்கால தமிழ் இலக்கணம் பெரும்பாலும் நன்னூலைத் தழுவியமைந்துள்ளது. பதிமூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நன்னூலில் தொல்காப்பிய நெறிமுறைகள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
தமிழ்ச் சொற்கள் வேர்ச் சொற்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றுக்கு ஒன்று அல்லது பல ஒட்டுக்களைச் சேர்ப்பதன் மூலம் புதிய சொற்கள் உருவாக்கப்படுகின்றன. இம் மொழியில் பெரும்பாலான ஒட்டுக்கள் பின்னொட்டுக்களாகும். பின்னொட்டுக்கள் சொற்களின் இலக்கண வகையில் மாற்றங்களை உண்டாக்குகின்றன அல்லது அவற்றில் பொருளை மாற்றுகின்றன. இவை சொற்களுக்கு இடம், எண், பால், காலம் போன்றவற்றை உணர்த்தும் பொருள்களையும் கொடுக்கின்றன. இவ்வாறு சொற்களுக்கு ஒட்டுக்களைச் சேர்ப்பதில் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடும் கிடையாது. இதனால் தமிழில் பல ஒட்டுக்களைக் கொண்ட நீளமான சொற்கள் இருப்பதைக் காணலாம்.
தமிழில் பெயர்ச் சொற்கள் இரண்டு திணைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை உயர்திணை, அஃறிணை என்பவை. உயர்திணை கடவுளர், மனிதர் என்பவர்களைக் குறிக்கும் சொற்களை உள்ளடக்குகின்றன. ஏனைய உயிரினங்களையும், பொருட்களையும் குறிக்கும் சொற்கள் அஃறிணைக்குள் அடங்குகின்றன. உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பால்களாகவும், அஃறிணை ஒன்றன்பால், பலவின் பால் என இரண்டு பால்களாகவும் வகுக்கப்பட்டுள்ளன. உயர்திணையுள் அடங்கும் ஆண்பால், பெண்பால் என்பன ஒருமைப் பொருளைச் சுட்டுகின்றன. பலர்பால் பன்மைப் பொருளைச் சுட்டுவது மட்டுமன்றி மதிப்புக் கொடுப்பதற்காக ஒருமையாகவும் பயன்படுவதுண்டு.
தமிழில் வேற்றுமைகள் எட்டுவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவை முதலாம் வேற்றுமை, இரண்டாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை, ஐந்தாம் வேற்றுமை, ஆறாம் வேற்றுமை, ஏழாம் வேற்றுமை, எட்டாம் வேற்றுமை எனப் பெயரிடப்பட்டு உள்ளன. இப் பகுப்பு சமஸ்கிருத இலக்கண அடிப்படையிலானது என்றும் இதனால் செயற்கையானது என்றும் தற்கால மொழியியலாளர் சிலர் கூறுகின்றனர்.
[தொகு]சொல் வளம்

பார்க்கவும்: விக்சனரியில் உள்ள தமிழ் சொற்களின் பட்டியல் மற்றும் தமிழ் மொழியிலிருந்து உருவான சொற்களின் பட்டியல்
தமிழ் சொல் வளம் நிறைந்த மொழி. நவீனத் தமிழ்மொழி பழந்தமிழ் மொழியில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்களை இன்னும் பயன்படுத்துகின்றது. இதனால் சற்று பயிற்சியுடன் பழந்தமிழ் இலக்கியங்களை ஒரு தமிழர் படித்து அறிய முடியும். திருக்குறள் போன்ற சிறந்த பழந்தமிழ் படைப்புகள் தமிழர்களால் சிறப்பாக கற்கப்படுவதற்கு இத்தொடர்ச்சியான சொற்பயன்பாடு உதவுகின்றது.

சமஸ்கிருத சொற்கள் தொல்காப்பியர் காலம் முதலே தமிழ் மொழியில் உள்வாங்கப்பட்டு தகுந்த பல தளங்களில் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. சமயம் சார்பான சமஸ்கிருத சொற்பயன்பாடுகள் தமிழில் அதிகம் காணப்படுகின்றன. சமஸ்கிருத உச்சரிப்புக்களைத் தமிழில் உள்வாங்குவதற்கு கிரந்த எழுத்துக்கள் பயன்படுகின்றன.

தமிழின் நீண்ட வரலாற்றில் பல பிறமொழிச்சொற்கள் தமிழில் கலந்து, தமிழ்படுத்தப்பட்டு தமிழை வளமாக்கியுள்ளன. பாரசிக, அரபு போன்ற செம்மொழிகளில் இருந்தும், பிற திராவிட மொழிகளில் இருந்தும், போர்த்துகீசிய, டச்சு, பிரேஞ்சு போன்ற காலனித்துவ மொழிகளில் இருந்தும், இந்தி, சிங்களம், மலாய் போன்ற தமிழருடன் தொடர்புடைய பிற இனங்களின் மொழிகளில் இருந்த்தும், ஆங்கில மொழியில் இருந்தும் தமிழ் மொழிக்கு பல சொற்கள் வந்தடைந்துள்ளன.

பிறமொழிச் சொற்கள் மட்டுப்படுத்தப்பட்டில் இருப்பது தமிழ் மொழியின் தொடர்ச்சிக்கும் தனித்துவத்துக்கும் அவசியம். ஆகையால் பிற மொழிச்சொற்களுக்கு இணையான தமிழ் மொழியின் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்படும் சொற்களை பயன்படுத்துவதே நன்று என்பது பல எளிய தமிழ் ஆதரவாளர்களின் கருத்து. இக்காலத்தில் குறிப்பாக ஆங்கில சொற்களுக்கு இணையான தமிழ் அடிச்சொற்களில் இருந்து உருவாக்கப்பட்ட சொற்கள் பயன்படுத்தப்படவேண்டும் என்பது பல தமிழ் ஆர்வலர்களின் வேண்டுகோளாக அமைகின்றது.
[தொகு]கலைச்சொற்கள்
தமிழ் மொழியில் அறிவியலை படைக்க கலைச்சொல்லாக்கம் முக்கியம். இது தமிழ் மொழியில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் ஒரு செயல்பாடுதான். இக்காலத்தில் தமிழக இலங்கை அரசுகளின் பல்கலைக்கழகங்கள் ஊடாகவும் தமிழ்த் தன்னார்வலர்களாலும் இப்பணி தொடர்கின்றது.
[தொகு]தமிழ்த் தாய் வாழ்த்து

நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமென திகழ்பரத கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற,
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!
பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்து துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள் முன்னிருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாள முந்துளுவும்
உன்னுதரத்தே யுதித்தே யொன்றுபல வாயிடினும்
ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!
-மனோன்மணீயம் பெ. சுந்தரம் பிள்ளை
[தொகு]தமிழ்ப் பற்று

மொழியே உயிர், முதலாவது.
முடிவாவது அதுவே.
முடியாது-
அதை விடவா
சமர் முரசே அறை தமிழா
விழியே மொழி
ஒரு போதிலும்
மிதிகாலிடல் சகியோம்
- முருகையன்
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் உடல்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
பாடையிலே படுத்தூரைச் சுற்றும்போதும்
பைந்தமிழில் அழும் ஓசை கேட்கவேண்டும்
ஓடையிலே என்சாம்பல் ஓடும்போதும்
ஒண்தமிழே சலசலத்து ஓடவேண்டும்
- சச்சிதானந்தம்
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்
பாமரராய், விலங்குகளாய் உலகனைத்தும் இகழ்ச்சி சொலப் பான்மைகெட்டு
நாமமது தமிழெரென கொண்டு டிங்கு வாழ்ந்திடல் நன்றோ- சொல்லீர்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்.
- பாரதியார்
தமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத் தமிழ்
எங்கள் உயிருக்கு நேர்
- பாரதிதாசன்

சீரிளமைச் செம்மொழியேயென் காதலியே
சகமெங்கணு முனைப்போ லொருத்தி
பேரழகாய் உள்ளாளோ இலவேயிலை
பல்லழகும் உனில்கண்டேன் நீவாழியவே!
- கலைமகன் பைரூஸ்
எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதைப் பிறர்மேல் விட மாட்டேன்
- ஞானக்கூத்தன்
நினைத்திடும் மனத்தே நிற்பதும் தமிழே
நீளுநம் மூச்சிலும் தமிழே
முனைத்தபோர் முனையின் முன்னணி மறவர்
முகத்தொளிர் வீரமும் தமிழே
- கலைவாணன்
[தொகு]தமிழ் மொழி ஆய்வு மற்றும் வளர்ச்சி அமைப்புகள்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்
அறிவியல் தமிழ் மன்றம்
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம்
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)
தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
[தொகு]மேலும் காண்க

தமிழ்ப் பெயர்
தமிழ்ப் பிராமி
ஐரோப்பிய மொழிகளில் வழங்கும் தமிழ்ச் சொற்கள்
தமிழ் அகராதி
மதுரைத் திட்டம்
நூலகம் திட்டம்
சென்னை நூலகம்
ஆங்கிலம்
ஆங்கில இலக்கணம்
பிரெஞ்சு
பிரெஞ்சு இலக்கணம்
பழஞ்சொல் (சங்க காலம்)
தமிழில் பிழைகள் தவிர்ப்போம்! (நூல்)
தமிழ் இலக்கணம் (நூல்)
[தொகு]உசாத்துணைகள்

↑ எத்னோலாக்கின் 1996 ம் ஆண்டு அறிக்கை [1] கடைசியாக அணுகப்பட்ட திகதி: பெப்ரவரி 20, 2007.
↑ தொல்காப்பியம் கி.மு. 300 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது என்றதில் இருந்து இந்தக் கூற்றை நிறுவலாம்.
↑ கமில் சுவெலெபில், "Dravidian languages." Britannica Concise Encyclopedia. 2007. Encyclopædia Britannica Online. 7 Sept. 2007"("Relative stability of root vowels seems to have been the rule" "A tendency toward structural and systemic balance and stability is characteristic of the Dravidian group")[2]]
↑ ஐராவதம் மகாதேவன். (2003). Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. கேம்பிறிஜ்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக பதிப்பகம்.
↑ அகழ்வாராய்ச்சி பற்றி இந்து நாளிதளின் பெப்ரவரி 02, 2005 செய்திக் குறிப்பு: "`Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur" [3]
↑ Southworth, Franklin C. (1998), "On the Origin of the word tamiz", International Journal of Dravidial Linguistics 27 (1): 129-132
↑ Zvelebil, Kamil V. (1992), Companion Studies to the history of Tamil literature, Leiden: E.J. Brill at pp. x-xvi.
↑ பர்க்லேயிலுள்ள கலிபோர்னியாப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவரான ஜார்ஜ் எல் ஹார்ட் 2004 ஆண்டில் வெளியிட்ட அறிக்கையை இங்கே காண்க.
↑ குடியரசுத் தலைவரின் பேச்சின்-கூற்று 41 யும், இந்திய அமைச்சரவையின் முறையான அங்கீகாரம் தொடர்பான பிபிசி செய்தியையும் காண்க.
[தொகு]பழங்காலக் குறிப்புகள்
பவநந்தி முனிவர், நன்னூல் மூலமும் விருத்தியுரையும் , (ஏ. தாமோதரன் ed., 1999), உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
பவநந்தி முனிவர், நன்னூல் மூலமும் கூழாங்கைத்தம்பிரான் உரையும் (ஏ. தாமோதரன் ed., 1980). Wiesbaden, Franz Steiner Verlag.
தண்டியாசிரியர், தண்டியாசிரியர் இயற்றிய தண்டியலங்காரம்: சுப்பிரமணிய தேசிகர் உரையுடன். (கு. முத்துராசன் ed., 1994). தர்மபுரி, வசந்த செல்வி பதிப்பகம்.
தொல்காப்பியர், தொல்காப்பியம் இளம்பூரணர் உரையுடன் (1967 மறு அச்சு). சென்னை, TTSS.
[தொகு]தற்காலக் குறிப்புகள்
காங்கேயர். (1840). உரிச்சொல் நிகண்டுரை. புதுவை: குவேரன்மா அச்சுக்கூடம்.
ஐராவதம் மகாதேவன். (2003). Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. கேம்பிறிஜ்: ஹார்வேர்ட் பல்கலைக்கழக பதிப்பகம்.
ரி. நடராசன். (1977). The language of Sangam literature and Tolkappiyam. மதுரை: Madurai Publishing House.
ஜி. யு. போப். (1862). First catechism of Tamil grammar: Ilakkana vinavitai - mutarputtakam. மதுரை: Public Instruction Press.
ஜி. யு. போப். (1868). A Tamil hand-book, or, Full introduction to the common dialect of that language. (3rd ed.). சென்னை: Higginbotham & Co.
வி. எஸ். இராசம். (1992). A Reference Grammar of Classical Tamil Poetry. Philadelphia: The American Philosophical Society.
ஹரால்டு எஃப் ஷிஃப்மன். (1998). "Standardization or restandardization: The case for 'Standard' Spoken Tamil". Language in Society 27, 359–385. [6]
ஹரால்டு எஃப் ஷிஃப்மன். (1999). A Reference Grammar of Spoken Tamil. கேம்பிறிஜ்: கேம்பிறிஜ் பல்கலைக்கழக பதிப்பகம். [7]
ரோன் ஆசர் & இ. அண்ணாமலை. (2002). Colloquial Tamil: The Complete Course for Beginners. Routledge.
[தொகு]வெளி இணைப்புகள்


விக்கி நூல்கள் , பின்வரும் தலைப்பைக் குறித்த மேலதிகத் தகவல்களைக் கொண்டுள்ளது:
Tamil
விக்கி ஊடக நடுவத்தில் இத்தலைப்பு தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன: தமிழ்
[தொகு]பொது
எத்னோலாக்கின் அறிக்கை
ஆம்னிக்லாட் தரவு
ரோஸெட்டா திட்டத் தொகுப்பு
மொழி அருங்காட்சியகத்திலுள்ள உரை
யுசிஎல்ஏ தரவு
வரலாறு மற்றும் பண்புகள் பற்றிய விமர்சனம்
தமிழ் கருத்துக்களம்
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்
தமிழ் மொழி மற்றும் இலக்கியம்
தமிழ் இசை
திருத்தமிழ்
தமிழியல் ஆய்வுக் களம்
முனைவர்.தமிழப்பன் எழுதிய "தமிழுக்கு நேர்ந்த அவமானங்கள்"கட்டுரை
முனைவர் இரா.குணசீலன் எழுதிய "தமிழ் - உயர் தனிச் செம்மொழி!"கட்டுரை
[தொகு]தமிழ் மொழி கற்றுக்கொள்ள உதவும் ஆதாரங்கள்
தமிழ் கற்க வாங்க
யூபென் பாடப் பக்கம் - பென்சில்வேனியா பல்கலைக்கழக இணையவழித் தமிழ்ப்பாடத்தரவுகள்
தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கிய மின் தொகுப்பும் பல பாடங்களும் உள்ளன
தமிழ் இணைய நூலகம் தமிழ் இணைய நூலகம்
தமிழ் சூழலில் தமிழ் கற்றல்
"தமிழ் பாடநூல்"
ஆங்கிலம் மூலம் தமிழ் படித்தல்
மழலைகள்.காம் தமிழ் கற்கும் பகுதி
தமிழில பேசலாம் வாங்க
ஐஐடிஎஸ் - இந்தியவியல் மற்றும் தமிழ்க் கல்விக் கழகம், கோலோன் பல்கலைக்கழகம், ஜெர்மனி
கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகம், பெர்க்ளி
ரெக்சஸ் பல்கலைக்கழகம்
http://www.tamil-online.info/
பகுப்புகள்: தமிழ் | திராவிட மொழிகள் | தமிழியல் | முதற்பக்கக் கட்டுரைகள்
New featuresபுகுபதிகை/பயனர் கணக்கு தொடக்கம்
கட்டுரை
உரையாடல்
வாசிக்கவும்
தொகு
வரலாற்றைக் காட்டவும்

முதற் பக்கம்
சமுதாய வலைவாசல்
நடப்பு நிகழ்வுகள்
அண்மைய மாற்றங்கள்
ஏதாவது ஒரு கட்டுரை
உதவி
நன்கொடைகள்
Embassy
கருவிப் பெட்டி
இப் பக்கத்தை இணைத்தவை
தொடர்பான மாற்றங்கள்
சிறப்புப் பக்கங்கள்
அச்சுக்குகந்த பதிப்பு
நிலையான இணைப்பு
இக்கட்டுரையை மேற்கோள் காட்டு
ஏனைய மொழிகள்

Friday 29 October 2010

குடல் புழுவை வெளியேற்றும் மல்லிகை!

மண‌ம் கமழு‌ம் ம‌ல்‌லி, மதுரை ம‌ல்‌லி எ‌ன்றெ‌ல்லா‌ம் தெ‌ரியு‌ம். ஆனா‌ல் மரு‌த்துவ ம‌ல்‌லியை‌ப் ப‌ற்‌றி உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரியுமா?

தலை‌‌யி‌ல் சூடுவத‌ற்கு‌ம், மாலை அல‌ங்கார‌ங்களு‌க்கு‌ம் பய‌ன்படு‌ம் ம‌ல்‌லிகை‌யி‌ன் மரு‌த்துவ குண‌ங்களை இ‌ப்போது பா‌ர்‌ப்போ‌ம்.

சிலருக்கு வயிற்றில் கொக்கிப் புழு, நாடாப் புழு போன்றவைகள் உருவாகும். இதற்காக பெரிதாக கவலைப்பட வேண்டாம். மல்லிகைப் பூக்கள் சிலவற்றை தண்ணீ‌ரி‌ல் போட்டு கொதிக்க வைத்து, அதனை வடிகட்டி அருந்தி வந்தால் போதும், குடற்புழுக்கள் தானாக வெளியேறிவிடும்.

புழுக்களைத்தான் வெளியேற்றும் என்று நினைக்காதீர்கள், சிறுநீரகக் கற்களையே கரைய வைக்கும் குணம் இந்த மென்மையான மல்லிகைப் பூக்களுக்கு உண்டு. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?
மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.

பொதுவாக மாத விலக்கு காலங்களில் பெண்கள் சோர்வுடன் காணப்படுவார்கள். இனி கவலை வேண்டாம். சில மல்லிகைப் பூக்களை எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் வடிகட்டி அருந்தினாலே போதும் மாத விலக்கு காலங்களில் சோர்வு ‌நீ‌ங்கு‌ம்.

இவை அனைத்திற்கும் மேலாக, மணம் கமழும் மல்லிகையை ஒன்றிரண்டு தினமும் உட்கொண்டால் உடம்பில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என்பது கூடுதல் தகவ

Sunday 3 October 2010

கறிவேப்பிலையும் மருத்துவ குணமும்

>கறிவேப்பிலையும் மருத்துவ குணமும்


குழம்பு, பொரியல், ரசம் என்று எதுவாயிருந்தாலும் தாளிக்கும் போது கறிவேப்பிலையை சேர்த்து சமைப்பது வழக்கம்.

இது ஏதோ வாசனைக்காகச் சேர்க்கப்படுகிறது என்பதைப் போல பெரும்பாலானோர் சாப்பிடும் போது கறிவேப்பிலையை எடுத்து வைத்துவிட்டுச் சாப்பிடுவார்கள்.

ஆனால், அதன் மருத்துவ குணமும் நன்மையும் தெரிந்தால் இப்படி அதை ஒதுக்கமாட்டோம் என்பதே உண்மை.

சளி காரணமாக காய்ச்சல் ஏற்பட்டால் அந்தக் காய்ச்சலை கறிவேப்பிலை இறக்கிவிடும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

கறிவேப்பிலையுடன் சிறிதளவு சீரகம், மிளகு, இஞ்சி சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு உருட்டி சாப்பிட்டு பின் வெண்ணீர் குடித்தால் போதும் விரைவிலேயே காய்ச்சல் குறைந்துவிடும்.

இதுமட்டுமா? சீதபேதியையும் கறிவேப்பிலை நிறுத்தும்.

கறிவேப்பிலையை நன்கு சுத்தம் அரைத்து எலுமிச்சம் அளவு எடுத்து எருமைத் தயிரில் கரைத்து காலையில் மட்டும் வெறும் வயிற்றில் 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் போதும் எப்படிப்பட்ட சீதபேதியும் நின்று விடும்.

மேலும், குடல் இறுக்கம், மூலக்கடுப்பு போன்ற பிரச்சனைகளையும் இது சரிசெய்யும்.

இதுதவிர, கறிவேப்பிலையுடன் சீரகம், புளி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து துவையலாக சாப்பிட்டால், நாக்கு ருசியற்ற தன்மையிலிருந்து மாறி இயல்பான நிலைக்குத் திரும்பும்.

அகத்திக்கீரைக்கு அடுத்து கறிவேப்பிலையில்தான் அதிக சுண்ணாம்புச் சத்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கறிவேப்பிலையை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு தலை முடி நரைப்பதில்லை. ஏனென்றால் முடி கருமையாக இருக்கவும், நரையைத் தடுக்கும் தன்மையும் கறிவேப்பிலைக்கு உண்டு.

Sunday 16 May 2010

தமிழ் ஆண்டும் தமிழ் கணக்கும்.

தமிழ் ஆண்டும் தமிழ் கணக்கும்.




இந்த ஏப்ரல் மாதத்திற்கு சில சிறப்புகள் இருக்கின்றன. ஏபரல் மாத காலந்தேர், ஆங்கிலத்தில் காலண்டர் என்று சொல்கிறோமே அதன் தமிழ் வடிவம்தான் காலந்தேர்! எவ்வளவு அருமையான தமிழ்ச் சொல்!(காலம்+தேர்+காலந்தேர்( Chariot of Time) காலந்தேர் அறிவிக்கும் சிறப்பு தினங்கள் இந்த மாதத்தை ஒரு பொன்மாதம் எனப் பட்டியலிடுகிறது!

ஏப்ரல் 14, தமிழ்ப் புத்தாண்டுப் பிறப்பு நம் தாய்மொழியாம் தமிழ் வழி மலரும் விய வருடப் பிறப்பு! மற்றொன்று ஏப்ரல் 21 பாரதிதாசனின் நினைவு தினம்! இரண்டும் மிக நெருங்கிய தொடர்புடையன என்பது தமிழர்கள் அறிந்த பேருண்மை.. இதிலும் இன்னொரு கூடுதல் சிறப்பு என்னவென்றால் ஏப்ரல் 29 பாரதிதாசனின் பிறந்த நாளும் முகிழ்க்கிறது! சட்ட மேதை முனைவர். அம்பேத்கார் அவர்களின் பிறந்த நாளும் கூட!

ஏப்ரல் - 7 ,உலக சுகாதாரதினம், கிறித்தவர்களின் புனித வெள்ளி ஏப்ரல் 14..! உலக புவி தினம் ஏப்ரல் 22...! குழந்தைத் தொழிலாளர் தினம் ஏப்ரல் - 30ல்! இப்படிப் பல சிறப்புக்களுடன் சித்திரைச் செவ்வானம் மலர்கிறது!

பார்த்திப வருடம் முடிவுற்று விய ஆண்டு துவங்குகிறது. சித்ரபானு துவங்குவதற்கு அடுத்த நாள் அறிவன். அந்த வாரத்தில் ஞாயிறுக்கு முதல் நாள் காரியன்று விடுமுறை நாளாகும். சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, துளி, சிலை என்பது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

இப்படித்தான் தமிழ் பத்தி பேசினாலே நம்மில் பலருக்கு புரிய மாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. யாரையும் குறை சொல்லமுடியாது. தமிழ் பின் புலம் அப்படி. யார் என்ன செய்ய முடியும்? தொடக்கப் பள்ளி துவங்கி கல்லூரி வரை மாணவராகட்டும், போன வருடம் என்ன வருடம் என்று கேட்டுப்பாருங்க? 2005 அப்டீன்னுதான் சொல்லுவாங்க. எத்தனை பேர் தமிழ் வருடத்தைச் சொல்லுவாங்க?

அனேகமா யாரும் சொல்ல மாட்டாங்க. தமிழ் சொல்லிக்குடுக்கிற ஆசிரியர்களிடம் கூட கேட்டுப் பாருங்க? நூத்துக்கு அய்ந்து சதவிகிதம் சொன்னால் அதிகம். இவ்வளவு ஏன்? எந்தத் தமிழ் நாளிதழாவது தமிழ்ல இன்ன வருடம்னோ, தேதின்னோ போடுறது உண்டா? கிடையாது. காரணம் என்ன?

உலகம் முழுக்க ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரே வருடம், மாதம், நாள், கிழமைகளைத் தான் ஏற்றுக் கொண்டு நடைமுறையில் வழக்கத்தில் கொண்டிருக்கிறோம், என்பதுதான் உண்மை. இதில் யாரும் விதிவிலக்கில்லை.

"கரு", " கயரு", " களஉயரு " அப்டீன்னா என்ன? "கரு"ன்னா தெரியும். "கயரு" ன்னா தெரியும். அது என்ன "கள உயரு" இப்படி எல்லாம் சொல்லி எங்கள சோதிக்காதீங்க?! அப்டீங்கிறீங்களா? நீங்க நெனைக்கிற கரு, கயரு இது கிடையாது. இதெல்லாம் தமிழ் எழுத்துக்களில் வரும் தமிழ் எண்கள். காதுல பூ வைக்கிற சமாச்சாரமெல்லாம் இல்லை. ஒரு "கரு" கைமாத்தா கொடேன், என்றால் 12 ரூபா கைமாத்தா கொடேன் என்றுதான் பொருள். அந்தக் காலத் தமிழ்! அதுக்குன்னு இந்தக் காலத்துல, ஒரு "கரு" கைமாத்தா கொடுன்னு கேக்கக்கூடாதவங்ககிட்ட கேட்டால், நல்லா மாத்துதான் கிடைக்கும் இல்லீங்களா? க=1,உ=2,ரு=5,ய=10,ள=100. 15 என்பதை கயரு என்றும் 125 என்பதை களஉயரு என்றே எழுதுவார்கள். தமிழ் எண் வடிவங்களைக் கொண்டு கூட்டல், கழித்தல், வகுத்தல் என்ற கணித முறை நடை முறைப்படுத்துவதில் கடினமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்போது போல கணினி எல்லாம் கிடையாதே. எல்லாம் மனக் கணினிதான்! மனக்கணிப்பில்தான் எல்லாமே... இருந்திருக்கின்றன. மனம் தான் கணினி (கம்ப்யூட்டர்) போல. உள்ளிட்டது (இன்புட்) தான் அப்படியே வரும்.

நமக்கு இந்தத் தமிழ் வேண்டாம்கிறீங்களா? நடைமுறையிலிருக்கிறதே நல்ல தமிழ்தான் என்ற முடிவுக்குச் சட்டென்று வந்துவிடுவோம். சரி... தமிழ் ஆராய்ச்சிய அப்பறமா வச்சுக்குவோம். "பார்த்திப" என்ற கடந்தவாண்டு முடிவடைந்து "விய" ஆண்டு புலருகிறது. பஞ்சாங்க கணிப்புகளின்படி இவ்வாண்டு பெரிய மாற்றங்கள் ஏதும் ஏற்படப் போவதில்லை. ஆகவே நல்ல ஆண்டாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறதாம். தமிழ் ஆண்டுச் சுழற்சியில் இருபதாம் ஆண்டு இவ்வாண்டு!

அக்காலத்தில் சூரியனே பூமியை அல்லது மேருவைச் சுற்றி வருவதாக நம்பினார்கள். ஆகவே சூரியன் ஒருமுறை சுற்றிவரும் கால அளவு என்றே கருதினார்கள். இதனை சூரியனின் பெயரால் சௌரமான ஆண்டுக்கணிப்பு என்று அழைத்தார்கள். இது 365.25+++ நாள்கால அளவு கொண்டது. சௌரமான மாதங்கள் சாந்திரமான மாதப்பெயர்களையும் முக்கிய திதிகளையும் பெற்றுக்கொண்டன. செளரமான மாதங்கள் வானத்து விண்மீன்களின் அதாவது நட்சத்திரங்களின் பெயர்கள் கொண்டே நிர்ணயித்தனர். தமிழ் மாதப் பிறப்பும் அதனையொத்து அமையும் ஆண்டுப் பிறப்பும் கதிரவனின் இயக்கத்தைக் கொண்டே நம் முன்னோர் கணித்து, சூரியன் தன் பயணத்தை மேஷ ராசியில் காலடி வைத்து உட் புகுகின்ற பொன் நாளே தமிழ்ப் புத்தாண்டின் துவக்க நாளாக அமைத்துள்ளனர்.

இன்னொன்றில் சந்திரன் பூமியைச் சுற்றும் காலத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு அமாவாசையில் இருந்து மறு அமாவாசை வரைக்கும் கொண்ட கால அளவு. இது 29.5 நாள்களைக் கொண்டது. ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்துடன் சந்திரன் கூடியிருக்கும் போதே முழு நிலவு ஏற்படும். ஆகவே ஒவ்வொரு சாந்திரமான மாதமும் அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்தின் பெயரேலேயே அழைக்கப்படலாயிற்று. சித்திரை, வைகாசி என்றெல்லாம் அப்படித்தான் ஏற்பட்டன.

பழங்காலத்திலேயே சௌரமானத்தையும் சாந்திரமானத்தையும் இணைத்து விட்டார்கள். இதன்படி தமிழ் மாதங்களை

சித்திரை - மேட ஞாயிறு
வைகாசி - இடப ஞாயிறு
ஆனி - மிதுன ஞாயிறு
ஆடி - கடக ஞாயிறு
ஆவணி - சிங்க ஞாயிறு
புரட்டசி - கன்னி ஞாயிறு
ஐப்பசி - துலா ஞாயிறு
கார்த்திகை - விருச்சிக ஞாயிறு
மார்கழி - தனு ஞாயிறு
தை - மகர ஞாயிறு
மாசி - கும்ப ஞாயிறு
பங்குனி - மீன ஞாயிறு

- என்றும் வழக்கத்தில் கொண்டிருந்திருக்கின்றனர்.

அடுத்து ஆண்டு கணக்கிடும் முறையில், அறுபது ஆண்டுகளுக்கு பெயர் சூட்டி, 60 ஆண்டுகள் ஆனதும் அந்தப் பெயர்களையே திரும்பவும் பயன்படுத்தும் சுழற்சி முறை இடைக்காலத்தில் புகுந்த வைதீக வழிபாட்டு முறையாகும். இந்தப் பற்சக்கர முறையில் உள்ள அறுபது ஆண்டுகளுக்கு வழங்கிய கணக்கு ஆபாசக் கணக்கு! அதற்கு முன் விக்கிரமன் சகாப்தம், சாலி வாகன சகாப்தம், போன்று ஆண்டுகளைத் தொடர்ச்சியாக எண்ணிக் குறிக்கும் முறையே இருந்திருக்கிறது. வைதிக முறையில் அமையும் பிரபவ, விபவ முதலான ஆண்டுப் பெயர்கள் தமிழ்ப் பெயர்களும் அல்ல; வரலாற்று அறிவு பெறவும், காலம் கணக்கிடவும் ஏற்றதுமல்ல; இருந்த போதும் வடமொழியை வாயிலாக வைத்து பிரசவித்த வருடங்களைத்தான் தமிழ் வருடங்களாகப் பாவித்து வருகிறோம் என்பது மிகக் கசக்கும் உண்மை. தமிழாண்டுப் பெயர்கள் அனைத்தும் சமஸ்கிருதம். தற்போது நடை முறையில் உள்ள தமிழாண்டு 21 வது ஆண்டாகும்.

திருவள்ளுவராண்டு.....!

திருவள்ளுவர் ஆண்டு என்று தமிழ் நாட்டரசு சொன்னாலும் அது இன்னும் மக்களிடம் நடைமுறையில் இல்லை. யாரும் நான் திருவள்ளுவர் ஆண்டு 1900ல் பிறந்தேன் என்று சொல்லிக் கொள்வதில்லை. கல்யாணப் பத்திரிகைகளில் கூட திருவள்ளுவர் ஆண்டு வரிசையைப் பயன்படுத்துவதில்லை. நம்மிடமும் பன்னிரண்டு ஆண்டுகள் கொண்ட வட்டமொன்று இருக்கிறது. இப்போது அது வழக்கில் இல்லை. அதனை இப்போது மாமாங்கம் என்று குறிப்பிடுகிறோம்.

தூரகிழக்கு தென்கிழக்காசிய நாடுகள் அனைத்துக்குமே சொந்த காலந்தேர்கள் (காலண்டர்கள்) இருக்கின்றன.

ஜாவாவில் சக ஆண்டு.

ஜப்பானில் சக்கரவர்த்தி வம்சத்தின் தொடக்கம்.

தாய்லந்தில் பௌத்த ஆண்டு.

சீனாவுக்கு கான்பூஷியஸ் ஆண்டு, தாஓ ஆண்டு முதலியவை.

இருப்பினும் சீனாவில் அதிகம் பயில்வது கிரெகோரியன் காலண்டர்தான். வியாழன் / குரு பன்னிரண்டு ராசிகளிலும் சஞ்சரித்து மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வரும் கால அளவு ஒரு மாமாங்கம்.

மனித வாழ்க்கையில் ஒரு மாமாங்கம் என்பது முக்கியமான அளவுகோல்.

பன்னிரண்டு வயதில் திருமணம் செய்வார்கள். தமிழருக்கு தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிக்கும் முறை இல்லா நிலை நீக்க தமிழறிஞர்கள், சான்றோர் புலவர் பெருமக்கள் 1921ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தனர். தமிழ்க்கடல் மறைமலையடிகள் தமிழ்தென்றல் திருவிக., தமிழ்க்காவலர் சுப்பிரமணிய பிள்ளை, சைவப் பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர்.ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பொ.விசுவநாதம் ஆகியோர் உட்பட்ட தமிழ்ப் பேராளர்கள் இதில் கலந்து கொண்டு தொடர்ச்சியாக ஆண்டுக் கணக்கு மேற்கொள்ளத் தமிழர்கள் குறிக்கும் வகையில் திருவள்ளுவர் பிறந்த ஆண்டைத் தீர்மானித்தது. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு.31 என்றும் முடிவு செய்தனர். வள்ளுவராண்டு என்று அவர்கள் கணித்திருப்பது கூட தவறான கணிப்புத்தான் என்று சொல்லுவாரும் உண்டு.

1971ல் தமிழக அரசு நாட்குறிப்புகளில் திருவள்ளுவராண்டு இடம் பெறத் துவங்கியது; 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும், 1981லிருந்து தமிழ்நாடு அரசு அலுவலகங்களிலிலும் திருவள்ளுவராண்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. பொதுமக்கள் பயன்படுத்துமாறு அரசால் அறிவுறுத்தப் படவில்லை. மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் 50ஆண்டுகள் அயராது ஆராய்ச்சி செய்து சித்திரை முதல் பங்குனி வரை உள்ள 12 மாதங்கள் பெயர்கள் தமிழோடு தொடர்புடையது அல்ல என்று அடித்துக் கூறி, "சுறவம், கும்பம், மீனம், மேழம், விடை, இரட்டை, கடகம், மடங்கல், கன்னி, தலை, துளி, சிலை" ஆகிய 12 மாதப் பெயர்களையும் ஞாயிறு, திங்கள், செவ்வாய், அறிவன், வியாழன், வெள்ளி, காரி என்று ஏழு கிழமைகளுக்கான தமிழ்ப் பெயர்களையும் தமிழர்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறினார்.

செய்யத்தக்கவை என்று சான்றோர் பெருமக்கள் புகழ்ந்து கூறியவைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்து சோர்ந்தோருக்கு எப்போதும் நன்மை இல்லை என்பது அய்யன் வள்ளுவனின் வேதவாக்கு.

"புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - 538 எனவே தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றின் நலனும் வளனும் நாடுவோர் திருவள்ளுவராண்டை உபயோகிப்பர்.

கிமுக்களில்.....

பொதுவாக ஆண்டுக் கணக்கு நம் முன்னோர்களால் எப்படி எப்படியோ கணக்கிடப்பட்டு பின்பற்றப்பட்டு வந்திருந்தாலும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அதாவது 3102 லிருந்து ஒரு ஒழுங்கு செய்யப்பட்டு வரையறுக்கப்பட்ட ஆண்டுக் கணக்கு கடைப்பிடிக்கப் பட்டு வந்திருப்பதை அறிய முடிகிறது. ஆண்டுக் கணக்கை "அப்தம்" என்று வழங்கி வந்திருக்கின்றனர். கி.மு.3102 லிருந்து தொடங்கப்படுவதை "கலியப்தம்" என்று நெறிப்படுத்தப்பட்டு நடப்பிலிருந்தது. தமிழர்களிடம் மட்டுமல்லாது சில பண்டைய இனங்களான மாயா, சுமேரியன் ஆகியோரிடமும் இருந்து வந்திருக்கிறது. இதன் பின்னர் பல அப்தங்கள் ஏற்பட்டன.

விக்கிரமாதித்தன் பெயரால் தோன்றியது. விக்ரமாப்தம் அல்லது விக்ரமாங்க சகாப்தம் ஆகும். கி.பி. 78ல் ஏற்பட்டது "சக சகாப்தம்"ஆகும். இதுதான் பாரதத்தின் பெரும் பகுதியிலும் தென்கிழக்காசியா பகுதிகளிலும் பரவியது. இன்றும் பயன் படுத்தப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

வராலாற்றுப் பழமையுடைய, அராபியர்களூம், சீனர்களும் சந்திரனை அடிப்படையாக வைத்து ஒரு பவுர்ணமியிலிருந்து இன்னொரு பவுர்ணமி வரை கொண்ட 28 நாட்களை ஒருமாதம் என்று கணித்திருந்தனர். இந்த முறையில் கோள் சுழற்சிக் கணிப்பை வரையறுப்பதில் குழப்பம் ஏற்படவே சீனப்பேரரசர் கணியர்களைத் தூக்கிலிட்டதாகவும் அதன் பின் தமிழ்க் கணியர்களைச் சீன நாட்டுக்கு அழைத்து நம் முறையில் கணிதம் பயிற்றுவிக்கச் செய்ததாக சீன வரலாற்றுக் குறிப்புகள் அதிர்ந்து தெரிவிக்கிறது.

தமிழ் எண் வடிவங்களைக் கொண்டு கூட்டல், கழித்தல், வகுத்தல் என்ற கணித முறை நடை முறைப்படுத்துவதில் கடினமாகத்தான் இருந்திருக்க வேண்டும். இப்போது போல அந்தக் காலத்தில் கணினி எல்லாம் கிடையாதே. எல்லாம் மனக் கணினிதான்! மனக்கணிப்பில்தான் எல்லாமே... இருந்திருக்கின்றன. மனம் தான் கணினி.

மில்லியனும், பில்லியனையும் அன்றைய தமிழன் கணக்கிட்ட முறையைப் பாருங்கள்!

10 கோடி .. 1 அற்புதம்
10 அற்புதம் .. 1 நிகற்புதம்
10 நிகற்புதம் .. 1 கும்பம்
10 கும்பம் .. 1 கணம்
10 கணம் .. 1 கற்பம்
10 கற்பம் .. 1 நிகற்பம்
10 நிகற்பம் .. 1 பதுமம்
10 பதுமம் .. 1 சங்கம்
10 சங்கம் .. 1 வெள்ளம் அ சமுத்திரம்
10 வெள்ளம் .. 1 அந்நியம் அ ஆம்பல்
10 அன்னியம் .. 1 மத்தியம் அ அர்த்தம்
10 மத்தியம் .. 1 பரார்த்தம்
10 பரார்த்தம் .. 1 பூரியம்

தற்போது புழங்கும் தசம எண்வரிசை இந்தியாவில் கருவாகி உருவாகிப், பின் அரேபிய நாடுகளின் வழியே ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றது என்பது எண்ணியல் அறிஞர் கருத்தாகும். வானவியலில் மிகுந்த முன்னேற்றமடைந்திருந்த இந்தியாவில் மிகப் பெரிய எண்களுக்கும் தேவையிருந்தது. குப்பையைக் கிளறியதில் கிடைத்தது இது:-

விந்தம் - 64,00,000
நியுதம் - மில்லியன்
மகாகும்பம் - பில்லியன்
கற்பம் - பத்து பில்லியன்
கடல் - பத்தாயிரம் பில்லியன்
பரார்த்தம் - ஒரு லட்சம் பில்லியன்
நிகற்பம் - பத்து டிரில்லியன்
மகாகிதி - ஓராயிரம் டிரில்லியன்
மகாகோணி - பத்து டிரில்லியன்
மகாக்ஷக்தி - ஆயிரம் டிரில்லியன்
சோபம் - பத்தாயிரம் டிரில்லியன்
சாகரம் - பத்து குவாடிரில்லியன்
மகாசாகரம் - 18 சாகரம்
மகாசோபம் - நூறாயிரம் டிரில்லியன்
மகாபூரி - பத்து குவின்டில்லியன்

கீழ்க்கண்ட மிகப்பெரிய எண்களை தமிழர்கள் புழக்கத்தில் புரள விட்டுள்ளனர். ஆனால் அவை எதைக் குறிப்பிட்டன என்பதை தமிழறிஞர்கள் கருத்துரைத்தால் என் போன்ற அரை குறைகளும் நிறையத் தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கும்!

மகாதோரை
மகாநிகற்பம்
மகாமகரம்
மகாவரி
மகாவற்புதம்
மகாவுற்பலம்
பிரம்மகற்பம்
கமலம்
பல்லம்
பெகுலம்
தேவகோடி
விற்கோடி
மகாவேணு
தோழம்
பற்பம்
கணனை
தன்மனை

அபிதான சிந்தாமணி சொல்லும் எண்ணின் வகுப்பு (36 வகை):

ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பதினாயிரம், இலக்கம், பத்திலக்கம், கோடி, பத்துக்கோடி, நூறுகோடி, அர்ப்புதம், கர்வம், மகாகர்வம், பதுமம், மகாபதுமம், சங்ம, மகாசங்கம், §க்ஷ¡ணி, மகா§க்ஷ¡ணி, க்ஷதி, மகாக்ஷதி, க்ஷோபம், மகாக்ஷோபம், பரார்த்தம், சாகரம், பரதம், அசிந்தியம், அத்தியந்தம், அனந்தம், பூரி, மகாபூரி, அப்பிரமேயம், அதுலம், அகம்மியம், அவ்வியத்தம்.

இது தவிர யுகக்கணக்கு, தெய்வத்துள் வைக்கப்பட்டவர் (வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து) வயதுக் கணக்கு, வான் கணக்கு, நிலக் கணக்கு, நுணுக்கக் கணக்கு, பின்னக் கணக்கு (முந்திரி?), என்றெல்லாம் இருந்துள்ளன.

காரி நாயனார் கணக்கதிகாரத்தில் கொஞ்சம் காணலாம். தமிழர்களின் பழைய கணக்கீட்டு முறைகள் மிகவும் வியப்பானவை. மிகவும் நுட்பமான கணக்கீட்டு முறை அவர்களிடமிருந்தது. நுண்மையான அளவுகளிலிருந்து பெரிய அளவுகளை விரிவாய்க் கணக்கிட்டனர். அவர்களின் நீட்டல் அளவு முறையைக் கொஞ்சம் பாருங்களேன்.

8அணு - 1தேர்த்துகள்
8தேர்த்துகள் - 1பஞ்சிழை
8பஞ்சிழை - 1மயிர்
8மயிர் - 1நுண்மணல்
8நுண்மணல் - 1கடுகு
8கடுகு - 1நெல்
8நெல் - 1பெருவிரல்
12பெருவிரல் - 1சாண்
2சாண் - 1முழம்
4முழம் - 1கோல்(அ)பாகம்
500கோல் - 1கூப்பீடு

தமிழர்களிடம் வணங்குவது, வழிபடுவது, எழுதுவது, பேசுவது மிகுதியாகவும் போற்றுவது, பின்பற்றுவது, பரப்புவது, செயல்படுத்துவது குறைவாகவும் இருக்கின்றன. தனித்தனியாக உயரும் பண்பாடு மிகுதியாகவும், கூட்டாக் ஒன்று சேர்ந்து உயரும் பண்பாடு குறைவாகவும் உள்ளன. தனி மரம் தோப்பாகாது என்பது முதுமொழி!

தமிழ்ப் புத்தாண்டு மலரும் பொன் காலைப் பொழுதில் தமிழர்கள் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து தூய ஆடை அணிந்து கதிரவனை வணங்குகின்றனர். சிலர் தங்கள் குலதெய்வம் குடி கொண்டிருக்கிற கோவில்களுக்குச் சென்று வழிபடுகின்றனர். விசேச ஆராதனை, அபிசேகங்கள் செய்து வழிபடுகின்றனர். அதே நேரத்தில் வீட்டில் உள்ள பெரியோர்களிடம் ஆசி பெறுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் வீட்டு உபயோகத்திற்கு ஒரு புதிய பொருளை வாங்கி அளிக்கின்ற பழக்கமும் சிலரிடம் காணப்படுகிறது.

புத்தாண்டுக் காலையில் திருக்கோயில்களில் பஞ்சாங்கம் வாசிக்கிற பழக்கமும் கடைப் பிடிக்கப்படுகிறது. பஞ்சாங்கம் வாசிப்பதிலும் நம் முன்னோர்கள் ஒருவித அர்த்தம் உள்ளடக்கி வைத்துள்ளனர். பஞ்சாங்கம் என்பது பஞ்ச... அங்கம் என்ற இரு தனிச் சொல்லின் சொற் சேர்க்கையாகும். இதன் பொருள்:

அய்ந்து உறுப்புக்களான வாரம் அல்லது கிழமை, திதி, நட்சத்திரம், யோகம், கரணம் என்னும் அய்ந்து உறுப்புக்களைக் கொண்டது. வாரம் அல்லது கிழமை என்பது நாளைக் குறிக்கும். இது அடுத்தடுத்து வருவதால் பஞ்சாங்கத்தில் முதலிடம் பெறுகிறது. கிழமைக்கு உரிமை என்று பொருள்.

ஞாயிறு ( சூரியன் ) திங்கள் ( சந்திரன் ), செவ்வாய் ( மார்ஸ் எனப்படும் செவ்வாய்க் கிரகம் ), புதன் ( மெர்க்குரி), வியாழன் ( ஜூப்பிடர் ), வெள்ளி ( வீனஸ் ), சனி ( சாட்டர்ன் எனும் சனிக் கிரகம்) எனும் ஏழு கிரகங்களின் பிரதிபலிப்பாகத்தான் வாரத்தின் ஏழு நாட்களைப் பெயர் சூட்டி வழக்கில் கொண்டு வந்துள்ளனர் நம் முன்னோர் என்பதை நம்மில் பலர் அறிவோம்.

தமிழ் மாதப் பிறப்பும் அதனையொத்து அமையும் ஆண்டுப் பிறப்பும் கதிரவனின் இயக்கத்தைக் கொண்டே நம் முன்னோர் கணித்து, சூரியன் தன் பயணத்தை மேச ராசியில் காலடி வைத்து உட் புகுகின்ற பொன் நாளே தமிழ்ப் புத்தாண்டின் துவக்க நாளாக அமைத்துள்ளனர்.

தமிழ்ப் புத்தாண்டு புலருகிற நாளுக்கு முன் தினம் இரவு தங்கள் படுக்கையறையில் நிலைக் கண்ணாடி முன்பாக ஒரு வெள்ளித் தட்டில் அல்லது சுத்தமான தட்டில் பலவகையான பழங்கள், தங்கள் வீட்டில் உள்ள பணம்... காசுகள், நகைகள் போன்றவற்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப வைத்து விடுவார்கள். காலையில் துயில் நீங்கி எழும்போது அந்தத் தட்டின் எதிரேயுள்ள கண்ணாடியில் பார்வை பதிய கண் விழிப்பார்கள். இப்படிச் செய்வதால் அந்தப் புத்தாண்டில் செல்வம் குறைவிலாது கிடைக்கும் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. தமிழகத்தில் இந்தப் பழக்க வழக்கம் பெரும்பாலான இந்துக் குடும்பங்களில் நிலவுவதை இன்றும் காண முடியும்.

தீபாவளி, பொங்கல் போல் தமிழ்ப் புத்தாண்டு அவ்வளவாகச் சிறப்பாகக் கொண்டாடப் படுவதில்லை. கோயில்களில் பஞ்சாங்கத்தைப் படித்து வரும் ஆண்டின் பலன்களைக் கூறுவார்கள். பெரும்பாலவர்கள் கோயில்களுக்குச் செல்வர். ஒரு சிலர் புத்தாடைகள் உடுத்திச் செல்வர். வீடுகளில் எளிமையான வகையில் வழிபாடுகளுடன் சைவ உணவு வகைகளை உண்டு மகிழ்வர்.

தமிழகத்திலிருந்து வெளிவரும் பிரபலமான நாளிதழ்கள் எதிலும் தமிழ் ஆண்டு குறிப்பிடப் படுவதில்லை; சிங்கப்பூரில் வெளிவரும் தமிழ் முரசு என்ற ஒரே ஒரு பத்திரிக்கையில் தமிழ் ஆண்டு, மாதம் என்று பிரசுரிக்கப்படுகிறது. மலேசியாவிலிருந்து பல பத்திரிக்கைகள் வெளி வருகின்றது. அவற்றில் தமிழ் நேசன் மட்டும் திருவள்ளுவராண்டு 2037, பார்த்திப ஆண்டு மாசி... தேதி எனவும் ஹிஜ்ரி 1427 மாதம், தேதி என முதல் பக்கத்தில் வெளியிடுவதைக் குறிப்பிடலாம்.

நாளும் கோளும் எப்டி இருந்தாலும் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அமைவது அறிவு ஒன்றுதான். அறிவு வளர்ச்சிக்கு ஊன்று கோலாக அமைவது கல்வி. நம்மைக் கரை சேர்க்க வல்லது கல்வி மட்டுமே. புலம் பெயர்ந்து வாழும் பெரும்பாலான தமிழர்கள் இல்லங்களில் தமிழ் தவிர்க்கப் படுகிறது. இந்தப் புத்தாண்டு தினத்திலிருந்தாவது அன்று முழுக்க வீட்டிலும் தமிழிலேயே பேசுங்கள். தங்கள் குழந்தைகளுக்கு ஒரு பாரதியையோ, வள்ளுவனையோ அறிமுகப் படுத்துங்கள். இந்தப் புத்தாண்டிலிருந்தாவது நாள்தோறும் குழந்தைகளுக்கு சில ஆங்கிலச் சொற்களுக்கான தமிழ் சொற்களை தவறாமல் சொல்லிக் கொடுங்கள். மெல்லத் தமிழ் இனி.... வெல்லத் தமிழாய் இனிக்க இனிக்க இல்லங்களில் மலர்ந்து மணம் பரப்பட்டும்.

என்ன? உங்களிடம் தமிழ் நாள்காட்டி இல்லையென்ற கவலையா? கவலையை விடுங்கள்; இந்தச் சுட்டியை சொடுக்கினால் நாள், நட்சத்திரம், நல்ல நேரம் சகலத்தையும் பார்க்கலாம்!



அறுபதாண்டுப் பட்டியல்...! தமிழ் வருட பெயர்கள் ஆங்கில ஆண்டு

1 பிரபவ 1987--1988
2 விபவ 1988--1989
3 சுக்ல 1989--1990
4 பிரமோதூத 1990--1991
5 பிரசோர்பத்தி 1991--1992
6 ஆங்கீரச 1992--1993
7 ஸ்ரீமுக 1993--1994
8 பவ 1994--1995
9 யுவ 1995--1996
10 தாது 1996--1997
11 ஈஸ்வர 1997--1998
12 வெகுதானிய 1998--1999
13 பிரமாதி 1999--2000
14 விக்கிரம 2000--2001
15 விஷ¤ 2001--2002
16 சித்திரபானு 2002--2003
17 சுபானு 2003--2004
18 தாரண 2004--2005
19 பார்த்திப 2005--2006
20 விய 2006--2007
21 சர்வசித்து 2007--2008
22 சர்வதாரி 2008--2009
23 விரோதி 2009--2010
24 விருத்தி 2010--2011
25 கர 2011--2012
26 நந்தன 2012--2013
27 விஜய 2013--2014
28 ஜய 2014--2015
29 மன்மத 2015--2016
30 துன்முகி 2016--2017
31 ஹேவிளம்பி 2017--2018
32 விளம்பி 2018--2019
33 விகாரி 2019--2020
34 சார்வரி 2020--2021
35 பிலவ 2021--2022
36 சுபகிருது 2022--2023
37 சோபகிருது 2023--2024
38 குரோதி 2024--2025
39 விசுவாசுவ 2025--2026
40 பிராபவ 2026--2027
41 பிலவங்க 2027--2028
42 கீலக 2028--2029
43 செளமிய 2029--2030
44 சாதாரண 2030--2031
45 விரோதிகிருது 2031--2032
46 பரிதாபி 2032--2033
47 பிரமதீச 2033--2034
48 ஆனந்த 2034--2035
49 ராட்சச 2035--2036
50 நள 2036--2037
51 பிங்கள 2037--2038
52 காளயுக்தி 2038--2039
53 சித்தார்த்தி 2039--2040
54 ரெளத்திரி 2040--2041
55 துன்மதி 2041--2042
56 துந்துபி 2042--2043
57 ருத்ரோத்காரி 2043--2044
58 ரக்தாட்சி 2044--2045
59 குரோதன 2045--2046
60 அட்சய 2046--2047










.