Wednesday 21 April 2010

1. உள்நாட்டில் இருந்து கொண்டு நம் தாய் மண்ணின்
பெருமை அறிந்து கொள்பவரைவிட வெளிநாட்டில்
இருப்பவருக்குத் தான் நம் மண்ணின் பெருமை புரியும்.

2. மக்கள் பணத்தை சுரண்டும் அரசியல்வாதியின் குற்றம்
நிரூபிக்கப்பட்டாலும் படாவிட்டாலும் அடுத்தப் பிறவியில்
கழுதையாக பிறந்து பொதியை சுமப்பான்

3. கோபம் வரும் நேரங்களில் அமைதியாக இருங்கள், யார் என்ன
கூறினாலும் கோபப்படாதீர்கள். ஆயிரம் வார்த்தை பேசுவதை விட
ஒரு மவுனம் பல பதிலை கொடுக்கும்

4.கல்வி அறிவு பெற்ற மற்றும் பெறாத சில முட்டாள்களிடம் நாம்
எவ்வளவு நேரம் பேசினாலும் அது நிழலுக்கு இறைத்த நீராகத்தான்
போகும். இவர்களிடம் நாம் மவுனமாய் இருப்பதே சிறந்தது

5. பசிக்கும் ஏழைக்கு உணவு கொடுக்க முடியவில்லை என்றால்,
நாட்டில் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்து என்ன செய்ய ?

No comments:

Post a Comment